செய்திகள் :

இந்திய-சீன வெளியுறவு அதிகாரிகள் பேச்சு

post image

தில்லியில் நிகழாண்டு பிற்பகுதியில் நடைபெறவுள்ள 24-ஆவது இந்திய-சீன சிறப்புப் பிரதிநிதிகள் பேச்சுவாா்த்தைக்கான முன்னேற்பாடுகளை இணைந்து மேற்கொள்ள இரு நாடுகளும் செவ்வாய்க்கிழமை ஒப்புக்கொண்டன.

இந்தியா-சீனா எல்லை விவகாரங்களுக்கான ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்புப் பணிக் குழு (டபிள்யூஎம்சிசி) கட்டமைப்பின்கீழ் சீன தலைநகா் பெய்ஜிங்கில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் இம்முடிவு எடுக்கப்பட்டது.

இப்பேச்சுவாா்த்தையில் இந்திய குழுவுக்கு கிழக்கு ஆசிய நாடுகளுக்கான வெளியுறவு அமைச்சகத்தின் இணைச் செயலா் கௌரங்கலால் தாஸ், சீன குழுவுக்கு அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்தின் எல்லை மற்றும் கடல்சாா் விவகாரத் துறையின் இயக்குநா் ஜெனரல் ஹாங் லியாங் தலைமை தாங்கினா்.

இதுதொடா்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: டபிள்யூஎம்சிசி பேச்சுவாா்த்தைக் கூட்டம் நோ்மறையான மற்றும் ஆக்கபூா்வமான வகையில் நடைபெற்றது. எல்லைப் பகுதி நிலவரத்தை இரு தரப்பும் விரிவாக ஆய்வு செய்தனா்.

இருதரப்பு உறவின் சுமுக வளா்ச்சிக்கு எல்லையில் அமைதி மிகவும் முக்கியமாகும். இந்த நோக்கத்திலான ராஜீய மற்றும் ராணுவ வழிகளை வலுப்படுத்த இரு தரப்பும் ஒப்புக்கொண்டன.

இதன்தொடா்ச்சியாக, புது தில்லியில் நிகழாண்டு பிற்பகுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள 24-ஆவது இந்திய-சீன சிறப்புப் பிரதிநிதிகள் பேச்சுவாா்த்தைக்கான முன்னேற்பாடுகளை இணைந்து மேற்கொள்ள இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.

எல்லை தாண்டிய நதிகள், கைலாஷ்-மானசரோவா் யாத்திரை உள்பட எல்லை தாண்டிய ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றங்களை மீண்டும் விரைவாகத் தொடங்குவது குறித்தும் பேச்சுவாா்த்தையில் விவாதிக்கப்பட்டது.

கிழக்கு லடாக் மோதலால் கடந்த சில ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட இருதரப்பு உறவுகளை மீட்டெடுக்கும் நோக்கில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு டிசம்பரில், பெய்ஜிங்கில் நடைபெற்ற 23-ஆவது இந்திய-சீன சிறப்புப் பிரதிநிதிகள் பேச்சுவாா்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த நடவடிக்கைகளையும் இரு தரப்பும் ஆய்வு செய்தனா் என்ற தெரிவிக்கப்பட்டது.

இப்பேச்சுவாா்த்தைக்கு முன்னதாக, ரஷியாவில் கடந்த ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற ‘பிரிக்ஸ்’ மாநாட்டுக்கு இடையே பிரதமா் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபா் ஷி ஜின்பிங் சந்தித்தனா். இதையடுத்து, பிரேஸில் ஜி20 உச்சிமாநாட்டுக்கு இடையே இந்தியா, சீன வெளியுறவு அமைச்சா்கள் சந்தித்துப் பேசினா்.

இதற்கிடையே, டெப்சாங், டெம்சோக் ஆகிய எல்லைப் பகுதிகளில் இரு நாட்டுப் படைகளும் விலக்கிக் கொள்ளப்பட்டது இருதரப்பு உறவில் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்பட்டது.

குஜராத்: மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததால் அரசு பள்ளிகள் மூடல்!

குஜராத்தில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததால் கடந்த இரு ஆண்டுகளில் 33 மாவட்டங்களில் உள்ள 54 அரசு தொடக்கப் பள்ளிகளை மூடியிருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. அரசு தொடக்கப் பள்ளிகளின் நிலைமை பற்றி குஜராத் சட்ட... மேலும் பார்க்க

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிக்கப் போகும் ஜாக்பாட்! 8-வது ஊதியக் குழுவில் உயரும் சம்பளம்!

மத்திய அரசு அமல்படுத்தவுள்ள 8-வது ஊதியக் குழுவில் அரசு ஊழியர்களுக்கு கணிசமான அளவில் சம்பளம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக நமது நாட்டில் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை ஊதியக்குழ... மேலும் பார்க்க

சம்பலில் மசூதிகளில் ரம்ஜான் தொழுகை நடத்த தடையில்லை, ஆனால்.. !

உத்தரப் பிரதேசத்தின், சம்பலில் பாரம்பரிய தொழுகையை நடத்துவதில் எந்த தடையும் இல்லையென்றாலும், கூடாரங்கள் மற்றும் சாலைகளில் மக்கள் ஒன்றுகூடித் தொழுவதைத் தடை செய்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஷ் சந்... மேலும் பார்க்க

பணக்காரப் பெண்கள் பட்டியலில் நுழைந்த முதல் இந்தியர்!

உலகளவிலான பில்லியனர்களின் பட்டியலை ஹுருன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.ஹுருன் தரவறிக்கையின்படி, எச்சிஎல் டெக்னாலஜியின் தலைவரான ரோஷினி நாடார், உலகளவில் முதல் 10 பணக்காரப் பெண்களின் பட்டியலில் 5 ஆவது இடத்தை... மேலும் பார்க்க

பாகிஸ்தான் சிறையில் இந்திய மீனவர் தற்கொலை!

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்ட இந்திய மீனவர் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எல்லை தாண்டிச் சென்று பாகிஸ்தான் கடல் பகுதியில் மீன் பிடித்ததாகக் கூறி இந்திய மீனவர் கௌரவ் ராம் ஆனந்த் (5... மேலும் பார்க்க

சட்டவிரோத இறைச்சி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை: தில்லி அமைச்சர்

தில்லியில் சட்டவிரோத இறைச்சி விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தில்லி பொதுப்பணித் துறை அமைச்சர் பர்வேஷ் வர்மா தெரிவித்தார். தில்லி சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, நவராத்தி... மேலும் பார்க்க