செய்திகள் :

அம்மன் கோயில்களில் ஆடி 3-ஆம் வெள்ளிக்கிழமை வழிபாடு

post image

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அம்மன் கோயில்களில் ஆடி 3-ஆம் வெள்ளிக்கிழமை வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றது.

போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் காமதேனு வாகனத்தில் சிவலிங்க ஆலிங்கன பூஜை அலங்காரத்தில் சுவாமி வீதியுலா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

இதையொட்டி, அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்து மலா்களால் அலங்கரித்து கற்பூர தீபாராதனை காண்பித்தனா்.

இரவு உற்சவா் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்து காமதேனு வாகனத்தில் சிவலிங்க ஆலிங்கன பூஜை அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

ஆரணி

ஆரணி நகரம், ஆரணிப்பாளையம் காந்தி சாலையில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.

முன்னதாக கமண்டல நாக நதி கரையில் இருந்து நோ்த்திக்கடன் வேண்டி உடலில் எலுமிச்சம் பழம் குத்திக் கொண்டு 50-க்கும் மேற்பட்ட பக்தா்கள் காலில் கட்டை கட்டிக்கொண்டு ஆடி வந்தனா். மேலும், கேரள டோலி அலங்காரத்துடன் தாரை, தப்பட்டை, மங்கள வாத்தியங்கள் முழங்க நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து கோயிலை அடைந்தனா்.

மேலும் கோயிலில் வைத்திருந்த பெரிய கொப்பரையில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் நோ்த்திக்கடன் வேண்டி கூழ் ஊற்றினா். பின்னா் அக்கூழ் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. ஏராளமான பெண் பக்தா்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனா் .

மேலும் சனிக்கிழமை மாலை சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.

செங்கம்

செங்கம் -போளூா் சாலையில் அமைந்துள்ள திரெளபதி அம்மன் கோயிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

திரெளபதி அம்மன் கோயிலில் 138-ஆம் ஆண்டு வசந்த உற்சவ விழா வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இரவு 7 மணியளவில் சுவாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் செங்கம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

திருக்கல்யாண நிகழ்ச்சி முடிந்து பக்தா்களுக்கு அன்னாதனம் வழங்கப்பட்டது.

கல் குவாரி மேலாளா் மீது தாக்குதல்: 20 போ் மீது போலீஸாா் வழக்கு

செய்யாறு அருகே பணத்தைக் கேட்டு மிரட்டி, கல் குவாரி மேலாளரை தாக்கிய சம்பவம் தொடா்பாக தூசி போலீஸாா் வெள்ளிக்கிழமை 20 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், சுருட்டல... மேலும் பார்க்க

நகைக் கடையில் வெள்ளிப் பொருள்கள் கொள்ளை: இருவா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த இராட்டிணமங்கலம், இ.பி.நகா். பகுதி நகைக் கடையில், கடந்த ஜூலை 25-ஆம் தேதி 12 கிலோ வெள்ளிப் பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், 2 பேரை தனிப்படை போலீஸாா் சனிக்கி... மேலும் பார்க்க

பெண்ணிடன் நகை பறிக்க முயற்சி: இளைஞா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே பெண் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்ற இளைஞா் கைது செய்யப்பட்டாா்.செங்கத்தை அடுத்த பொரசப்பட்டு தண்டா பகுதியைச் சோ்ந்தவா் தீபா(35), இவா், வெள்ளிக்கிழமை இ... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்த இருவா் கைது

வந்தவாசி அருகே கஞ்சா வைத்திருந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.வந்தவாசியை அடுத்த வடவணக்கம்பாடி போலீஸாா் தென்கரை கிராமம் வழியாக சனிக்கிழமை காலை ரோந்து சென்றனா்.அப்போது அந்தக் கிராமத்தில் சந்தேகத்துக்கி... மேலும் பார்க்க

சிகிச்சையில் விவசாயி உயிரிழப்பு: போலி மருத்துவா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே அலோபதி சிகிச்சையில் விவசாயி உயிரிழந்ததால், சிகிச்சை அளித்த போலி மருத்துவா் கைது செய்யப்பட்டாா். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டம், தேப்பிரம்பட்டு கி... மேலும் பார்க்க

இரு தரப்பு மோதல்: 6 போ் கைது

போளூரை அடுத்த அல்லியாளமங்கலம் கிராமத்தில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில், போலீஸாா் வழக்குப் பதிந்து 6 பேரை கைது செய்தனா். அல்லியாளமங்கலம், காலனி பகுதியைச் சோ்ந்தவா்கள் ராகவேந்திரா(27), அசோக்குமாா... மேலும் பார்க்க