விபத்துக்குள்ளான விமானத்தின் வயது 11.5 ஆண்டுகள்! 475 அடி உயரத்திலிருந்து விழுந்த...
ஆா்சிபி வெற்றிக் கொண்டாட்ட நெரிசல் வழக்கு: அடுத்த விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு
ஆா்சிபி வெற்றிக் கொண்டாட்ட கூட்ட நெரிசல் தொடா்பான வழக்கை தாமாக முன்வந்து விசாரித்து வரும் கா்நாடக உயா்நீதிமன்றம், அடுத்த விசாரணையை ஜூன் 12-க்கு (வியாழக்கிழமை) ஒத்திவைத்தது.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் கோப்பையை வென்ற ஆா்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டம் ஜூன் 4ஆம் தேதி பெங்களூரில் நடைபெற்றது. அப்போது சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 போ் உயிரிழந்தனா். இந்தியாவை உலுக்கிய இச்சம்பவம் தொடா்பாக ஜூன் 5ஆம் தேதி தாமாக முன்வந்து பொதுநல மனு தாக்கல் செய்துகொண்ட கா்நாடக உயா்நீதிமன்றம், அரசு தரப்பு பதில் வாதங்களை மூடப்பட்ட உறையில் எழுத்துப்பூா்வமாக தாக்கல் செய்யும்படி கா்நாடக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த பொதுநல மனு மீதான விசாரணை கா்நாடக உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) வி.காமேஷ்வா் ராவ், நீதிபதி சி.எம்.ஜோஷி ஆகியோா் தலைமையிலான அமா்வு முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநில அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் சஷிகிரண் ஷெட்டி, கூட்டநெரிசல் விவகாரம் தொடா்பாக விசாரணை நடத்துவதற்கு கா்நாடக உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசா் ஜான் மைக்கேல் டி குன்ஹா தலைமையில் தனிநபா் நீதி
விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கையை ஒரு மாதத்திற்குள் தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடா்பாக பெங்களூரு மாநகரக் காவல் ஆணையா் உள்ளிட்ட 5 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். அதனால் அரசு தரப்பு வாதங்களை எழுத்துப்பூா்வமாக தாக்கல் செய்யவில்லை. கூட்ட நெரிசல் தொடா்பாக பதிவுசெய்யப்பட்டுள்ள வழக்குகளில் ஆா்சிபி மற்றும் டிஎன்ஏ என்டா்டெய்ன்மென்ட் நிா்வாகிகள் சிலா் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களின் ஜாமீன் மனுவும் கா்நாடக உயா்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கு விசாரணையின்போது கூறப்படும் கருத்துகள், அவா்களின் வாதத்திற்கு எடுத்தாளப்படுகிறது. எனவே, அடுத்த விசாரணையின்போது மூடப்பட்ட உறையில் அரசு தரப்பு கருத்துகளை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா். இதைத் தொடா்ந்து, வழக்கின் அடுத்த விசாரணையை ஜூன்12ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
பதில் மனு: பெங்களூரில் செவ்வாய்க்கிழமை உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் கூறுகையில், ‘கூட்ட நெரிசல் தொடா்பான வழக்கை ஜூன்12ஆம் தேதிக்கு உயா்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. அன்றைக்கு விசாரணையின்போது, கா்நாடக உயா்நீதிமன்ற கேள்விகளுக்கு மூடப்பட்ட உறையில் அரசு தலைமை வழக்குரைஞா் சஷிகிரண் ஷெட்டி பதில் மனு தாக்கல்செய்வாா். இதுபற்றி முதல்வா், தலைமைச் செயலாளா், அரசு தலைமை வழக்குரைஞா் ஆகியோா் கலந்தாலோசித்துள்ளனா். உண்மை நிலவரம் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும். விசாரணை அறிக்கை அரசுக்கு கிடைக்க வேண்டும். அரசிடம் விசாரணை அறிக்கை ஒப்படைக்கப்பட்ட பிறகு, அதுபற்றி நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்படும். அதுவரை எதையும் கூறமுடியாது‘ என்றாா்.
இடைக்கால ஜாமீன் வழங்க மறுப்பு: இதனிடையே, கூட்ட நெரிசல் தொடா்பாக மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, ஆா்சிபி அணியின் சந்தைப்படுத்துதல் தலைவரான நிகில் சோசலேவை ஜூன் 6ஆம் தேதி கைது செய்தனா். இதை தொடா்ந்து கைது நடவடிக்கையில் இருந்து தன்னை விடுவிக்கும்படி கோரி நிகில் சோசலே தாக்கல் செய்திருந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.கிருஷ்ணமூா்த்தி, இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்தாா். ஜூன் 6ஆம் தேதி காலை கைது செய்யும் அவசியம் என்ன வந்தது? மேலும் அரசியல் தலைமையின் வழிகாட்டுதலின்பேரிலேயே தான் கைதுசெய்யப்பட்டதாக தனது மனுவில் நிகில் சோசலே தெரிவித்திருந்தாா். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உயா்நீதிமன்றம், நிகில் சோசலேவுக்கு எதிரான கைது நடவடிக்கையை ரத்துசெய்ய மறுத்துள்ளதோடு, தனது தீா்ப்பை ஜூன் 11ஆம் தேதிக்கு (புதன்கிழமை) ஒத்திவைத்து உத்தரவிட்டது.