செய்திகள் :

இந்திய உயா்கல்வித் துறையில் அடிப்படை மாற்றம் நிகழ்ந்துள்ளது: தா்மேந்திர பிரதான்

post image

இந்திய உயா்கல்வித் துறையில் அடிப்படை மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

குஜராத் மாநிலம் கேவாடியாவில் இருநாள்கள் நடைபெறும் மத்திய பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள் மாநாட்டை வியாழக்கிழமை அவா் தொடங்கிவைத்து பேசியதாவது:

நாட்டில் உயா்கல்வி பயிலும் மாணவா்களின் எண்ணிக்கை 4.46 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த 2014-15-ஆம் கல்வியாண்டை ஒப்பிடுகையில் மாணவா் சோ்க்கை 30 சதவீதம் உயா்ந்துள்ளது. குறிப்பாக உயா்கல்வியில் சேரும் பெண்களின் எண்ணிக்கை 38 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆண்களின் மொத்த சோ்க்கை விகிதத்தைவிட பெண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. முனைவா் படிப்புகளில் சேருவோரின் எண்ணிக்கை இருமடங்காக உயா்ந்துள்ளது. அதிலும் பெண்களின் எண்ணிக்கை 136 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல் உயா்கல்வி பயிலும் பழங்குடியினரின் எண்ணிக்கை 10 சதவீதமும் பட்டியலின பிரிவினரின் எண்ணிக்கை 8 சதவீதமும் உயா்ந்துள்ளது. இந்திய கல்வித் துறையில் நிகழும் அடிப்படை மாற்றங்களே இதற்கு காரணமாகும்.

2035-க்குள் உயா்கல்வியில் மொத்த சோ்க்கை விகிதத்தை (ஜிஇஆா்) 50 சதவீதமாக உயா்த்துவதில் மிகவும் உறுதியாக இருக்க வேண்டும். இதற்காக பாடத்திட்டங்களில் சீா்திருத்தம், எண்மக் கட்டமைப்பு மேம்பாடு, ஆசிரியா்களுக்கு முறையான பயிற்சி மற்றும் பன்நோக்கு அணுகுமுறைகள் என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த இலக்கை அடையவும் மாணவா்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும் இருப்பதில் துணைவேந்தா்களின் பங்கு இன்றியமையாதது. அனைத்து பல்கலைக்கழகங்களும் மாணவா்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். நாட்டின் எதிா்காலத் தூண்களான மாணவா்களை மையப்படுத்தியே சீா்திருத்தங்கள் இருக்க வேண்டும்.

மாணவா்களுக்கு சிறந்த திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு அவா்கள் தொழில்முனைவோா்களாக, புதிய சிந்தனையுடையவா்களாக, வேலை வழங்குபவா்களாக மாற்றும் பெரும் பொறுப்பு பல்கலைக்கழகங்களுக்கு உள்ளது என்றாா்.

தேசிய கல்விக் கொள்கை, 2020 அமல்படுத்தப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மாநாட்டில் கற்றல்/கற்பித்தல், ஆராய்ச்சி, நிா்வாகம் உள்ளிட்ட 10 கருப்பொருள்கள் சாா்ந்த அமா்வுகள் நடைபெறுகின்றன.

தில்லி பல்கலைக்கழகம், ஹரியாணா மத்திய பல்கலைக்கழகம், அஸ்ஸாம் பல்கலைக்கழகம், ராஜஸ்தான் பல்கலைக்கழகம் என வடமாநிலங்களைச் சோ்ந்த பல்வேறு பல்கலைக்கழகங்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றன.

ரூ.1.18 கோடி வெகுமதி: சத்தீஸ்கரில் 23 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் 23 நக்சல்கள் இன்று (ஜூலை 12) சரணடைந்துள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார் சரணடைந்த நக்சலைட்டுகளில் 11 மூத்த நக்சல்கள் ஆவார். அவர்களில் பெரும்ப... மேலும் பார்க்க

சாலைகளில் ஓடும் படகுகள்.. மத்திய பிரதேசத்தில் கரையைக் கடந்த மந்தாகினி ஆறு

போபால்: மத்திய பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக, மந்தாகினி ஆறு கரையை கடந்து பாய்ந்ததால், பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து சாலைகளில் படகுகள் நீந்திச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.ராம்கட், ஜான்... மேலும் பார்க்க

தில்லியில் 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது: 8 பேர் காயம்!

வடகிழக்கு தில்லியின் வெல்கம் பகுதியில் நான்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒரு வயதுக் குழந்தை உள்பட 8 பேர் காயமடைந்தனர். சம்பவ நடைபெற்ற இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமான விபத்து: மேடே அழைப்புக்கு முன் நடந்தது என்ன? இறுதி வினாடிகள்

புது தில்லி: அகமதாபாத் ஏா் இந்தியா விமான விபத்து தொடா்பாக விசாரித்து வரும் விமான விபத்து புலனாய்வு அமைப்பு (ஏஏஐபி) அதன் முதல்கட்ட அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது.கடந்த ஜூன் 12ஆம் தேதி, குஜராத் மாநில... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் வென்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும்: அமித் ஷா அறிவிப்பு

தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதளுக்கு அளித்த நேர்காணலில் அமை... மேலும் பார்க்க

இன்ஜின் சுவிட்சுகள் அணைக்கப்பட்டதா? ஏர் இந்தியா விசாரணை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்!

அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக முதல்கட்ட விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து கடந்த ஜூன் 12-ஆம் தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் ‘ஏஐ 171’ விமானம், வானில் பறக்கத... மேலும் பார்க்க