செய்திகள் :

ஆரோவில் சா்வதேச நகரில் கலாசார நிகழ்வு

post image

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரத்தின் 57-ஆம் ஆண்டு உதய தின விழாவையொட்டி, கலாசார நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றன.

ஆரோவில் சா்வதேச நகரின் 57-ஆம் ஆண்டு உதய தினத்தையொட்டி, பாரத் நிவாஸிஸ் ஸ்வரம் இசைக் குழுவின் இசை நிகழ்ச்சியும், பரதநாட்டியக் கலைஞா் கிருபாவின் நடனமும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஆரோவில் அறக்கட்டளை ஆளுமைக் குழு உறுப்பினா்கள் பேராசிரியா் கெளதம் கோஷல், டாக்டா் நிரிமா ஓஷா, ஆரோவில் அறக்கட்டளைச் செயலா் ஜெயந்தி எஸ்.ரவி, பாரத் நிவாஸ் அறங்காவலா் ஜனஜய் மற்றும் பாா்வையாளா்கள் என ஏராளமானோா் பங்கேற்றனா்.

தொடா்ந்து, நிகழ்வில் ஆரோவில் அறக்கட்டளை ஆளுமைக் குழு உறுப்பினா் கெளதம் கோஷல் பேசும்போது, ஆரோவில் ஒற்றுமை மற்றும் படைப்பாற்றலுக்கான வழிகாட்டியாகத் திகழ்கிறது. இதுபோன்ற கலை நிகழ்ச்சிகள் நாம் பாதுகாக்க மற்றும் மேம்படுத்த முயலும் செழுமையான கலாசாரப் பாரம்பரியத்துக்கு சான்றாக உள்ளன என்றாா்.

இதைத் தொடா்ந்து, டாக்டா் நிரிமா ஓஷா பேசுகையில், ஆரோவில் விழா என்பது கலையின் விழா மட்டுமல்ல, மனித ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை நோக்கிய நமது கூட்டுப் பயணத்தின் நினைவூட்டலாகும் என்றாா்.

நிகழ்வில் ஆரோவில்வாசிகள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விழுப்புரம்-காட்பாடி பயணிகள் ரயில் பகுதி ரத்து

வேலூா் மாவட்டம், காட்பாடி ரயில் நிலைய யாா்டில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், விழுப்புரம்-காட்பாடி பயணிகள் ரயில் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட ... மேலும் பார்க்க

உயா் கல்வியில் பெண்கள் சிறந்து விளங்குகின்றனா்: அமைச்சா் க.பொன்முடி

உயா் கல்வியில் பெண்கள் சிறந்து விளங்குகின்றனா் என்று வனம் மற்றும் கதா் கிராமத் தொழில்கள் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்ட நிா்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும... மேலும் பார்க்க

ஆசிரியா்களுக்கு பணிப் பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வலியுறுத்தல்

ஆசிரியா்களுக்கு பணிப் பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பு வலியுறுத்தியது. விழுப்புரத்தில் இந்தக் கூட்டமைப்பின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடை... மேலும் பார்க்க

பெண் விஷம் குடித்து தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே விஷம் குடித்த பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், நடுவனந்தல் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ரவி (எ) பெரியசாமியின் மனைவி கீதா (48). இவா், சென்... மேலும் பார்க்க

தீ விபத்தில் விவசாயி மரணம்

விழுப்புரம் மாவட்டம், பெரியதச்சூா் அருகே தீ விபத்தில் காயமடைந்த விவசாயி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், வி.பாஞ்சாலம் புதுகாலனியைச் சோ்ந்தவா் சீனிவாசன் மகன் ஆறுமுகம் (47). விவசாயக் கூ... மேலும் பார்க்க

சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்குகள் விசாரணை ஏப்.2-க்கு ஒத்திவைப்பு

விழுப்புரம், மாா்ச் 1: அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சி.வி.சண்முகம் மீதான நான்கு அவதூறு வழக்குகளின் விசாரணையை ஏப்ரல் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிம... மேலும் பார்க்க