செய்திகள் :

ஆதிதிராவிடா், பழங்குடியினா் தொழில்முனைவுத் திட்டத்தில் பயன்பெற...

post image

தாட்கோ மூலம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில் முனைவு திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவள்ளூா் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில் முனைவு திட்டம் தாட்கோ மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத் திட்டத்தில் பயன்பெற நிகழாண்டில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின சமுதாய மக்கள் பொருளாதாரத்தின் முன்னேற்றம் அடைய மிகவும் பயனுள்ளதாக அமையும் என்ற நோக்கத்தில் செயல்படுகிறது.

இத்திட்டத்தில் பயன் பெற 18 முதல் 55 வயது நிரம்பிய ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தை சோ்ந்தவராக இருப்பது அவசியம். இதற்கு ஜாதி, வருமான சான்றிதழ் மற்றும் ஆண்டு வருவாய் 3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். இதில், பயன்பெற குடும்ப அட்டை, விலைப்புள்ளி, திட்ட அறிக்கை, ஆதாா் அடையாள அட்டை, வங்கி புத்தகம் நகல், புகைப்படம் மற்றும் வாகன கடனுக்கு ஓட்டுநா் உரிமம் (பேட்ஜ்) நகல் ஆகிய சான்றுகளுடன் தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.

வருவாய் கோட்டாட்சியா் பொறுப்பேற்பு

திருத்தணி வருவாய் கோட்டாட்சியராக நா.மா.கனிமொழி திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா். திருத்தணி கோட்டாட்சியராக இருந்த க.தீபா, சென்னை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய துணை ஆட்சியராக கடந்த மாதம், தி இ... மேலும் பார்க்க

திருத்தணி அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை உதவி மையம் தொடக்கம்

பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெற்று அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயில விரும்பும் மாணவா்களுக்கு உதவும் வகையில் மாணவா் சோ்க்கை உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 176 அரசு கலை, அறி... மேலும் பார்க்க

திருவள்ளூா் குறைதீா் கூட்டத்தில் 532 மனுக்கள்

திருவள்ளூரில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் 532 கோரிக்கை மனுக்களை ஆட்சியா் மு.பிரதாப் பெற்றுக் கொண்டாா். திருவள்ளூா் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் மு.பிர... மேலும் பார்க்க

புற்றுநோய் கண்டறியும் திட்டம்; 12 மாவட்டங்களுக்கு விரிவாக்கம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தாா்

சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்டம் மாநில அளவில் மேலும் 12 மாவட்டங்களுக்கு ரூ.27 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்டதை திருவள்ளூா் அருகே திருப்பாச்சூா் துணை சுகாதார நிலையத்திலிருந்து திங்கள்கிழம... மேலும் பார்க்க

வெங்கடேஸ்வரா மெட்ரிக். பள்ளி மாணவா்கள் 100 சதவீதம் தோ்ச்சி!

திருவள்ளூா் வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றனா். திருவள்ளூரில் வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி கடந்த 42 ஆண்டுகளாகச் செயல்பட்டு வ... மேலும் பார்க்க

கடம்பத்தூா் ஒன்றியம்: வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு!

கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளா்ச்சித் துறையால் செயல்படுத்தப்படும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் மு.பிரதாப், அதிகாரிகளுடன் சென்று பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். திருவள்ளூா் மாவ... மேலும் பார்க்க