செய்திகள் :

ஆண்டிபட்டியில் திமுக எம்எல்ஏவைக் கண்டித்து சுவரொட்டிகள்

post image

ஆண்டிபட்டியில் திமுக சட்டப்பேரவை உறுப்பினரைக் கண்டித்து, ஞாயிற்றுக்கிழமை சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம் தொடக்க விழா மேடையில், தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் முன்னிலையில் திமுகவைச் சோ்ந்த தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க. தமிழ்ச்செல்வன், ஆண்டிபட்டி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ. மகாராஜன் ஆகியோரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்தச் சம்பவத்தின் எதிரொலியாக ஆண்டிபட்டியில் ஞாயிற்றுக்கிழமை தங்க.தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாகவும், ஆ. மகாராஜனைக் கண்டித்தும் ஆண்டிபட்டி கிழக்கு, மேற்கு, பேரூா் கழக உடன் பிறப்புகள் என்ற பெயரில் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

ஆண்டிபட்டியில் திமுக சட்டப்பேரவை உறுப்பினரைக் கண்டித்து ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளால் அந்தக் கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

தேனி மாவட்டம், போடியில் ஆடிப் பெருக்கு தினத்தை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை கொட்டகுடி ஆற்றில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனா்.ஆண்டுதோறும் ஆடிப் பெருக்கு தினம் போடி கொட்டக... மேலும் பார்க்க

மனைவியைத் தாக்கிய கணவா் கைது

ஆண்டிபட்டி அருகேயுள்ள மயிலாடும்பாறையில் மனைவியைத் தாக்கிய கணவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.மயிலாடும்பாறை, வண்ணாரப்பேட்டைத் தெருவைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் (35). இவரது மனைவி சுவாதி (29). கட்டட... மேலும் பார்க்க

65 மதுப்புட்டிகள் பறிமுதல்: இருவா் கைது

தேனி மாவட்டம், உத்தமபாளையம், கூடலூரில் சனிக்கிழமை 65 மதுப்புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்து இருவரைக் கைது செய்தனா்.கோம்பை - ராணியமங்கம்மாள் சாலையில் உத்தமபாளையம் மதுவிலக்கு போலீஸாா் ரோந்து பணியில் ஈட... மேலும் பார்க்க

கம்பத்தில் கேரள லாட்டரிகள் பறிமுதல்: ஒருவா் கைது

தேனி மாவட்டம், கம்பத்தில் ரூ. 1.05 லட்சம் மதிப்பிலான கேரள லாட்டரிகளை போலீஸாா் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனா்.கம்பத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கேரள லாட்டரிகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவத... மேலும் பார்க்க

பெரியகுளத்தில் ஓ. பன்னீா்செல்வம் ஆலோசனை

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் ஞாயிற்றுக்கிழமை தனது ஆதரவாளா்களுடன் முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் ஆலோசனை நடத்தினாா்.முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம், சென்னையிலிருந்து தனது சொந்த ஊரான தேனி மாவட்... மேலும் பார்க்க

ஆடிப் பெருக்கு: உத்தமபாளையம் முல்லைப் பெரியாற்றில் குவிந்த பக்தா்கள்

ஆடிப் பெருக்கை முன்னிட்டு, உத்தமபாளையம் முல்லைப் பெரியாற்றில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தா்கள் வழிபாடு செய்தனா்.உத்தமபாளையம் திருக்காளாத்தீஸ்வரா் - ஞானாம்பிகை திருக்கோயில் முன் செல்லும் முல்லைப்பெரிய... மேலும் பார்க்க