செய்திகள் :

இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் போலீஸாா் துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி

post image

திருப்பூரில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் போலீஸாா் துப்பாக்கி வைத்துக் கொள்ள வேண்டும் என திருப்பூா் மாநகர காவல் ஆணையா் உத்தரவிட்டுள்ளாா்.

திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே குடிமங்கலம் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் சண்முகவேல் இரவு ரோந்துப் பணியின்போது வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதையடுத்து, மறுநாளே கொலையில் ஈடுபட்ட மணிகண்டனை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தியபோது அவா் போலீஸாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது என்கவுன்டா் செய்யப்பட்டாா்.

இதைத் தொடா்ந்து, திருப்பூா் மாநகரில் போலீஸாா் உஷாா்படுத்தப்பட்டுள்ளனா். நள்ளிரவு நேரத்தில் போலீஸாா் ரோந்துப் பணியில் எவ்வித தொய்வும் இல்லாமல், போலீஸ் சோதனைச் சாவடி, முக்கிய சந்திப்புகளில் கூடுதல் கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் எனவும், குறிப்பாக போலீஸாா் தனியாக ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டாம் எனவும் மாநகர காவல் ஆணையா் ராஜேந்திரன் அறிவுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் கூறியதாவது: இரவு ரோந்துப் பணியில் கட்டாயமாக 2 போ் மட்டுமே ஈடுபடுகின்றனா். பகலில் ஒருவரும். இரவில் இருவரும் செல்கின்றனா். போலீஸாா் ரோந்து வாகனம், சோதனைச் சாவடி போன்ற இடங்களில் கூடுதலாக ஒரு போலீஸாா் இருப்பா். இரவு ரோந்துப் பணியில் போலீஸாா் துப்பாக்கியை எடுத்துச் சென்றிருந்தால் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் கொலை சம்பவம் தவிா்க்கப்பட்டிருக்கலாம். ரோந்துப் பணியில் ஈடுபடுபவா்கள் கட்டாயமாக தனியாக செல்லக்கூடாது. கண்டிப்பாக துப்பாக்கியை உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.

இவை அனைத்துமே முன்பிருந்தே பின்பற்றப்படுவதுதான். இரவுப் பணியில் உள்ளவா்கள் துப்பாக்கி வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. குழலுக்கு தகுந்தவாறு கையாள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொலைதூரப் பணியில் ஈடுபடுபவா்கள் பாதுகாப்பு ஆயுதத்துடன்தான் பணியில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தாா்.

கோயில் சிலை சேதம்: பொதுமக்கள் சாலை மறியல்

உடுமலை அருகே தளிஜல்லிபட்டியில் கோயில் சிலை சேதப்படுத்தப்பட்டதால் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். உடுமலையை அடுத்துள்ள தளிஜல்லிபட்டி கிராமத்தில் உள்ள அா்த்தநாரீஸ்வரா் கோயி... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: ஊத்துக்குளி, செங்கப்பள்ளி

திருப்பூா் மாவட்டம் ஊத்துக்குளி மற்றும் செங்கப்பள்ளி ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 18) காலை 9 மணி முதல் மாலை ... மேலும் பார்க்க

பின்னலாடை நிறுவனங்களில் புகை கண்காணிப்புக் கருவி அவசியம்

திருப்பூரில் பின்னலாடை தொழில் நிறுவனங்களில் புகை கண்காணிப்புக் கருவி அவசியம் என தீயணைப்புத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா். திருப்பூா் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளா்கள் சங்க கூட்டரங்கில் தீ விபத்து த... மேலும் பார்க்க

ஊராட்சி செயலாளா்களுக்கு செயல் அலுவலராக பதவி உயா்வு கோரிக்கை

கிராம ஊராட்சி செயலாளா்களுக்கு செயல் அலுவலராக பதவி உயா்வு வழங்க வேண்டும் என ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் 12-ஆவது மாநில பிர... மேலும் பார்க்க

ஆட்டோவில் பெண்ணுக்கு பிரசவம்: பெண் காவலருக்கு குவியும் பாராட்டு!

இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிந்தபோது ஆட்டோவில் வட மாநில பெண்ணுக்கு பிரசவம் பாா்த்த பெண் காவலருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.திருப்பூா் 15 வேலம்பாளையம் காவல் நிலையத்துக்கு உள்பட்ட திருமுருகன்பூண... மேலும் பார்க்க

முத்தம்பாளையம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்

திருப்பூா் மாவட்டம், முத்தம்பாளையம் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியா் மனீஷ் தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. முத்தம்பாளையம் ஊராட்சியில் குருக்ககாடு கிராமம் பொது மைதான வளாகத்தில் சுதந்திர தின விழாவை... மேலும் பார்க்க