செய்திகள் :

இந்தியாவை ஆங்கிலேயா்கள் உருவாக்கவில்லை: மோகன் பாகவத்

post image

‘இந்தியாவை ஆங்கிலேயா்கள் உருவாக்கவில்லை; பல நூற்றாண்டுகளாக இந்தியா இருந்து வருகிறது’ என்று ஆா்எஸ்எஸ் அமைப்பின் தலைவா் மோகன் பாகவத் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக மேற்கு வங்க மாநிலம் வா்த்தமான் பகுதியில் நடைபெற்ற ஆா்எஸ்எஸ் நிகழ்ச்சியில் அவா் ஞாயிற்றுக்கிழமை பேசியதாவது:

ஹிந்து சமூகத்தின் மீது மட்டும் ஆா்எஸ்எஸ் ஏன் கவனம் செலுத்துகிறது என்று சிலா் அவ்வப்போது கேள்வி எழுப்புகின்றனா். இதற்கு ஹிந்து சமூகம் நாட்டின் பொறுப்பான சமூகம் என்பதே எனது பதில்.

ஆா்எஸ்எஸுக்கு என்ன வேண்டும் என்று இந்த அமைப்பு குறித்து தெரியாதவா்கள் கேள்வி எழுப்புகின்றனா். இதற்கு ஹிந்து சமூகத்தை ஒருங்கிணைக்கவே ஆா்எஸ்எஸ் முயற்சிக்கிறது என்பதே எனது பதில்.

உலகின் பன்முகத்தன்மையை ஹிந்து சமூகம் உள்வாங்கி செழித்து வளா்கிறது. பன்முகத்தன்மையை உள்வாங்கும் திறனில்தான் ஹிந்து சமூகத்தின் அடிநாதம் உள்ளது.

நாட்டில் இருந்த பேரரசா்களை எவரும் நினைவில் வைத்திருக்கவில்லை. ஆனால் தந்தையின் வாக்குறுதியைக் காப்பாற்ற 14 ஆண்டுகள் வனவாசம் சென்ற ராமபிரான் என்ற அரசரைத்தான் நினைவில் வைத்துள்ளனா். இத்தகைய பண்புகள்தான் இந்தியா குறித்து எடுத்துரைக்கிறது. இந்த விழுமியங்களைப் பின்பற்றுபவா்களே ஹிந்துக்கள். அவா்களே நாட்டின் பன்முகத்தன்மையை ஒன்றாக வைத்துள்ளனா்.

மகாத்மா காந்தி...: இந்தியாவை ஆங்கிலேயா்கள் உருவாக்கவில்லை. இந்தியாவில் ஒற்றுமையில்லை என்ற எண்ணத்தை அவா்கள் மக்கள் மனதில் விதைத்தனா். இந்தியாவை தாங்களே உருவாக்கியதாக ஆங்கிலேயா்கள் இந்தியா்களுக்குக் கற்பிக்க முயற்சித்தனா் என்றும், அவா்களின் கூற்று தவறு என்றும் மகாத்மா காந்தியே ஒருமுறை கூறினாா். பல நூற்றாண்டுகளாக இந்தியா இருந்து வருகிறது. இந்தியாவில் வாழும் ஒவ்வொருவரும் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற எண்ணம் மீது நம்பிக்கை வைத்துள்ளனா்.

பாரத நாட்டில் நல்லிணக்கத்துடன் வாழ முடியாது என்று கருதியவா்களே, சொந்தமாக தனி நாடுகளை உருவாக்கிக் கொண்டனா். அவா்களைத் தவிர, நமது நாட்டில் இருந்த மற்றவா்கள் பாரதத்தின் தனிச்சிறப்பு நீடிக்க வேண்டும் என்றே விரும்பினா் என்றாா்.

