செய்திகள் :

ஆர்சிபி வீரர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு!

post image

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் மீது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்துள்ளார்.

ஆர்சிபி அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் யஷ் தயாள் மீது பெண் ஒருவரைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப் பதிவு செய்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் காஜியாபாத்தைச் சேர்ந்த அந்தப் பெண் அளித்துள்ள புகாரில், யஷ் தயாள் அவரை உடல் ரீதியாகவும், மன ரீதியிலும் துன்புறுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தப் புகார் கடந்த ஜூன் 21 ஆம் தேதி முதல்வரின் குறைதீர்வு இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், பிஎன்எஸ் பிரிவு 69 கீழ் திருமணம் ஆசை கூறி ஏமாற்றியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையைத் தொடர்ந்து யஷ் தயாள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

புகாரளித்தப் பெண்ணுடன் யஷ் தயாள்.

ஒருவேளை யாஷ் தயாள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 10 ஆண்டுகள் தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து அந்தப் பெண் கூறும்போது, “திருமணத்தைக் காரணம் காட்டி, யஷ் தயாள், என்னுடன் பலமுறை தனிமையில் இருந்துள்ளார். அவரது குடும்பத்தினரிடமும் என்னை அறிமுகப்படுத்தினார். அவர்களிடம் நான் அவர்களின் மருமகள் என்று கூறினர்” என்றும் தெரிவித்துள்ளார்.

இதனால், தான் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாகவும், அதற்காகச் சிகிச்சை பெறுவதாகவும் அந்தப் பெண் காவல் துறையினரிடம் புகாரளித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி கோப்பையை வெல்லுவதில் முக்கிய பங்காற்றியவர்களில் யஷ் தயாளும் ஒருவர். இவர் உத்தரப் பிரதேச அணிக்காவும், இந்தியா ஏ, பி அணிகளுக்காவும் விளையாடி வருகிறார். மிகவும் பிரபலமான வீரர் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Yash Dayal booked in sexual harassment case after Ghaziabad woman’s complaint

இதையும் படிக்க :முச்சதம் விளாசி வரலாறு படைத்த வியான் முல்டர்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.நியூசிலாந்து அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ... மேலும் பார்க்க

மிட்செல் ஸ்டார்க் ஒரு போர் வீரன்..! 100-ஆவது போட்டிக்கு கம்மின்ஸ் புகழாரம்!

ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தனது 100-ஆவது டெஸ்ட் போட்டியை விளையாடவிருக்கிறார். 35 வயதாகும் இடது கை வேகப் பந்துவீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் 99 டெஸ்ட் போட்டிகளில் வி... மேலும் பார்க்க

வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஜூலை 8) அறிவித்துள்ளது.வங்கதேச அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் வ... மேலும் பார்க்க

சதம் விளாசிய குசல் மெண்டிஸ்; வங்கதேசத்துக்கு 286 ரன்கள் இலக்கு!

வங்கதேசத்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 285 ரன்கள் எடுத்துள்ளது.வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு... மேலும் பார்க்க

30 ஆண்டுகளாக ஃபிராங்க் வோரல் கோப்பையை தக்கவைத்து ஆஸி. ஆதிக்கம்!

ஆஸி. அணி 30 ஆண்டுகளாக ஃபிராங்க் வோரல் கோப்பையை தக்கவைத்து சாதனை படைத்துள்ளது. ஆஸ்திரேலிய அணி மேற்கிந்தியத் தீவுகளுடன் விளையாடும் டெஸ்ட் போட்டிக்கு ஃபிராங்க் வோரல் கோப்பை எனப் பெயரிடப்பட்டது. மேற்கிந்த... மேலும் பார்க்க

இன்னிங்ஸ் வெற்றி பெற்று ஜிம்பாப்வே டெஸ்ட் தொடரை முழுமையாக வென்ற தென்னாப்பிரிக்கா!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 236 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவ... மேலும் பார்க்க