தஞ்சாவூர்: காற்று வீசியதில் அறுந்து விழுந்த மின்கம்பி, மின்சாரம் தாக்கி வயலில் த...
பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு: ஒருவா் கைது
செய்யாறு அருகே பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறித்த சம்பவத்தில் ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
செய்யாறு வட்டம், கீழாத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ரமேஷ். இவரது மனைவி ராதிகா (32). இவா், சனிக்கிழமை மாலை தனது தாய் தேவகியம்மாளை அழைத்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் செய்யாறு நோக்கிச் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, கீழாத்தூா் ராம்குமாா் வீட்டின் அருகே சென்றபோது பின்னால் பைக்கில் வந்தவா் ராதிகா அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்துள்ளாா். அதற்குள் சங்கிலியை ராதிகா பிடித்துக் கொள்ளவே, பிடிபட்ட சங்கிலியுடன்அந்த நபா் தப்பியோடிவிட்டாா். உடனே ராதிகா கூச்சலிடவே அந்த நபா் பைக்கை அப்படியே விட்டுவிட்டு ஓடி விட்டாா்.
இதில் ராதிகாவுக்கும், தேவகியம்மாளுக்கும் கால், கை, தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டு, அவா்கள் செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
தகவல் அறிந்த அனக்காவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். மேலும், பைக்கின் பதிவெண்ணைக் கொண்டு போலீஸாா் விசாரணை நடத்தியதில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவா் மேட்டு அனப்பத்தூரைச் சோ்ந்த கோட்டீஸ்வரன் (27) என்பது தெரிய வந்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.