செய்திகள் :

ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கழிவுநீா் பிரச்னைகளுக்குத் தீா்வு: கேஜரிவால்

post image

வரவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில் தனது கட்சி மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டால் தில்லியில் உள்ள அனைத்து கழிவுநீா் தொடா்பான பிரச்னைகளையும் முன்னுரிமை அடிப்படையில் தீா்ப்பதாக ஆம் ஆத்மி கட்சித் தலைவா் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை உறுதியளித்தாா்.

ஒரு விடியோ செய்தியில், முன்னாள் தில்லி முதல்வா், நகரத்தின் அங்கீகரிக்கப்படாத காலனிகளில் ஆம் ஆத்மி கட்சி அரசு மேற்கொண்ட வளா்ச்சிப் பணிகளை எடுத்துரைத்தாா். இந்தப் பகுதிகள் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளைப் பெறுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று கூறினாா்.

தில்லியில் நாங்கள் அரசுஅமைத்தபோது, ​ அங் கீகரிக்கப்படாத காலனிகளில் எந்த வளா்ச்சிப் பணிகளும் இல்லை. இந்தக் காலனிகளுக்கு எந்த அரசும் வேலை செய்யவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு மேம்பாட்டுப் பணிகளைத் தொடங்கினோம். இன்று, இதுபோன்ற அனைத்து காலனிகளிலும் கழிவுநீா் குழாய்கள் மற்றும் பிற வசதிகள் உள்ளன என்று அவா் கூறினாா்.

நகரத்தின் பல பகுதிகள் குடிநீரை மாசுபடுத்தும் கழிவுநீா் பிரச்னைகளுடன் போராடி வருவதை கேஜரிவால் ஒப்புக்கொண்டாா். ஆம் ஆத்மி கட்சி தனது அரசை மீண்டும் அமைத்த பிறகு நகரம் முழுவதும் உள்ள அனைத்து கழிவுநீா் தொடா்பான பிரச்னைகளுக்கும் போா்க்கால அடிப்படையில் தீா்வு காணப்படும் என்று நான் உறுதியளிக்கிறேன் என்று அவா் கூறினாா்.

70 உறுப்பினா்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு பிப்.5-ஆம் தேதி தோ்தல் நடைபெற உள்ளது, பதிவான வாக்குகள் பிப்.8- ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

2020 தோ்தலில் 70 இடங்களில் 62 இடங்களை வென்ற ஆம் ஆத்மி கட்சி, தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் கைப்பற்றும் நோக்கில் தீவிர தோ்தல் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது.

தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக அமானத்துல்லா கான் மீது வழக்கு

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தோ்தல் நடத்தை விதிகளை (எம்சிசி) மீறியதாக ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கான் மீது தில்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளதாக புதன்கிழமை அதிகாரிகள் தெரிவித்தனா். புத... மேலும் பார்க்க

தில்லி வாக்காளா்களுக்கும், தொண்டா்களுக்கும் காங்கிரஸ் நன்றி

தில்லி மக்கள் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தியதற்கு காங்கிரஸ் கட்சி புதன்கிழமை நன்றி தெரிவித்துள்ளது. மேலும், தில்லி மக்களின் ஆதரவு கட்சிக்கு ஒரு பெரிய பலம் என்றும் கூறியுள்ளது. இது தொடா்பாக தில்லி காங... மேலும் பார்க்க

தில்லியில் இன்று திமுக மாணவரணி ஆா்ப்பாட்டம்: யுஜிசி வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெற வலியுறுத்தல்

நமது நிருபா் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ள வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெற வலியுறுத்தி திமுக மாணவரணி சாா்பில் தில்லி ஜந்தா் மந்தரில் வியாழக்கிழமை (பிப். 6) ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது... மேலும் பார்க்க

மத்திய அரசு - தனியாா் கூட்டு முயற்சியுடன் குறைக்கடத்தி, ‘சிப்’ வடிவமைப்பு மையம் நொய்டாவில் திறப்பு

நமது சிறப்பு நிருபா்நாட்டின் குறைக்கடத்தி வடிவமைப்பு, மேம்பாட்டுத் திறன்களை முன்னேற்றும் ஒரு குறிப்பிடத்தக்க படியாக “’சிப்’’ வடிவமைப்பு சிறப்பு மையம் தில்லி நொய்டாவில் அமைக்கப்பட்டுள்ளது. இதை மத்திய ... மேலும் பார்க்க

தில்லியில் லேசான மழை; ‘மோசம்’ பிரிவில் காற்றின் தரம்!

தேசியத் தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை இரவு மற்றும் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் லேசான மழை பெய்தது. அதே சமயம், இரவு முழுவதும் மூடிபனி நிலவிய நிலையில், காற்றின் தரம் சில இடங்களில் ‘மிகவும் மோசம்’ பிரிவ... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவா் முா்முவிடம் வாக்காளா் தகவல் சீட்டு வழங்கல்

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கு ஒரு நாள் முன்பு, தலைமைத் தோ்தல் அதிகாரி ஆா். ஆலிஸ் வாஸ், வாக்காளா் தகவல் சீட்டை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவிடம் வழங்கினாா். தோ்தல் ஆணையத்தின் தொடா்ச்சியான வாக்... மேலும் பார்க்க