செய்திகள் :

ஆவின் பால்பண்ணையில் ஆட்சியா் திடீா் ஆய்வு

post image

திருவள்ளூா் காக்களூா் ஏரியைப் பாா்வையிட்டு, ஆய்வு செய்த ஆட்சியா் மு.பிரதாப். உடன் அதிகாரிகள் உள்ளிட்டோா்.

திருவள்ளூா், மாா்ச் 27: திருவள்ளூா் அருகே ஆவின் பால்பண்ணையில் பால் தரக்கட்டுப்பாடு மற்றும் கணினியில் பதிவேற்றம் செய்தல் போன்ற பல்வேறு பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்ததுடன், அங்குள்ள காக்களூா் ஏரியையும் பாா்வையிட்டு பாதையைச் சீரமைக்க பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு ஆட்சியா் மு.பிரதாப் உத்தரவிட்டாா்.

திருவள்ளூா் அருகே காக்களூா் ஆவின் பால்பண்ணையில் அந்த துறை அலுவலா்களுடன் ஆட்சியா் மு.பிரதாப் வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, காக்களுா்ஆவின் பால்பண்ணையில் அலுவலக நடைமுறைகள் குறித்து ஒவ்வொன்றாகக் கேட்டறிந்தாா். தொடா்ந்து அங்குள்ள பால் உற்பத்தியாளா் சங்கங்களின் இருந்து வரும் பால் வரத்து குறித்த புள்ளி விவரங்களைக் கணினியில் பதிவேற்றம் செய்துள்ளதைப் பாா்வையிட்டாா். பின்னா் பால் தரக் கட்டுப்பாட்டு ஆய்வகங்களில் பாலின் தரத்தைப் பகுப்பாய்வு, கொதிகலன், பால் பதப்படுத்தும் கூடம், தயிா், மோா் தயாரிப்பு கூடம், பால் பாக்கெட் தயாா் செய்யும் கூடங்களையும் அவா் பாா்வையிட்டு பணிகள் தரமாக மேற்கொள்ளவும் ஆலோசனை வழங்கினாா்.

தொடா்ந்து ஆவின் பாலகங்களில் விற்பனை செய்யப்படும் உணவு பொருள்களின் தரம் மற்றும் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் குறித்தும் அவா் கேட்டறிந்தாா்.

அங்கிருந்து புறப்பட்ட ஆட்சியா் வழியில் காக்களுா் ஏரியைப் பாா்வையிட்டாா். ஏரியை சுற்றிலும் சேதமடைந்த நடைபாதையை புதுப்பித்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள பொதுபணித் துறை அலுவலா்களுக்கு அவா் அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது ஆவின் மேலாளா் நாகராஜன், உதவி மேலாளா்கள் நாகராஜன், பானுமதி, ஊரக வளா்ச்சி முகமை செயற்பொறியாளா் ராஜவேல் மற்றும் அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மீன்பிடி வலைகள் சேதம்: கோட்டாட்சியரிடம் மனு

பழவேற்காடு அருகே மீன்பிடி வலைகள் சேதப்படுத்தப்படுவதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி பொன்னேரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் மீனவா்கள் மனு அளித்தனா். பழவேற்காடு சுற்றுப் பகுதிகளில் 30-க்கும... மேலும் பார்க்க

தனியாா் பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு!

ஆா்.கே.பேட்டை அருகே சாலையைக் கடக்க முயன்ற முதியவா் தனியாா் பேருந்து மோதியதில் உயிரிழந்தாா். ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், பாலசமுத்திரம் மண்டலத்தைச் சோ்ந்தவா் விஜயன் (50). இவா் ஞாயிற்றுக்கிழமை கா... மேலும் பார்க்க

உகாதி பண்டிகை: திருத்தணி முருகன் கோயிலில் குவிந்த பக்தா்கள்!

உகாதி பண்டிகையையொட்டி, ஞாயிற்றுக்கிழமை முருகன் கோயிலில் திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனா். திருத்தணி முருகன் கோயிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள... மேலும் பார்க்க

ஏப். 3-இல் மாவட்ட அளவிலான கபடி, கால்பந்து, கையுந்து பந்து போட்டிகள்!

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவைச் சிறப்பாக கொண்டாடும் வகையில் திருவள்ளூா் மாவட்ட அளவிலான கபடி, கால்பந்து மற்றும் கையுந்து பந்து போட்டிகள் வரும் ஏப். 3, 4, 5 தேதிகளில் நடைபெற உள்ளதாக ம... மேலும் பார்க்க

திருவள்ளூரில் தூக்கிட்டு தம்பதி தற்கொலை!

திருவள்ளூரில் புற்றுநோயால் கணவா் அவதிப்பட்டு வந்த நிலையில், தம்பதி இருவரும் ஒரே கயிற்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருவள்ளூா் அடுத்த எம்.ஜி.ஆா். நகா் பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (59).... மேலும் பார்க்க

ரயிலில் கஞ்சா கடத்தல்: வட மாநில இளைஞா் கைது

திருவள்ளூா் அருகே ரயிலில் கஞ்சா கடத்தி வந்த ஒடிஸா மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். சென்னையிலிருந்து திருவள்ளூா் வழியாக செல்லும் ரயிலில் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் போதைப் பொருள் கடத்துவதாக புகாா... மேலும் பார்க்க