செய்திகள் :

ஆபரேஷன் சிந்தூர்: மாநிலங்களவையில் கார்கே - நட்டா காரசார வாதம்!

post image

மாநிலங்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் கேள்விக்கு மாநிலங்களவை பாஜக குழுத் தலைவர் ஜெ.பி. நட்டா பதிலளித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் இன்று காலை தொடங்கியது. ஆகஸ்ட் 21 வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில், ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் முதல் நாளே எழுப்பப்பட்டுள்ளது.

கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே, பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், டிரம்ப்பின் கருத்து குறித்து விவாதிக்க இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்திருந்தனர்.

இந்த நிலையில், மாநிலங்களவை மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:

”விதி எண் 267 இன் கீழ் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக விவாதிக்க நான் நோட்டீஸ் அளித்துள்ளேன்.

இன்றுவரை பயங்கரவாதிகளைப் பிடிக்கவும் இல்லை கொல்லவும் இல்லை. அனைத்துக் கட்சிகளும் இந்த விவகாரத்தில் அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குகிறது.

என்ன நடந்தது என்பதை அரசு எங்களுக்கு விளக்க வேண்டும். ஜம்மு - காஷ்மீர் துணைநிலை ஆளுநர் உளவுத்துறை தோல்வி என அறிக்கை வெளியிட்டுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப், அவரால்தான் மோதல் நிறுத்தப்பட்டதாக 24 முறை கூறியுள்ளார்” எனத் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த ஜெ.பி. நட்டா, ”மோடி தலைமையிலான அரசு இதுபோன்ற மிகப்பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க அரசு தயாராக உள்ளது. எதிர்க்கட்சிகள் எழுப்பும் ஒவ்வொரு கேள்விக்கும் ஒவ்வொரு தலைப்பின் கீழும் பதிலளிப்போம்” என பதிலளித்துள்ளார்.

BJP Rajya Sabha Chairman J.P. Nadda has responded to a question from Leader of Opposition Mallikarjun Kharge regarding Operation Sindoor in the Rajya Sabha.

இதையும் படிக்க : ஆபரேஷன் சிந்தூர்: நாட்டின் ராணுவ வலிமையை உலக நாடுகளே வியந்தன - பிரதமர் மோடி

அச்சுதானந்தன் மறைவு: தலைவர்கள் இரங்கல்

கேரள முன்னாள் முதல்வரும் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான அச்சுதானந்தன் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளதாவது, கேர... மேலும் பார்க்க

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்!

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் (வயது 101) வயது மூப்பு காரணமாக திங்கள்கிழமை காலமானார்.மாரடைப்பு மற்றும் வயது தொடர்பான உடல்நலக் குறைவு காரணமாக அச்சுதானந்தன் கடந்த ஜூன் 23 ஆம் தேதி திருவனந்தபுரத்தி... மேலும் பார்க்க

மும்பை ரயில் குண்டுவெடிப்பு.. 19 ஆண்டுகளுக்குப் பின் 12 பேர் விடுதலை செய்யப்பட்டது ஏன்?

2006ஆம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புச் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட 12 பேரையும் மும்பை உயர் நீதிமன்றம் இன்று விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.மும்பையில் புறநகர் ரயில்களில் அடுத்தடுத்து... மேலும் பார்க்க

குஜராத்தில் ஒரே குடும்பத்தில் 5 பேர் தற்கொலை! அதிர்ச்சி தரும் காரணம்

குஜராத் மாநிலத்தில், மூன்று குழந்தைகளைக் கொன்றுவிட்டு, தம்பதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், நிதிநிலைமைதான் இதற்குக் காரணம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்... மேலும் பார்க்க

பாம்பை வெறும் கைகளால் பிடித்த பாலிவுட் நடிகர் சோனு சூட் !

பாலிவுட் நடிகர் சோனு சூட் தனது வீட்டு வளாகத்திற்குள் நுழைந்த பாம்பை வெறும் கைகளால் பிடித்தார். பாலிவுட் நடிகர் சோனு சூட் சனிக்கிழமை தனது இன்ஸ்டா பக்கத்தில் விடியோ ஒன்றை பதிவேற்றியுள்ளார். அதில் அவர் த... மேலும் பார்க்க

மும்பையில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானத்தின் 3 டயர்கள் வெடித்தது!

மும்பையில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானத்தின் மூன்று டயர்கள் வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கேரள மாநிலம் கொச்சியில் இருந்து ஏர் இந்தியாவின் ஏஐ2744 விமானம் இன்று காலை மும்பை சத்திரபதி சிவாஜி சர்வத... மேலும் பார்க்க