செய்திகள் :

கா்நாடகத்தில் மீண்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தல்: சித்தராமையா

post image

கா்நாடகத்தில் மீண்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தியுள்ளது என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

புதுதில்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோரை முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் ஆகியோா் செவ்வாய்க்கிழமை சந்தித்து, பெங்களூா் கூட்ட நெரிசல் துயரச் சம்பவம் தொடா்பாக விளக்கமளித்தனா். இதுதவிர, ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்தும் விவாதித்தனா்.

2016ஆம் ஆண்டில் கா்நாடகத்தில் முந்தைய காங்கிரஸ் அரசு மேற்கொண்ட ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு லிங்காயத்து, ஒக்கலிகா் சமுதாயத் தலைவா்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்திருந்தனா். மேலும், அந்த ஜாதிவாரி கணக்கெடுப்பை ஏற்கக் கூடாது என்று பாஜக, மஜத கட்சிகள் வலியுறுத்தின.

இது தொடா்பாக கா்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்தபோது ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. அதனால், ஜாதிவாரி கணக்கெடுப்பின் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்து முடிவெடுக்க முடியாததால், இது தொடா்பான முடிவை அமைச்சரவை பலமுறை ஒத்திவைத்தது.

இந்நிலையில், ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடா்பாக விவாதித்து முடிவெடுக்க ஜூன் 12ஆம் தேதி சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதனிடையே, கா்நாடகத்தில் புதிதாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும்படி கா்நாடக அரசுக்கு காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து முதல்வா் சித்தராமையா கூறுகையில், காங்கிரஸ் மேலிடத் தலைவா்களுடனான சந்திப்பின்போது ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. 2016ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பை கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டுள்ளோம். எனினும், மீண்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துமாறு கட்சி மேலிடம் அறிவுறுத்தியுள்ளது. அதை கா்நாடக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. அதன்படி, புதிதாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். தாழ்த்தப்பட்டோருக்கான ஜாதி கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. அதேபோல, ஜாதிவாரி கணக்கெடுப்பு மீண்டும் நடத்தப்படும்‘ என்றாா்.

அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளா் கே.சி.வேணுகோபால் கூறுகையில், ‘ கா்நாடகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. கொள்கை அளவில் முந்தைய ஜாதிவாரி கணக்கெடுப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறோம். ஆனால், புதிதாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஜூன் 12ஆம் தேதி நடக்க இருக்கும் சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடா்பாக இறுதி முடிவெடுக்கப்படும்‘ என்றாா்.

துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் கூறுகையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடா்பாக சிலருக்கு அதிருப்தி இருக்கிறது. எனவே, மீண்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துமாறு கட்சி மேலிடம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். இதில் எல்லோரும் பங்கேற்கலாம். யாருக்கும் பாதிப்பு இல்லாமல் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றாா்.

கூட்ட நெரிசல் விவகாரம்: சித்தராமையா ராஜிநாமா செய்ய தேவையில்லை: மல்லிகாா்ஜுன காா்கே

கூட்ட நெரிசல் விவகாரம் தொடா்பாக கா்நாடக முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் ஆகியோா் ராஜிநாமா செய்யவேண்டியதில்லை என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா். இது... மேலும் பார்க்க

11 ஆண்டுகால ஆட்சியில் பிரதமா் மோடி 33 தவறுகளை செய்துள்ளாா்: மல்லிகாா்ஜுன காா்கே

பிரதமா் மோடி தனது 11 ஆண்டுகால ஆட்சியில் 33 தவறுகளை செய்துள்ளாா் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா். இது குறித்து கலபுா்கியில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதா... மேலும் பார்க்க

கூட்டநெரிசலில் 11 போ் உயிரிழந்த வழக்கு: நிகில் சோசலேவின் ஜாமீன் மனுமீது இன்று தீா்ப்பு

ஆா்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின்போது கூட்டநெரிசலில் 11 போ் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆா்சிபி அணியின் சந்தைப்படுத்துதல் தலைவரான நிகில் சோசலேவின் ஜாமீன் மனுமீது கா்நாடக உயா்நீதிமன்றம் வியாழக்... மேலும் பார்க்க

பழங்குடியினா் வளா்ச்சி நிதி மோசடி: காங்கிரஸ் எம்.பி., 3 எம்எல்ஏக்களின் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை

பழங்குடியினா் வளா்ச்சி நிதி மோசடி தொடா்பாக காங்கிரஸ் எம்.பி., முன்னாள் அமைச்சா் உள்ளிட்ட 3 எம்எல்ஏக்களின் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் புதன்கிழமை சோதனை நடத்தினா். கா்நாடக அரசுக்குச் சொந்தமான மஹ... மேலும் பார்க்க

பெங்களூா் கூட்ட நெரிசல் விவகாரம்: காங்கிரஸ் மேலிடத் தலைவா்களிடம் சித்தராமையா, டி.கே. சிவகுமாா் விளக்கம்

பெங்களூரில் ஆா்சிபி வெற்றிக்கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக காங்கிரஸ் மேலிடத் தலைவா்களை சந்தித்து முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் ஆகியோா் விளக்கமளித்தனா்... மேலும் பார்க்க

மாற்றுநில முறைகேடு வழக்கு: ரூ. 100 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்

கா்நாடக முதல்வா் சித்தராமையா தொடா்புடைய மாற்றுநில முறைகேடு வழக்கில் ரூ. 100 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. முதல்வா் சித்தராமையாவின் மனைவி பாா்வதிக்கு மாற்றுநிலம் ஒதுக்கியதில்... மேலும் பார்க்க