செய்திகள் :

ஐபிஎல் தொடரா? இந்திய அணியா? வீரர்களின் இலக்கு குறித்து பேசிய ரிஷப் பந்த்!

post image

கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவதில் கவனம் செலுத்த வேண்டுமா? அல்லது இந்திய அணியில் இடம்பெறுவதில் கவனம் செலுத்த வேண்டுமா? என்பது குறித்து இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் பேசியுள்ளார்.

நியூசிலாந்தை வீழ்த்தி அண்மையில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி மூன்றாவது முறையாக வென்றது. சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்தபோதிலும், அணியின் பிளேயிங் லெவனில் விளையாடுவதற்கான வாய்ப்பு ரிஷப் பந்த்துக்கு கிடைக்கவில்லை.

இதையும் படிக்க: பாகிஸ்தான் டி20 தொடருக்கான நியூசி. அணி அறிவிப்பு; முக்கிய வீரர்கள் இல்லை!

ஐபிஎல் தொடரா? இந்திய அணியா?

இந்திய அணி அண்மையில் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற நிலையில், கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவதில் கவனம் செலுத்த வேண்டுமா? அல்லது இந்திய அணியில் இடம்பெறுவதில் கவனம் செலுத்த வேண்டுமா? என்பது குறித்து இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக ஜியோ ஹாட்ஸ்டாரில் ரிஷப் பந்த் பேசியதாவது: சிறுவயதிலிருந்தே எனக்கு இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவு மட்டுமே இருந்தது. ஐபிஎல் தொடரில் விளையாடுவேன் என ஒருபோதும் நான் நினைத்ததில்லை. ஆனால், இன்று வீரர்கள் பலரும் ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்பதற்கே அதிக கவனம் கொடுப்பதாக நினைக்கிறேன்.

இதையும் படிக்க: சாம்பியன்ஸ் டிராபி 2025: சிறந்த அணியை அறிவித்த ஐசிசி; 6 இந்திய வீரர்களுக்கு இடம்!

ஐபிஎல் தொடர் வீரர்களுக்கு மிகப் பெரிய வாய்ப்பு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், வீரர் ஒருவர் தனது நாட்டுக்காக விளையாடுவதை தனது இலக்காக எடுத்துக்கொள்ள வேண்டும். நாட்டுக்கு விளையாடுவதற்கு முன்னுரிமையும், ஐபிஎல் உள்பட மற்ற தொடர்களில் விளையாடுவதை இரண்டாவது தெரிவாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற மிகப் பெரிய இலக்கை வைத்துக் கொண்டால், வெற்றி உங்களை பின் தொடரும். இந்திய அணிக்காக விளையாடுவேன் என்பதை நான் எப்போதும் நம்பினேன். கடவுள் அருளால் எனது நம்பிக்கை வீண்போகவில்லை. என்னுடைய 18 வயதில் இந்திய அணிக்காக விளையாடக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்புக்கு நான் மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன் என்றார்.

ஐசிசி ஒருநாள் தரவரிசை: ரோஹித் சர்மா, ரச்சின் அதிரடி முன்னேற்றம்! கோலிக்கு சரிவு!

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, நியூசிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் அதிரடியாக முன்னேற்றம் பெற்றுள்ளனர்.சர்வதேச கிரிக்கெட் தரவரிசைப் பட்டியல் வா... மேலும் பார்க்க

பிசிசிஐ ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்பட்ட பின் வாழ்வில் நிறைய கற்றுக்கொண்டேன்! -ஷ்ரேயஸ்

பிசிசிஐ ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்பட்ட பின் வாழ்வில் நிறைய கற்றுக்கொண்டதாக இந்திய நட்சத்திர வீரர் ஷ்ரேயஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.பாகிஸ்தானில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி அசத்தலாக வி... மேலும் பார்க்க

ரிஷப் பந்த் வீட்டுல விசேஷம்..! நடனமாடிய தல தோனி, சின்ன தல ரெய்னா!

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தின் சகோதரி திருமண விழாவில் இந்திய கிரிக்கெட் அணியினர் கலந்துகொண்டு நடனமாடிய விடியோக்கள் இணையத்தில் வைராலாகி வருகிறது.12 ஆண்டுகளுக்குப் பின்னர் சாம்பியன்ஸ் டிர... மேலும் பார்க்க

ஐபிஎல்: சென்னை - மும்பை போட்டிக்கான டிக்கெட் ரூ. 1.23 லட்சம்!

சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடும் முதல் போட்டிக்கான அதிகாரபூர்வ டிக்கெட் விற்பனை தொடங்குவதற்கு முன்னதாகவே, மறுவிற்பனை தளத்தில் ரூ. 1.23 லட்சம் வரை டிக்கெட் விற்பனை செய்யப்படு... மேலும் பார்க்க

இலங்கை தொடருக்கான நியூசி. மகளிர் அணி: புதுமுகங்களுக்கு வாய்ப்பு!

இலங்கை தொடருக்கான நியூசி. மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இலங்கை - நியூசிலாந்து மகளிர் அணிகள் மோதும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் வருகிற மார்ச... மேலும் பார்க்க

பாகிஸ்தான் கிரிக்கெட் ஐசியூவில் உள்ளது: பாக். முன்னாள் கேப்டன்

பாகிஸ்தான் கிரிக்கெட் ஐசியூவில் இருப்பதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஷகித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. துபையில் நடைபெற்ற இறுதிப்போட்ட... மேலும் பார்க்க