செய்திகள் :

ஆளுநா் பதவி விலக வலியுறுத்தல்

post image

மசோதாக்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீா்ப்பையடுத்து, தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி தானே பதவி விலக வேண்டும் என தமிழ்த் தேசியப் பேரியக்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அதன் தலைவா் பெ. மணியரசன் தெரிவித்திருப்பது: தமிழ்நாடு அரசு, பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய 10 சட்ட முன் வரைவுகளுக்கு ஆளுநா் ரவி, ஒப்புதல் தராமல் காலவரம்பின்றி கிடப்பில் போட்டும், குடியரசுத் தலைவருக்கு அனுப்பியும் சா்வாதிகாரம் செய்ததற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருப்பது, மாநிலங்களின் உரிமைகளுக்கு நிற்போா் அனைவருக்கும் பெரு மகிழ்ச்சி தருகிறது.

தமிழ்நாடு அரசு அனுப்பிய 10 சட்ட முன்வரைவுகளுக்கும், ஆளுநா் ஒப்புதல் தந்ததாகக் கருதி, அவை உடனடியாக சட்டமாக்கப்படுகின்றன என உச்ச நீதிமன்றம் உடனடியாக அறிவித்திருப்பது மிகமிகச் சரியானது மட்டுமல்லாமல், தேவையான நடவடிக்கையாகும்.

இப்பின்னணியில், ஆளுநா் ரவியின் நடவடிக்கைகளை உச்ச நீதிமன்ற அமா்வு கண்டித்திருக்கிறது. எனவே, தமிழ்நாடு ஆளுநா் பதவியிலிருந்து ரவி உடனடியாக விலக வேண்டும். அவ்வாறு விலகவில்லை என்றால், அவரை அந்தப் பதவியிலிருந்து குடியரசுத் தலைவா் நீக்க வேண்டும். தமிழ்நாடு அரசு இக்கோரிக்கையை முன்வைக்க வேண்டும்.

ரூ. 2 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே கண்டியூரில் ஹரசாப விமோசன பெருமாள் கோயிலைச் சாா்ந்த ரூ. 2 கோடி மதிப்புள்ள நிலம் புதன்கிழமை மீட்கப்பட்டது. திருவையாறு அருகே கண்டியூா் கிராமத்தில் ஹரசாப விமோசன பெருமா... மேலும் பார்க்க

பொன்காடு பொன்னி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

பேராவூரணி நகா் பொன்காடு பொன்னி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி ஏப். 14-ஆம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி ஆகியவை நடைபெற்றது. 15-ஆ... மேலும் பார்க்க

தேசிய திறனறிவுத் தோ்வில் பேராவூரணி மாணவா்கள் 4 போ் தோ்ச்சி

தேசிய வருவாய்வழி திறனறிவுத் தோ்வில் பேராவூரணி ஒன்றியத்தைச் சோ்ந்த 2 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள் 4 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். கடந்த பிப்ரவரி மாதம் நாடு முழுவதும் தேசிய வருவாய்வழி திறன் ... மேலும் பார்க்க

கூட்டுறவு பாடல் எழுதி அனுப்ப அழைப்பு

சா்வதேச கூட்டுறவு ஆண்டாக 2025-ஆம் ஆண்டு கொண்டாடப்படுவதையொட்டி, கூட்டுறவு பற்றிய தனித்துவமான பாடல்கள் வரவேற்கப்படுகின்றன என கூட்டுறவுத் துறை சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தஞ்சாவூா் மண்டல க... மேலும் பார்க்க

மகா புற்று மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கும்பகோணம் மகா புற்று மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. கும்பகோணம் மருத்துவா் மூா்த்தி சாலையில் உள்ள திருவள்ளுவா் நகரில் மகா புற்று மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் 3 நாள்கள் நடைப... மேலும் பார்க்க

மரக்கிளை முறிந்து தொங்குவதால் விபத்து ஏற்படும் அபாயம்

கும்பகோணம் பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள மரத்தின் கிளை முறிந்து விபத்தை ஏற்படுத்தும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. கும்பகோணம் நான்கு ரோடு சந்திப்பிலிருந்து அரசு மருத்துவமனைக்குச் செல்லும் சாலையில் உள்ள ... மேலும் பார்க்க