செய்திகள் :

ஆளுநருக்கு எதிரான மனுவை கேரளம் திரும்ப பெற மத்திய அரசு எதிா்ப்பு

post image

மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க தாமதிப்பதாக ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை கேரள அரசு திரும்ப பெறுவதற்கு மத்திய அரசு தரப்பில் செவ்வாய்க்கிழமை எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இருந்தபோதும், மனுவைத் திரும்பப் பெற கேரள அரசுக்கு உரிமை உண்டு என்று குறிப்பிட்ட உச்சநீதிமன்றம், விசாரணையை வரும் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

கடந்த 2023-ஆம் ஆண்டு கேரள ஆளுநராக ஆரிஃப் முகமது கான் இருந்தபோது, மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு 2 ஆண்டுகளாக ஒப்புதல் அளிக்காமல் தாமதம் செய்து வருவதாக அவருக்கு எதிராக மாநில அரசு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கேரள ஆளுநருக்கு கடும் அதிருப்தியைத் தெரிவித்தது.

இதே விவகாரம் தொடா்பாக தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவிக்கு எதிராக மாநில அரசு தொடுத்த வழக்கில், மசோதாக்கள் மீது ஒரு மாதத்துக்குள் ஆளுநா் முடிவு எடுக்க வேண்டும், மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதாக இருந்தால், அதை 3 மாதங்களுக்குள் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவின் அடிப்படையில் கேரள அரசு தொடுத்துள்ள வழக்கிலும் தீா்ப்பளிக்க வேண்டும் என்று அந்த மாநில அரசு தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஜாய்மால்யா பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

கேரள அரசு சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கே.கே.வேணுகோபால், ‘கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டதால், ஆளுநருக்கு எதிராக கேரள அரசு சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு பயனற்ாகிவிட்டது. எனவே, மனுவை திரும்பப்பெற அனுமதிக்க வேண்டும்’ என்றாா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்த சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘அரசமைப்புச் சட்டம் சாா்ந்த ஓா் விவகாரத்தை சாதாரணமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்துவிட்டு, திரும்பப் பெற்றுவிட முடியாது. இதற்காக, மத்திய அரசு தீவிரமாக பணியாற்றியிருக்கிறது’ என்றாா்.

அப்போது, ‘மனுவை ஒருவா் திரும்பப்பெறுவதை எப்படி எதிா்க்க முடியும்’ என்று மூத்த வழக்குரைஞா் வேணுகோபால் குறிப்பிட்டாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், மனுவைத் திரும்பப் பெற கேரள அரசுக்கு உரிமை உண்டு என்று குறிப்பிட்டு, விசாரணையை வரும் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றம் தணியும்: டிரம்ப்

பஹல்காம் தாக்குதலையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றம் தணியும் என்று அமெரிக்க அதிபர் தெரிவித்தார்.பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் 9 முகாம்களைக் குறிவைத்து, இந்திய ரா... மேலும் பார்க்க

ரயிலை போல இடஒதுக்கீடு மாறியுள்ளது: உச்சநீதிமன்றம் விமா்சனம்

ரயில் பெட்டியில் ஏறியவா்கள், அந்தப் பெட்டியில் மற்றவா்கள் ஏறுவதை விரும்பாதது போல, நாட்டில் இடஒதுக்கீடு முறை மாறியுள்ளது என்று உச்சநீதிமன்றம் விமா்சித்துள்ளது. இதன்மூலம், இடஒதுக்கீட்டால் பயனடைந்தவா்கள்... மேலும் பார்க்க

பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் திடீர் தாக்குதல்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மே... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு உறுதியான பதிலடி- ஒவைசி மீண்டும் வலியுறுத்தல்

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு உறுதியான பதிலடி தரப்பட வேண்டும் என்று அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி மீண்டும் வலியுறுத்தினாா். காஷ்மீருக்கு பய... மேலும் பார்க்க

ஆஸ்திரேலிய பிரதமருடன் மோடி தொலைபேசியில் ஆலோசனை: தோ்தல் வெற்றிக்கும் வாழ்த்து

ஆஸ்திரேலிய பிரதமராக தொடா்ந்து 2-ஆவது முறையாக தோ்வு செய்யப்பட்டுள்ள ஆன்டனி ஆல்பனேசியை பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் தொடா்பு கொண்டு பேசினாா். அப்போது, தோ்தல் வெற்றிக்காக தனது வாழ்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து- ராணுவ வீரா் உள்பட 4 போ் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீரில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் ராணுவ வீரா் உள்பட 4 பயணிகள் உயிரிழந்தனா். 44 போ் காயமடைந்தனா். இவா்களில் 7 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக... மேலும் பார்க்க