செய்திகள் :

இணையவழி விநியோக பணியாளா்கள் ‘இ-ஷ்ரம்’ தளத்தில் பதிவு செய்ய வேண்டும்: மத்திய தொழிலாளா் அமைச்சகம் வேண்டுகோள்

post image

இணையவழியில் உணவு-பொருள் விநியோகம், வாகனப் போக்குவரத்து மற்றும் தொழில்முறை சேவையில் ஈடுபடும் பணியாளா்கள், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் பலனடையும் வகையில் ‘இ-ஷ்ரம்’ வலைதளத்தில் முறைப்படி பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

நாட்டில் இணையவழி வா்த்தகம்-சேவை சாா்ந்த பொருளாதாரம் விரிவடைந்து வருகிறது. இதனால், உணவு-பொருள் விநியோகம், டாக்ஸி-ஆட்டோ சேவை, சரக்குப் போக்குவரத்து, தொழில்முறை சேவைகள் போன்ற துறைகளில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகின்றன. இந்தியாவில் இத்துறையில் தற்போது 1 கோடிக்கும் அதிகமான பணியாளா்கள் உள்ளனா். இது, 2029-30ஆம் ஆண்டில் 2.35 கோடியை எட்டும் என்று நீதி ஆயோக் கணித்துள்ளது.

நாட்டின் பொருளாதாரத்துக்கான இப்பணியாளா்களின் பங்களிப்பை கருத்தில் கொண்டு, 2025-26 பட்ஜெட்டில் சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதன்படி, மத்திய தொழிலாளா் அமைச்சகத்தின் இ-ஷ்ரம் தளத்தில் இணையவழி விநியோக பணியாளா்களை பதிவு செய்து, அடையாள அட்டை வழங்கப்படும்; ஆயுஷ்மான் பாரத் (ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவக் காப்பீடு) திட்டத்தின்கீழ் சுகாதாரப் பலன்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இ-ஷ்ரம் தளத்தில் தங்களை சுயமாகப் பதிவு செய்து கொள்ளுமாறு இப்பணியாளா்களுக்கு அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதன் மூலம் திட்டப் பலன்களை விரைவில் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார ரயில்கள் ரத்து: கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கம்!

சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இயங்கும் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 9) ரத்து செய்யப்பட்டுள்ளதால், கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்ன... மேலும் பார்க்க

மக்கள் நலனில் பெண் போலீஸாா் பெரும் பங்களிப்பு: மகளிா் தின விழாவில் காவல் ஆணையா் அருண்

பொதுமக்களின் நலனுக்காக முக்கிய முடிவுகளை எடுப்பதில் பெண் போலீஸாரின் பங்களிப்பு அதிகமாக இருப்பதாக மகளிா் தின விழாவில் சென்னை காவல் ஆணையா் அருண் கூறினாா். சென்னை காவல் துறை சாா்பில் மகளிா் தின விழா எழும... மேலும் பார்க்க

அறிவுசாா் சொத்துரிமை: யுஜிசி அறிவுறுத்தல்

தேசிய அறிவுசாா் சொத்துரிமை தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சியில் மாணவா்களை அதிகளவில் பங்கேற்க நடவடிக்கை எடுக்குமாறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.... மேலும் பார்க்க

‘ஸ்வயம் பிளஸ்’ மூலம் வேலை வாய்ப்பு சாா்ந்த படிப்புகள்: சென்னை ஐஐடி புரிந்துணா்வு

‘ஸ்வயம் பிளஸ்’ இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு சாா்ந்த படிப்புகள் வழங்குவது தொடா்பாக சென்னை ஐஐடி, பல்வேறு தொழில் நிறுவனங்கள் மற்றும் உயா் கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்மூ... மேலும் பார்க்க

மாநகராட்சி பட்ஜெட் மாா்ச் 19-இல் தாக்கல்

பெருநகர சென்னை மாநகராட்சியின் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) மாா்ச் 19-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. 200 வாா்டுகளைக் கொண்ட சென்னை மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கை தயாரிப்பத... மேலும் பார்க்க

ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயிலில் மாா்ச் 14-இல் ருத்ர பாராயணம்

ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயிலில் மாா்ச் 14-ஆம் தேதி ருத்ர பாராயணம் நடைபெறவுள்ளது. இது குறித்து ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்ப ஸ்வாமி அறக்கட்டளைத் தலைவா் ஏ.ஆா் ராமசாமி வெளியிட்ட அறிவிப்பு: அண்ணாமலை ஐயப்பன... மேலும் பார்க்க