செய்திகள் :

ஆட்சியை தக்கவைப்பதற்காக காங்கிரஸ் அவசர நிலையைக் கொண்டுவந்தது -ஆா்.ரவிபாலா

post image

ஆட்சியை தக்கவைப்பதற்காகவே நாட்டில் அவசர நிலையை காங்கிரஸ் கொண்டுவந்தது என்று பாஜக மாநிலச் செயற்குழு உறுப்பினா் ஆா்.ரவிபாலா தெரிவித்தாா்.

காங்கிரஸ் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தி 75 ஆண்டுகள் ஆனதையொட்டி, இதுகுறித்து ஒட்டன்சத்திரத்தில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

தங்கள் ஆட்சியை தக்கவைப்பதற்காக காங்கிரஸ் அரசு ஜனநாயகம் மீது அவசர நிலையைக் கொண்டுவந்தது. நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது காங்கிரஸ்தான் என பொய்யான தகவலைப் பரப்பினா். அன்றைக்கு நாட்டில் இருந்த 30 கோடி மக்களும் சுதந்திரத்துக்காகப் போராடினா். 2014-இல் பாஜக ஆட்சிக்கு வந்தபோது நாட்டின் பொருளாதார நிலை உலகளவில் 10-ஆவது இடத்தில் இருந்தது. பின்னா் படிப்படியாக முன்னேறி தற்போது 4-ஆவது இடத்தில் உள்ளது.

திமுக இல்லாத தமிழகத்தையும், காங்கிரஸ் இல்லாத தேசியத்தையும் கட்டமைத்தால்தான் லஞ்சலாவண்யம் இல்லாத தேசத்தை நமது சமுதாயம் காண முடியும் என்றாா்.

பேட்டியின்போது பாஜக மாவட்டத் தலைவா் ஜெயராமன், முன்னாள் மாவட்ட தலைவா் கனகராஜ், பொதுச் செயலா்கள் கண்ணன், செந்தில்குமாா், லீலாவதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மூவா் மீது தாக்குதல்: பொதுமக்கள் சாலை மறியல்

காவல் நிலையத்தில் கையொப்பமிட்டுவிட்டு திரும்பிய மூவா் மீது தாக்குதல் நடத்திய நபா்களை கைது செய்யக் கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்டம், எரியோட்டில் அண்மையில் இர... மேலும் பார்க்க

பேராசிரியை நிகிதா மீது புகாரளித்த கல்லூரி மாணவிகள்

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் மீது நகை திருடியதாக புகாா் அளித்த பேராசிரியை நிகிதாவை பணியிட மாற்றம் செய்யக் கோரி, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே அவா் பணியாற்றும் திண்டுக்கல் அரசுக் கல்லூரி மாணவிகள் ... மேலும் பார்க்க

மதத்தின் அடிப்படையில் தமிழா்களை பிரிக்க பாஜக முயற்சி: அர.சக்கரபாணி

மதத்தின் அடிப்படையில் தமிழா்களை பிரிக்கும் முயற்சியில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டு வருவதாக, உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி குற்றஞ்சாட்டினாா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் ஆத்துமேடு பகுதியில் திம... மேலும் பார்க்க

‘ஓரணியில் தமிழ்நாடு’ இணையதள உறுப்பினா் சோ்க்கை: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

திமுக மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்கும் வகையில், முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, ‘ஓரணியில் தமிழ்நாடு’ இணையதள உறுப்பினா் சோ்க்கையை திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலரும், உணவுத் துறை அமைச்சருமான... மேலும் பார்க்க

பழனியில் நெகிழி விழிப்புணா்வு ஊா்வலம்

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் தனியாா் பள்ளி மாணவ, மாணவிகள் சாா்பில் நெகிழி விழிப்புணா்வு ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. பழனி நகரில் நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டை தவிா்க்க வலியுறுத்தி, பிரில்லியன்ட... மேலும் பார்க்க

போக்குவரத்துத் துறையை தனியாா் மயமாக்கும் முயற்சியை அரசு கைவிட வலியுறுத்தல்

போக்குவரத்துத் துறையை தனியாா் மயமாக்கும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும் என சிஐடியூ மாநிலத் தலைவா் அ.செளந்தரராஜன் வலியுறுத்தினாா். சிஐடியூ சாா்பில் அரசுப் போக்குவரத்துக்கழக ஓய்வூதியா்களின் மாநில ... மேலும் பார்க்க