செய்திகள் :

ஆஸி.- இங்கிலாந்து 150-ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டி அறிவிப்பு!

post image

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 150ஆவது ஆண்டை முன்னிட்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

மெல்போர்ன் கிரிக்கெட் திடலில் முதல்முறையாக 1877ஆம் ஆண்டு இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. 100ஆவது போட்டியிலும் அங்குதால் நடைபெற்றது.

முதல் போட்டி, 100ஆவது போட்டிகளிலும் ஆஸி. 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் 2027ஆம் ஆண்டு மார்ச்.11-15ஆம் தேதிகளில் இந்த டெஸ்ட் போட்டி இரவுப் பகலாக எம்சிஜியில் (மெல்போர்ன் கிரிக்கெட் திடல்) நடைபெறுமென கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

பிங்க் பந்தில் அசத்தும் ஆஸி.

150ஆவது டெஸ்ட் போட்டி இரவுப் பகலாக பிங்க் பந்தில் நடைபெறவிருக்கிறது. பிங்க் பந்து கிரிக்கெட்டில் ஆஸி. அணி 13போட்டிகளில் 12இல் வெற்றி பெற்றுள்ளது.

ஏற்கனவே ஆஸி., இங்கிலாந்து அணிகள் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறன்றன. இதிலும் ஆஸி. அணியே கோப்பையை தக்கவைத்துள்ளது.

அடுத்த ஆஷஸ் 2025-2026 தொடர் நவம்பரில் தொடங்குகிறது. சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸி. அரையிறுதியில் வெளியேறியது. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை தொடருக்கான நியூசி. மகளிர் அணி: புதுமுகங்களுக்கு வாய்ப்பு!

இலங்கை தொடருக்கான நியூசி. மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இலங்கை - நியூசிலாந்து மகளிர் அணிகள் மோதும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் வருகிற மார்ச... மேலும் பார்க்க

பாகிஸ்தான் கிரிக்கெட் ஐசியூவில் உள்ளது: பாக். முன்னாள் கேப்டன்

பாகிஸ்தான் கிரிக்கெட் ஐசியூவில் இருப்பதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஷகித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. துபையில் நடைபெற்ற இறுதிப்போட்ட... மேலும் பார்க்க

க்ளென் பிலிப்ஸ்தான் சிறந்த ஃபீல்டர்..! ஒப்புக்கொண்ட ஜான்டி ரோட்ஸ்!

இந்தத் தலைமுறையின் சிறந்த ஃபீல்டர் க்ளென் பிலிப்ஸ்தான் என ஜான்டி ரோட்ஸ் ஒப்புக்கொண்டார்.கிரிக்கெட்டில் ஃபீல்டிங் என்றாலே அனைவருக்கும் முதலில் ஞாபகத்துக்கு வருவது தென்னாப்பிரிக்காவின் ஜான்டி ரோட்ஸ்தான்... மேலும் பார்க்க

15 சிக்ஸர்கள்.. 28 பந்துகளில் அதிவேக சதம்! மீண்டும் கிரிக்கெட் களத்தில் ஏலியன் டிவில்லியர்ஸ்!

28 பந்துகளில் சதம் விளாசி தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் ஜாம்பவான் ஏபி டிவில்லியர்ஸ் அசத்தியுள்ளார்.தென்னாப்பிரிக்க அணியின் அதிரடி ஆட்டக்காரர், விக்கெட் கீப்பர், முன்னாள் கேப்டனுமான ஏபி டிவில்லியர்ஸ... மேலும் பார்க்க

ஐபிஎல் 2025: மும்பை அணியில் இணைந்த கேப்டன் ஹார்திக் பாண்டியா!

சாம்பியன்ஸ் டிராபியை வென்ற கையோடு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா அதன் அணியில் இணைந்தார்.துபையில் நடந்துமுடிந்த சாம்பியன்ஸ் டிராபியில் 6 பந்துகள் மீதமிருந்த நிலையில் 4 விக்கெட்டுகள... மேலும் பார்க்க

ஐபிஎல் தொடரா? இந்திய அணியா? வீரர்களின் இலக்கு குறித்து பேசிய ரிஷப் பந்த்!

கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவதில் கவனம் செலுத்த வேண்டுமா? அல்லது இந்திய அணியில் இடம்பெறுவதில் கவனம் செலுத்த வேண்டுமா? என்பது குறித்து இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் பேசியுள... மேலும் பார்க்க