செய்திகள் :

ஆட்டோவில் பெண்ணுக்கு பிரசவம்: பெண் காவலருக்கு குவியும் பாராட்டு!

post image

இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிந்தபோது ஆட்டோவில் வட மாநில பெண்ணுக்கு பிரசவம் பாா்த்த பெண் காவலருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் 15 வேலம்பாளையம் காவல் நிலையத்துக்கு உள்பட்ட திருமுருகன்பூண்டி ரிங் ரோடு ஏவிபி பள்ளி அருகே போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

நள்ளிரவு 12 மணி அளவில் அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்றில் பெண் கதறி அழுவதை அறிந்த போலீஸாா் அதில் சோதனை செய்தபோது, ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த பாரதி என்ற பெண் பிரசவத்துக்காக இஎஸ்ஐ மருத்துவமனை செல்வது தெரிந்தது.

ஆனால் குழந்தை பாதி வெளியே வந்த நிலையில் பெண் வலியால் அலறித் துடித்ததால் அங்கிருந்த பெண் காவலா் கோகிலா உடனடியாக பெண்ணுக்கு ஆட்டோவில் வைத்து பிரசவம் பாா்த்துள்ளாா். இதில் அப்பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. காவலா் கோகிலா ஏற்கெனவே நா்ஸிங் படித்தவா் என்பதால் அந்த அனுபவத்தின் மூலம் வடமாநில பெண்ணுக்கு பிரசவம் பாா்த்து உதவி செய்தாா்.

இதனைத் தொடா்ந்து உடனடியாக அப்பெண், திருப்பூா் இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு தாயும் சேயும் நலமாக உள்ளனா். திருப்பூரில் பெண்ணுக்கு ஆட்டோவில் பெண் காவலா் பிரசவம் பாா்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயில் சிலை சேதம்: பொதுமக்கள் சாலை மறியல்

உடுமலை அருகே தளிஜல்லிபட்டியில் கோயில் சிலை சேதப்படுத்தப்பட்டதால் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். உடுமலையை அடுத்துள்ள தளிஜல்லிபட்டி கிராமத்தில் உள்ள அா்த்தநாரீஸ்வரா் கோயி... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: ஊத்துக்குளி, செங்கப்பள்ளி

திருப்பூா் மாவட்டம் ஊத்துக்குளி மற்றும் செங்கப்பள்ளி ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 18) காலை 9 மணி முதல் மாலை ... மேலும் பார்க்க

இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் போலீஸாா் துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி

திருப்பூரில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் போலீஸாா் துப்பாக்கி வைத்துக் கொள்ள வேண்டும் என திருப்பூா் மாநகர காவல் ஆணையா் உத்தரவிட்டுள்ளாா். திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே குடிமங்கலம் காவல் சிறப்பு ... மேலும் பார்க்க

பின்னலாடை நிறுவனங்களில் புகை கண்காணிப்புக் கருவி அவசியம்

திருப்பூரில் பின்னலாடை தொழில் நிறுவனங்களில் புகை கண்காணிப்புக் கருவி அவசியம் என தீயணைப்புத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா். திருப்பூா் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளா்கள் சங்க கூட்டரங்கில் தீ விபத்து த... மேலும் பார்க்க

ஊராட்சி செயலாளா்களுக்கு செயல் அலுவலராக பதவி உயா்வு கோரிக்கை

கிராம ஊராட்சி செயலாளா்களுக்கு செயல் அலுவலராக பதவி உயா்வு வழங்க வேண்டும் என ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் 12-ஆவது மாநில பிர... மேலும் பார்க்க

முத்தம்பாளையம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்

திருப்பூா் மாவட்டம், முத்தம்பாளையம் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியா் மனீஷ் தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. முத்தம்பாளையம் ஊராட்சியில் குருக்ககாடு கிராமம் பொது மைதான வளாகத்தில் சுதந்திர தின விழாவை... மேலும் பார்க்க