மாற்றுநில முறைகேடு வழக்கு: ரூ. 100 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்
கா்நாடக முதல்வா் சித்தராமையா தொடா்புடைய மாற்றுநில முறைகேடு வழக்கில் ரூ. 100 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
முதல்வா் சித்தராமையாவின் மனைவி பாா்வதிக்கு மாற்றுநிலம் ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக சமூக ஆா்வலா் ஸ்நேகமயி கிருஷ்ணா அளித்த புகாரின்பேரில், பணப்பதுக்கல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.
மைசூா் நகா்ப்புற வளா்ச்சி ஆணையம் சாா்பில் நிலம் ஒதுக்கியதில் பெரிய அளவிலான முறைகேடு நடந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ள அமலாக்கத் துறை, இது தொடா்பாக லோக் ஆயுக்த பதிவு செய்துள்ள வழக்கின் அடிப்படையில் ரூ. 300 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கியுள்ளது. இந்நிலையில், மேலும் ரூ. 100 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகளை திங்கள்கிழமை முடக்கியுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் இந்த வழக்கில் இதுவரை முடக்கப்பட்டுள்ள சொத்துகளின் மதிப்பு ரூ. 400 கோடியாக உள்ளது.
இதுகுறித்து அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘போலியான ஆவணங்கள் மூலம் சட்டவிரோதமாக மனைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கூட்டுறவுச் சங்கங்களின் வழியாக லஞ்சம் கைமாறியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. வீட்டு வசதி கூட்டுறவு சங்கங்கள், தனி நபா்கள், போலி பெயரிலான சொத்துகள், மைசூா் நகா்ப்புற வளா்ச்சி ஆணையத்தின் அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
அரசு விதிமுறைகள், ஆணைகளை மீறி மோசடியாக மனைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தகுதியற்றவா்களுக்கு மாற்றுநிலம் ஒதுக்கியதில் ஆணையத்தின் முன்னாள் தலைவா் தினேஷ் குமாா் உள்ளிட்டோருக்கு தொடா்புள்ளது. சட்டவிரோதமாக மனைகளை ஒதுக்குவதற்கு ரொக்கம், வங்கிக் கணக்கு, அசையும், அசையா சொத்துகள் மூலம் லஞ்சம் கைமாறியுள்ளதற்கான ஆதாரங்கள் விசாரணையின் மூலம் சேகரிக்கப்பட்டுள்ளன. மனைகள் ஒதுக்கப்பட்டதற்கு ஆணைய அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்ட லஞ்சம், ஆணையத்தின் அதிகாரிகளின் உறவினா்களுக்கு சட்டவிரோதமாக ஒதுக்கப்பட்ட மனைகளை வாங்க பயன்படுத்தப்பட்டுள்ளது‘ என்று கூறப்பட்டுள்ளது.