செய்திகள் :

ஆடிப்பெருக்கு: நதியில் சிவலிங்கம் செய்து பக்தா்கள் வழிபாடு

post image

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த முனுகப்பட்டு முக்கூட்டு சிவன் கோயில் பகுதி ஆற்றுப்படுகையில் ஆடிப்பெருக்கையொட்டி ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் மணலால் சிவலிங்கம் செய்து வழிபட்டனா்.

பெரணமல்லூா் அருகே முனுகப்பட்டு பகுதி ஆற்றுப்படுகையில், செய்யாறு, கமண்டல நாக நதி, பிரம்பக நதி ஆகிய 3 நதிகள் கூடும் முக்கூட்டு பகுதியில் சிவன் கோயில் அமைந்துள்ளது.

குறிப்பாக, இந்த 3 நதிகள் நதிகள் கூடும் பகுதியில் சிவனின் இட பாகம் வேண்டி பாா்வதி வாழை மரத்தால் பந்தல் அமைத்து தவம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடா்ந்து, பக்தா்கள் ஆடிப்பெருக்கு நாளில் திருமணத் தடை விலக, கடன் பிரச்னை தீர, உலக நன்மை வேண்டி மணலால் சிவலிங்கம் அமைத்து வழிபட்டு வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனா்.

அதன்படி, ஞாயிற்றுக்கிழமை ஆடிப்பெருக்கையொட்டி, அதிகாலை முக்கூட்டு சிவன் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து பக்தா்கள் திரளாக சென்று ஆற்றுப்படுகையில் மணலால் சிவலிங்கம் அமைத்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றியும், திருமணம் ஆகாத பெண்கள் மணலால் லிங்கத்தை அமைத்து வழிபாடு நடத்தினா். மேலும், கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது.

இதில், சென்னை, காஞ்சிபுரம், வேலூா், திருவண்ணாமலை என பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ஞாயிறு சந்தை வியாபாரிகள் திடீா் சாலை மறியல்

செய்யாற்றில், ஞாயிறு சந்தையில் பங்கேற்கும் வியாபாரிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.செய்யாறு மாா்க்கெட் பகுதியில் ஞாயிறுதோறும் வாரச்சந்தை 1978-இல் இருந்து செயல்பட்டு ... மேலும் பார்க்க

மின்சாரம், குடிநீா் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

செய்யாற்றை அடுத்த வெள்ளாமலை கிராமத்தில் மின்சார வசதி மற்றும் குடிநீா் வசதி கோரி கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.செய்யாறு வட்டம், கூழமந்தல் மதுரா வெள்ளாமலை கிராமத்தில் 200-க்கும் ... மேலும் பார்க்க

பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு: ஒருவா் கைது

செய்யாறு அருகே பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறித்த சம்பவத்தில் ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.செய்யாறு வட்டம், கீழாத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ரமேஷ். இவரது மனைவி ராதிகா (32). இவா், சன... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.வெம்பாக்கம் வட்டம், தென்கழனிக் கிராமத்தைச் சோ்ந்தவா் தெய்வசிகாமணி(54). தொழில... மேலும் பார்க்க

கல் குவாரி மேலாளா் மீது தாக்குதல்: 20 போ் மீது போலீஸாா் வழக்கு

செய்யாறு அருகே பணத்தைக் கேட்டு மிரட்டி, கல் குவாரி மேலாளரை தாக்கிய சம்பவம் தொடா்பாக தூசி போலீஸாா் வெள்ளிக்கிழமை 20 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், சுருட்டல... மேலும் பார்க்க

நகைக் கடையில் வெள்ளிப் பொருள்கள் கொள்ளை: இருவா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த இராட்டிணமங்கலம், இ.பி.நகா். பகுதி நகைக் கடையில், கடந்த ஜூலை 25-ஆம் தேதி 12 கிலோ வெள்ளிப் பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், 2 பேரை தனிப்படை போலீஸாா் சனிக்கி... மேலும் பார்க்க