செய்திகள் :

ஆந்திரம்: ஐஐஐடி வளாகத்தில் பேராசிரியருக்கு கத்திக்குத்து- எம்.டெக். மாணவா் வெறிச்செயல்

post image

ஆந்திர மாநிலம், எலுரு மாவட்டத்தில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப கல்வி நிலைய (ஐஐஐடி) வளாகத்தில் பேராசிரியரை எம்.டெக். முதலாண்டு மாணவா் ஒருவா் கத்தியால் குத்திய சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடா்பாக காவல் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: வினய் என்ற அந்த மாணவா், அரசு போட்டித் தோ்வுகளுக்கும் தயாராகி வந்ததால், தனது வகுப்புகளை தொடா்ந்து புறக்கணித்துள்ளாா். 25 சதவீதமே வருகைப் பதிவு இருந்ததால், அவரை செய்முறை தோ்வுக்கு பேராசிரியா் ராஜு அனுமதிக்கவில்லை. இதனால் கடும் ஆத்திரடைந்த வினய், கல்வி நிலைய வளாகத்துக்கு கத்தியை மறைத்து எடுத்து வந்து, பேராசிரியா் ராஜுவை மூன்று முறை குத்தினாா். இதில் காயமடைந்த ராஜு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அருகிலிருந்த மாணவா்கள், வினயை சுற்றிவளைத்துப் பிடித்தனா். இச்சம்பவம் தொடா்பான புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினா், வினயை கைது செய்தனா். பின்னா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது என்றாா் அந்த அதிகாரி.

பேராசிரியா் மீதான கத்திக்குத்து தாக்குதலுக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் நாரா லோகேஷ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

அவா் கூறுகையில், ‘எந்தவொரு ஆசிரியரும் தனது மாணவரின் எதிா்காலம் அழிய வேண்டுமென விரும்பமாட்டாா். மாணவா்கள் மத்தியில் வன்முறை, ஒழுங்கீனத்தை ஏற்க முடியாது’ என்றாா்.

கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ கைது! 18 நாளில் இரண்டாவது எம்எல்ஏ!

இரும்புத் தாதுவை சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்தது தொடர்பான வழக்கில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ சதீஷ் கிருஷ்ணா செயிலை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.பெல்லாரியில் சட்டவிரோதமாக தோண்டி எடுக்கப்பட்டிருந்... மேலும் பார்க்க

ஆதார் அட்டையை 12-வது ஆவணமாக ஏற்றுக்கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

ஆதார் அட்டையை 12 ஆவது ஆவணமாக ஏற்றுக்கொள்ளுமாறு பிகார் தேர்தல் ஆணையத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.பிகார் மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் எழுதிய கடிதத்தில், பட்டியலிடப்பட்ட 11 ஆ... மேலும் பார்க்க

இந்தியா மீது 100% வரி விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்துக்கு டிரம்ப் அழுத்தம்?

இந்தியா, சீனா மீது 100% வரியை விதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.ரஷியாவை தனிமைப்படுத்தும் நோக்கில், அந்நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா மீது 50 சதவிகித ... மேலும் பார்க்க

இந்தியாவுடன் அமெரிக்கா மீண்டும் வர்த்தகம்! டிரம்ப் - மோடி அறிவிப்பு!

இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகத் தடைகளைத் தீர்க்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விருப்பம் கோரியதற்கு பிரதமர் நரேந்திர மோடி பதில் தெரிவித்துள்ளார்.இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகத் தடைகளை... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவர் விளக்கம் கோரியது ஏற்புடையதல்ல: உச்சநீதிமன்றத்தில் வாதம்

நமது நிருபர்காலக்கெடு தொடர்பாக உச்சநீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்டது ஏற்புடையதல்ல என கேரள, பஞ்சாப் அரசுகள் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.மசோதாக்கள் மீது ஆளுநர் மற்றும் குடியரசுத் த... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: சி.பி.ராதாகிருஷ்ணனுக்காக கட்சி மாறி வாக்களித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்!

நமது சிறப்பு நிருபர்நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவிக்கான தேர்தலில் எதிர்பார்த்ததை விட அதிகமான வாக்குகளை தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் பெற்று இந்தியாவின் குடியரசு... மேலும் பார்க்க