செய்திகள் :

ஆர்டிஐ சட்டத்தின் கீழ் விளக்கம் பெறுவது எப்படி?

post image

மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்களை, துறைவாரியான நடவடிக்கைகள் என நாட்டின் குடிமக்கள் அறிந்துகொள்ள உரிமை பெற்ற தகவல்களை யார் வேண்டுமானாலும் கேட்டு அறிந்துகொள்ள வழி வகை செய்வதே தகவல் அறியும் உரிமைச் சட்டம்.

இந்தச் சட்டத்தின் கீழ், பதிவு செய்த குடிமக்கள், மத்திய, மாநில அரசுத் துறைகளுக்கு ஆன்லைன் மூலமே கேள்வி எழுப்பி தகவல்களைப் பெற முடியும்.

1. ஆர்டிஐ தகவல்களைப் பெற ஏற்படுத்தப்பட்ட https://rtionline.gov.in/ இணையதளத்துக்குள் செல்லவும்.

2. முதல் முறையாக இணையதளத்துக்கு செல்பவராக இருந்தால், உங்கள் அடையாளத்தைப் பதிவு செய்ய வேண்டும்.

3. பெயர், முகவரி, தொடர்பு எண் மற்றும் சில விவரங்களை உள்ளீட்டு உங்களுக்கான கணக்கைத் தொடங்கலாம்.

4. பிறகு, நீங்கள் எழுப்ப வேண்டிய கேள்வி யாருக்கு என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

5. அமைச்சகமா? துறையா? நீதிமன்றம் போன்றவையா என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

6. பிறகு, ஆன்லைன் ஆர்டிஐ விண்ணப்பத்தில் நீங்கள் கேட்கும் கேள்வியை பதிவு செய்யவும்.

7. எந்த விவரத்தைக் கேட்கிறோம் என்பதை தெளிவாக உள்ளிடுவது மிகவும் அவசியம்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பும்போது, 3000 எழுத்துகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் எழுத்துகளும் எண்கள், சிறப்பு எழுத்துகளான - _ ( ) / @ : & \ % போன்றவை மட்டுமே இடம்பெறலாம்.

8. சில கேள்விகளுக்கு ஆவணங்கள் ஏதேனும் இருப்பின் அதனையும் இணைக்கலாம்.

9. வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவராக இருந்தால் ஆர்டிஐ கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

10. வறுமைக் கோட்டுக்கு மேல் இருப்பவர்கள் ஆர்டிஐ கட்டணம் செலுத்த வேண்டும்.

அதற்கு மேக் பேமென்ட் என்பதைத் தேர்வு செய்து ஆன்லைன் மூலமாகவே பணம் செலுத்தலாம். இன்டர்நெட் பேங்கிங், கிரடிட் அல்லது டெபிட் கார்டு மூலமும் யுபிஐ மூலமும் பணம் செலுத்தலாம்.

பணம் செலுத்தியது உறுதியானதும், விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டதும் உங்களது கேள்விக்கான பதிவு எண் உங்களுக்கு வழங்கப்படும். இது தொடர்பான உறுதிப்படுத்துதல் தகவல் மின்னஞ்சல் முகவரிக்கும், செல்போனில் குறுந்தகவலாகவும் வந்துவிடும்.

இந்த பதிவு எண்ணைக் கொண்டு, உங்கள் விண்ணப்பத்தின் நிலையை அறியலாம்.

ஆர்டிஐ விண்ணப்பத்தில் கொடுக்கப்படும் தொலைபேசி எண்ணுக்கு, பதில் கிடைப்பது குறித்த குறுந்தகவலும் அனுப்பிவைக்கப்படும்.

இதில், பல வகை உண்டு. அதாவது, ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்வி அவருக்கு திருப்பி அனுப்பிவைக்கப்படும். ஏன் திருப்பி அனுப்பப்படுகிறது என்பதற்கான விளக்கம் கொடுக்கப்படும்.

