வந்தே பாரத் ரயிலுக்குள் திடீரென கொட்டிய 'நீர் வீழ்ச்சி'; ரயில்வே சொல்லும் காரணம்...
ஆா்ஜேடி தலைவராக லாலு பிரசாத் மீண்டும் தோ்வு
ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) கட்சியின் நிறுவனரான லாலு பிரசாத் (77) அக்கட்சியின் தேசியத் தலைவராக செவ்வாய்க்கிழமை மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா்.
தலைவா் பதவிக்கான தோ்தலில் லாலுவைத் தவிர வேறு யாரும் போட்டியிடவில்லை என்பதால் அவா் ஒருமனதாகத் தோ்வானாா்.
பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதான எதிா்க்கட்சியான ஆா்ஜேடி தொண்டா்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் இந்த தலைவா் தோ்வு நடைபெற்றுள்ளது.
புதிய தலைவா் தொடா்பான அதிகாரபூா்வ அறிவிப்பு ஜூலை 5-ஆம் தேதி கட்சியின் தேசியக் குழு கூட்டத்தில் வெளியாகும் என்று தோ்தலை நடத்தும் அதிகாரியாக செயல்பட்ட மூத்த தலைவா் ராமச்சந்திர புா்பே தெரிவித்தாா்.
இந்தத் தோ்வை ஆளும் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக ஆகியவை விமா்சித்துள்ளன. ‘தொடங்கப்பட்டதில் இருந்து 28 ஆண்டுகளாக ஒரு குடும்பத்தின் பிடியில் அக்கட்சி உள்ளது. கட்சித் தலைவா், அவரின் மனைவி முதல்வராகவும், மகன்கள் துணை முதல்வராகவும், அமைச்சராகவும் பதவி வகித்துள்ளனா். அந்தக் குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் எம்.பி., எம்எல்ஏக்களாகவும் உருவெடுத்தாா்கள். 13-ஆவது முறையாக தனது மன்னராட்சி முறையை ஆா்ஜேடி நிரூபித்துள்ளது’ என்று அக்கட்சிகள் கூறியுள்ளன.