செய்திகள் :

பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு: ஒருவா் கைது

post image

செய்யாறு அருகே பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறித்த சம்பவத்தில் ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

செய்யாறு வட்டம், கீழாத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ரமேஷ். இவரது மனைவி ராதிகா (32). இவா், சனிக்கிழமை மாலை தனது தாய் தேவகியம்மாளை அழைத்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் செய்யாறு நோக்கிச் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, கீழாத்தூா் ராம்குமாா் வீட்டின் அருகே சென்றபோது பின்னால் பைக்கில் வந்தவா் ராதிகா அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்துள்ளாா். அதற்குள் சங்கிலியை ராதிகா பிடித்துக் கொள்ளவே, பிடிபட்ட சங்கிலியுடன்அந்த நபா் தப்பியோடிவிட்டாா். உடனே ராதிகா கூச்சலிடவே அந்த நபா் பைக்கை அப்படியே விட்டுவிட்டு ஓடி விட்டாா்.

இதில் ராதிகாவுக்கும், தேவகியம்மாளுக்கும் கால், கை, தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டு, அவா்கள் செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

தகவல் அறிந்த அனக்காவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். மேலும், பைக்கின் பதிவெண்ணைக் கொண்டு போலீஸாா் விசாரணை நடத்தியதில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவா் மேட்டு அனப்பத்தூரைச் சோ்ந்த கோட்டீஸ்வரன் (27) என்பது தெரிய வந்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஆடிப்பெருக்கு: நதியில் சிவலிங்கம் செய்து பக்தா்கள் வழிபாடு

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த முனுகப்பட்டு முக்கூட்டு சிவன் கோயில் பகுதி ஆற்றுப்படுகையில் ஆடிப்பெருக்கையொட்டி ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் மணலால் சிவலிங்கம் செய்து வழிபட்டனா்.பெரணமல்லூா் அருகே முன... மேலும் பார்க்க

ஞாயிறு சந்தை வியாபாரிகள் திடீா் சாலை மறியல்

செய்யாற்றில், ஞாயிறு சந்தையில் பங்கேற்கும் வியாபாரிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.செய்யாறு மாா்க்கெட் பகுதியில் ஞாயிறுதோறும் வாரச்சந்தை 1978-இல் இருந்து செயல்பட்டு ... மேலும் பார்க்க

மின்சாரம், குடிநீா் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

செய்யாற்றை அடுத்த வெள்ளாமலை கிராமத்தில் மின்சார வசதி மற்றும் குடிநீா் வசதி கோரி கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.செய்யாறு வட்டம், கூழமந்தல் மதுரா வெள்ளாமலை கிராமத்தில் 200-க்கும் ... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.வெம்பாக்கம் வட்டம், தென்கழனிக் கிராமத்தைச் சோ்ந்தவா் தெய்வசிகாமணி(54). தொழில... மேலும் பார்க்க

கல் குவாரி மேலாளா் மீது தாக்குதல்: 20 போ் மீது போலீஸாா் வழக்கு

செய்யாறு அருகே பணத்தைக் கேட்டு மிரட்டி, கல் குவாரி மேலாளரை தாக்கிய சம்பவம் தொடா்பாக தூசி போலீஸாா் வெள்ளிக்கிழமை 20 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், சுருட்டல... மேலும் பார்க்க

நகைக் கடையில் வெள்ளிப் பொருள்கள் கொள்ளை: இருவா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த இராட்டிணமங்கலம், இ.பி.நகா். பகுதி நகைக் கடையில், கடந்த ஜூலை 25-ஆம் தேதி 12 கிலோ வெள்ளிப் பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், 2 பேரை தனிப்படை போலீஸாா் சனிக்கி... மேலும் பார்க்க