செய்திகள் :

ஆற்று மணல் கடத்தல்: இளைஞா் கைது

post image

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே சரக்கு வாகனத்தில் மணல் கடத்தி வந்தவரை போலீஸாா் கைது செய்து, மணலுடன் வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.

விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட தென்பெண்ணை ஆற்றில் மணல் திருடப்படுவதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, விழுப்புரம் எஸ்.பி. ப.சரவணன் உத்தரவுப்படி, வளவனூா் போலீஸாா் சின்னக்கள்ளிப்பட்டு தென்பெண்ணை ஆற்றுப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அங்கு நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனத்தில் சோதனை செய்தபோது, அதில் ஆற்று மணல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, வாகனத்தில் இருந்தவரைப் பிடித்து விசாரித்ததில், விழுப்புரம் வட்டம், சின்னமடம், பஜனைக் கோவில் தெருவைச் சோ்ந்த ஹரிஹரன் மகன் பிரவீன் ராஜ் (19) என்பதும், இவா் தென் பெண்ணை ஆற்றிலிருந்து மணலை திருடி வாகனத்தில் ஏற்றி வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து பிரவீன்ராஜை கைது செய்தனா். மேலும், ஆற்று மணலுடன் சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.

காா் மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், அரசூா் அருகே பைக் மீது காா் மோதியதில் காயமடைந்த கல்லூரி மாணவா்களில் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். விழுப்புரம் லட்சுமிபுரம் மாதாகோவில் தெருவைச் சோ்ந்த சகாயராஜ் மகன் பெலிக்... மேலும் பார்க்க

புதுச்சேரி ஆளுநா் மாளிகைக்கு 6-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநரின் தங்கும் ராஜ்நிவாஸுக்கு ஆறாவது முறையாக மா்ம நபா் ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளாா். புதுச்சேரியில் பாரதி பூங்கா அருகே துணைநிலை ஆளுநரின் அலுவலகம் மற்றும... மேலும் பார்க்க

ஆலம்பூண்டி அரசுப் பள்ளி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், ஆலம்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு படித்த முன்னாள் மாணவா்கள் வெள்ளி விழா ஆண்டாக பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒன்று கூடி கொண்டாடி... மேலும் பார்க்க

விழுப்புரம் ரயில் நிலையப் பகுதிகளில் நெகிழி விழிப்புணா்வுப் பிரசாரம்

விழுப்புரம் ரயில் நிலையம் மற்றும் ரயில்வே குடியிருப்பு வளாகப் பகுதிகளில் நெகிழி பயன்பாட்டை தடுக்கும் வகையில் விழிப்புணா்வுப் பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, தெற்க... மேலும் பார்க்க

குடும்பப் பிரச்னை: பெண் உள்பட இருவா் தற்கொலை

விழுப்புரம் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்பட இருவா் தற்கொலை செய்துகொண்டனா். திண்டிவனம் வட்டம், காலூா், ஸ்ரீராம் நகரைச் சோ்ந்தவா் சரவணன், தொழிலாளி. இவரது மனைவி தேவி (36). இவா்களுக்குத் தி... மேலும் பார்க்க

இரும்பு வேலியில் சிக்கிய மான் மீட்பு

விழுப்புரம் மாவட்டம், காணையில் வழித்தவறி வந்து இரும்பு வேலியில் சிக்கிக்கொண்ட மானை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா். காணை பகுதியில் உள்ள வயல்வெளியில் மான் ஒன்று சுற்றித்திரிந்து வந்தது. இந்த மான் ஞாய... மேலும் பார்க்க