அல்லது வேறொரு துறைக்கு அல்லது அமைச்சகத்துக்கு இந்த தகவல் அனுப்பிவைக்கப்படுவதாக இருந்தாலும் அது தொடர்பான தகவல் கிடைக்கப்பெறும்.

அவ்வாறு இல்லாமல், ஒருவர் கேட்ட கேள்வி, பல துறைகளிடமிருந்து பதில் பெறுவதாக இருந்தால், பல்வேறு துறைகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது என்பதற்கான தகவல் வழங்கப்படும். இப்படிப்பட்ட விண்ணப்பங்கள் ஒருவேளை இரண்டு அல்லது மூன்று துறைகளுக்கு அனுப்பப்படுகிறது என்றால், மூன்று விண்ணப்ப எண்கள் வழங்கப்படும்.

இந்த துறைகளிடமிருந்து வரும் பதிலில், ஒரு துறையின் பதில் திருப்திகரமானதாக இல்லை என்றால், அந்த விண்ணப்பத்தின் எண்ணைக் குறிப்பிட்டு விண்ணப்பதாரர் மீண்டும் கேள்வி எழுப்பலாம்.

உங்களுக்குத் தேவையான மேலதிகத் தகவல்களை அறிந்துகொள்ள மேற்கண்ட கோப்பைப் பார்க்கலாம்.

புதிய குடும்ப அட்டை பெற எவ்வாறு விண்ணப்பிப்பது ?

குடும்ப அட்டை என்பது, மாநில அரசால் வழங்கப்படும் ஒரு முக்கியமான ஆவணம். இது நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருள்களைப் பெறுவதற்கும், அரசின் நலத் திட்டங்களைப் பெறுவதற்கும் அடையாள ஆவணமாகவும் பயன்படுகி... மேலும் பார்க்க

வீட்டுக்கடன் பெறுவது எப்படி? முழு விவரம்!

வீடு கட்டுவது என்பது இன்று பலருக்கும் பெருங்கனவாகத்தான் இருக்கிறது. பெரும்பாலானோர் கடன்வாங்கி தான் அந்தக் கனவை நிறைவேற்றுகின்றனர். வங்கிகளும் வீடு வாங்குவதற்கு அல்லது வீடு கட்டுவதற்கு கடன்கள் வழங்குகி... மேலும் பார்க்க

காப்பீடு ஏன் அவசியம்? எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும்?

வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் நவீன, பரபரப்பான உலகில், ஒருவர் பல்வேறு காப்பீடுகளை எடுக்க வேண்டிய கட்டாய நிலை உள்ளது. அவசரத்துக்கு காப்பீடு கைகொடுக்குமோ கொடுக்காதோ ஆனால், காப்பீடு வைத்திருக்கிறோம், அது நம்... மேலும் பார்க்க

ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம்!

ஓட்டுநர் உரிமம் என்பது இந்தியாவில் உள்ள சாலைகளில் பல்வேறு வகையான மோட்டார் வாகனங்களை இயக்க தனிநபருக்கு வழங்கப்படும் அதிகாரப்பூர்வ ஆவணமாகும். இது மண்டல போக்குவரத்து ஆணையத்தால்(RTO) வழங்கப்படுகிறது. ஓட்ட... மேலும் பார்க்க

கட்டணமின்றி சிபில் ஸ்கோர் பெறுவது எவ்வாறு?

சிபில் ஸ்கோர் என்பது, தனிநபரின் நிதிநிலை பற்றிய மதிப்பீடு. ஒருவரது கடன் பெறும் தகுதியை மதிப்பிடும் இந்த மூன்று இலக்க எண் மூலம், ஒருவர் நிதிநிலைமை எவ்வாறு உள்ளது, அவர் எவ்வாறு கையாள்கிறார் என்பதை நிதி ... மேலும் பார்க்க