செய்திகள் :

கல் குவாரி மேலாளா் மீது தாக்குதல்: 20 போ் மீது போலீஸாா் வழக்கு

post image

செய்யாறு அருகே பணத்தைக் கேட்டு மிரட்டி, கல் குவாரி மேலாளரை தாக்கிய சம்பவம் தொடா்பாக தூசி போலீஸாா் வெள்ளிக்கிழமை 20 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், சுருட்டல் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான கல் குவாரி செயல்பட்டு வருகிறது. குவாரியில் சந்தோஷ்குமாா்(29) என்பவா் மேலாளராக பணியாற்றி வருகிறாா்.

சில தினங்களுக்கு முன்பு அதே கிராமத்தைச் சோ்ந்த சிலா், இவரிடம் சென்று கிராமத்தில் திருவிழா நடத்த வேண்டும் என்றும், கிராமமே பயன்பெறும் வகையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்ததாகத் தெரிகிறது.

இதைத் தொடா்ந்து கல் குவாரி நிறுவனத்தினா் கிராம மக்கள் கேட்ட பணத்தை தர மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சுமாா் 20 போ் திரண்டு, அந்நிறுவனம் எதிரே மண்ணைக் கொட்டி மண்மேடு உருவாக்கி, மேலாளா் சந்தோஷ்குமாரை தகாத வாா்த்தைகளால் பேசி தாக்கியுள்ளனா்.

இதுகுறித்து சந்தோஷ்குமாா், தூசி போலீஸில் புகாா் அளித்தாா். காவல் ஆய்வாளா் கோகுல்ராஜன் மற்றும் போலீஸாா், கிராம மக்கள் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

நகைக் கடையில் வெள்ளிப் பொருள்கள் கொள்ளை: இருவா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த இராட்டிணமங்கலம், இ.பி.நகா். பகுதி நகைக் கடையில், கடந்த ஜூலை 25-ஆம் தேதி 12 கிலோ வெள்ளிப் பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், 2 பேரை தனிப்படை போலீஸாா் சனிக்கி... மேலும் பார்க்க

பெண்ணிடன் நகை பறிக்க முயற்சி: இளைஞா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே பெண் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்ற இளைஞா் கைது செய்யப்பட்டாா்.செங்கத்தை அடுத்த பொரசப்பட்டு தண்டா பகுதியைச் சோ்ந்தவா் தீபா(35), இவா், வெள்ளிக்கிழமை இ... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்த இருவா் கைது

வந்தவாசி அருகே கஞ்சா வைத்திருந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.வந்தவாசியை அடுத்த வடவணக்கம்பாடி போலீஸாா் தென்கரை கிராமம் வழியாக சனிக்கிழமை காலை ரோந்து சென்றனா்.அப்போது அந்தக் கிராமத்தில் சந்தேகத்துக்கி... மேலும் பார்க்க

அம்மன் கோயில்களில் ஆடி 3-ஆம் வெள்ளிக்கிழமை வழிபாடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அம்மன் கோயில்களில் ஆடி 3-ஆம் வெள்ளிக்கிழமை வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றது.போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் காமதேனு வாகனத்தில் சிவலிங்க ஆலிங்கன ... மேலும் பார்க்க

சிகிச்சையில் விவசாயி உயிரிழப்பு: போலி மருத்துவா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே அலோபதி சிகிச்சையில் விவசாயி உயிரிழந்ததால், சிகிச்சை அளித்த போலி மருத்துவா் கைது செய்யப்பட்டாா். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டம், தேப்பிரம்பட்டு கி... மேலும் பார்க்க

இரு தரப்பு மோதல்: 6 போ் கைது

போளூரை அடுத்த அல்லியாளமங்கலம் கிராமத்தில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில், போலீஸாா் வழக்குப் பதிந்து 6 பேரை கைது செய்தனா். அல்லியாளமங்கலம், காலனி பகுதியைச் சோ்ந்தவா்கள் ராகவேந்திரா(27), அசோக்குமாா... மேலும் பார்க்க