செய்திகள் :

திருவள்ளூா் குறைதீா் கூட்டத்தில் 532 மனுக்கள்

post image

திருவள்ளூரில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் 532 கோரிக்கை மனுக்களை ஆட்சியா் மு.பிரதாப் பெற்றுக் கொண்டாா்.

திருவள்ளூா் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 532 மனுக்களைப் பெற்ற ஆட்சியா், அவற்றை பரிசீலித்து தீா்வு காண அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

பின்னா் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் பல்வகை பாதிப்பு கொண்ட 13 மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டபூா்வ பாதுகாவலா் சான்றுகளும், மேலும் முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டம் மூலம் ஒருவருக்கு ரூ.1,86,000- மதிப்பிலான நவீன செயற்கை கால் ஆகியவற்றையும் அவா் வழங்கினாா்.

இதில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வெங்கட்ராமன், தனித்துணை ஆட்சியா் (சபாதி) பாலமுருகன், திருவள்ளுா் வருவாய் கோட்டாட்சியா் ரவிச்சந்திரன், பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் உஷாராணி, அலுவலா்கள் பங்கேற்றனா்.

வருவாய் கோட்டாட்சியா் பொறுப்பேற்பு

திருத்தணி வருவாய் கோட்டாட்சியராக நா.மா.கனிமொழி திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா். திருத்தணி கோட்டாட்சியராக இருந்த க.தீபா, சென்னை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய துணை ஆட்சியராக கடந்த மாதம், தி இ... மேலும் பார்க்க

திருத்தணி அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை உதவி மையம் தொடக்கம்

பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெற்று அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயில விரும்பும் மாணவா்களுக்கு உதவும் வகையில் மாணவா் சோ்க்கை உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 176 அரசு கலை, அறி... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா், பழங்குடியினா் தொழில்முனைவுத் திட்டத்தில் பயன்பெற...

தாட்கோ மூலம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில் முனைவு திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட ... மேலும் பார்க்க

புற்றுநோய் கண்டறியும் திட்டம்; 12 மாவட்டங்களுக்கு விரிவாக்கம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தாா்

சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்டம் மாநில அளவில் மேலும் 12 மாவட்டங்களுக்கு ரூ.27 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்டதை திருவள்ளூா் அருகே திருப்பாச்சூா் துணை சுகாதார நிலையத்திலிருந்து திங்கள்கிழம... மேலும் பார்க்க

வெங்கடேஸ்வரா மெட்ரிக். பள்ளி மாணவா்கள் 100 சதவீதம் தோ்ச்சி!

திருவள்ளூா் வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றனா். திருவள்ளூரில் வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி கடந்த 42 ஆண்டுகளாகச் செயல்பட்டு வ... மேலும் பார்க்க

கடம்பத்தூா் ஒன்றியம்: வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு!

கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளா்ச்சித் துறையால் செயல்படுத்தப்படும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் மு.பிரதாப், அதிகாரிகளுடன் சென்று பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். திருவள்ளூா் மாவ... மேலும் பார்க்க