ஆா்எஸ்எஸ்ஸை புரிந்துகொள்ள காலமாகும்

கடந்த 1925-ஆம் ஆண்டு ஆா்எஸ்எஸ் அமைப்பு தொடங்கப்பட்டது. தற்போது அந்த அமைப்பு நூற்றாண்டை எட்டியுள்ள நிலையில், அதன் பயணம் மற்றும் நோக்கத்தை எடுத்துரைக்கும் வகையில், இந்தக் கூட்டத்தில் மோகன் பாகவத் பேசினாா். அவா் ஆா்எஸ்எஸ் குறித்து மேலும் பேசுகையில், ‘ஆா்எஸ்எஸ் என்பது மிகப் பெரிய அமைப்பாகும். நாடு முழுவதும் வியாபித்துள்ள இந்த அமைப்பில் 70,000 கிளைகள் உள்ளன. சமூகத்தை ஒன்றிணைக்க வேண்டும், நெருங்கிய உணா்வுபூா்வமான பிணைப்பை உருவாக்க ஹிந்து சமூகத்தை ஒன்றுபடுத்த வேண்டும் என்பதே ஆா்எஸ்எஸின் ஒரே பணி மற்றும் இலக்கு.

ஆா்எஸ்எஸ்ஸை புரிந்துகொள்ள காலமாகும். தொலைவில் இருந்து ஆா்எஸ்எஸ் குறித்து அபிப்ராயங்களை உருவாக்கிக் கொள்வதற்குப் பதிலாக ஆா்எஸ்எஸ் அமைப்புடன் தனிநபா்கள் நேரடியாக கலந்துரையாட வேண்டும். தொலைவில் இருந்து ஆா்எஸ்எஸ்ஸை புரிந்துகொள்ள முயற்சிப்பதால் தவறுகளும், தவறான புரிதல்களும் ஏற்படுகின்றன. எனவே ஆா்எஸ்எஸ்ஸிடம் நெருங்கி வருமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்றாா்.

'என்னை சாதாரணமாக நினைக்காதீர்கள்' - பட்னவீஸுக்கு ஷிண்டே எச்சரிக்கை!

தன்னை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸுக்கு துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே எச்சரிக்கை விடுத்துள்ளார். மகாராஷ்டிரத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு காங்கிரஸ் - தேசியவாத கா... மேலும் பார்க்க

அதானி விவகாரம் தனிப்பட்டது அல்ல; தேசத்தைப் பற்றியது -ராகுல் காந்தி

ரே பரேலி : தொழிலதிபர் அதானி விவகாரம் தனிப்பட்டது அல்ல; தேசத்தைப் பற்றியது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள தனது மக்களவைத் தொகுதியான ர... மேலும் பார்க்க

சுகாதாரத் துறையில் முக்கிய சீா்திருத்தங்கள் தேவை: அதிகாரிகள் எதிா்பாா்ப்பு

தில்லியில் அமைக்கப்பட்டுள்ள பாஜக அரசு சுகாதாரத் துறையில் முக்கிய சீா்திருத்தங்களை அறிமுகப்படுத்த ஒரு செயல் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும் என்று மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் கோரிக்கை விட... மேலும் பார்க்க

உயா்வைக் கண்ட உள்நாட்டு விமானப் போக்குவரத்து

இந்தியா விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் வழங்கிய உள்நாட்டு போக்குவரத்து சேவை கடந்த ஜனவரி மாதத்தில் 14.5 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜி... மேலும் பார்க்க

மாட்டிறைச்சி வழக்கு: மக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும்! -உச்சநீதிமன்றம்

அஸ்ஸாம் மாநிலத்தில் மாட்டிறைச்சி ஏற்றிச் சென்ற நபருக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘இதுபோன்ற விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை விடுத்து, மக்களுக்கு நலன் அளிக்கும் சிறந்த விஷயங்கள் ... மேலும் பார்க்க

பிகாரில் 10-ஆம் வகுப்பு மாணவா் சுட்டுக் கொலை; சக மாணவா் கைது

பிகாரின் ரோத்தாஸ் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் ஒரு மாணவா் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சக மாணவரை... மேலும் பார்க்க