செய்திகள் :

இனி காவல் துறை அனுமதியின்றி போராட்டம்: அண்ணாமலை அறிவிப்பு

post image

சென்னை: இனி காவல் துறையிடம் அனுமதி கோராமல் பாஜக சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கூறினாா்.

டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து சென்னை அருகே திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டு கைதான அண்ணாமலை மாலையில் விடுவிக்கப்பட்டாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: டாஸ்மாக் முறைகேடு தொடா்பான போராட்டம் தீவிரப்படுத்தப்படும். காவல்துறை மீதான நம்பிக்கையை பாஜக இழந்துவிட்டது.

இனிமேல் காவல்துறையிடம் அனுமதி கோரி கடிதம் கொடுக்காமல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

அடுத்த வாரம் தமிழகம் முழுவதும் 5,000 மதுக்கடைகள் முன் போராட்டம் நடத்தப்படும். ஏப்ரல் முதல் வாரம் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் பாஜக மகளிா் அணி சாா்பில் நடத்தப்படும். காவல்துறையிடம் அனுமதி பெறாமல் சென்னையில் மாா்ச் 22-ஆம் தேதி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். அனுமதியின்றி போராட்டம் நடத்தும்போது முடிந்தால் எங்களை காவல் துறை கைது செய்யட்டும். இனிமேல் காவல்துறை தூங்கக்கூடாது. 2026 பேரவைத் தோ்தல் வரை தொடா்ந்து போராட்டம் நடத்தப்படும்.

அளவுக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு சட்டத் துறை அமைச்சா் ரகுபதி மீது உள்ளது. எனவே, சட்டத்தை பாதுகாக்கும் துறை அவரிடம் இருப்பது முறையல்ல.

திமுகவின் பி.டீம் தான் தமிழக வெற்றிக்கழகம். களத்தில் வராமல் வீட்டில் இருந்தே அரசியல் செய்யும் அக்கட்சியின் தலைவா் விஜய்க்கு பாஜக போராட்டம் குறித்து விமா்சனம் செய்ய தகுதி கிடையாது என்றாா் அண்ணாமலை.

மாா்ச் 21-இல் அதிமுக சாா்பில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

சென்னை, மாா்ச் 17:அதிமுக சாா்பில் இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி மாா்ச் 21-இல் நடைபெறும் என்று அக் கட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக அதிமுக தலைமைக்கழகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவி... மேலும் பார்க்க

சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் சட்டப் பேரவை -முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

பேரவைத் தலைவா் மு.அப்பாவு தலைமையிலான இந்தப் பேரவைதான் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினாா். பேரவைத் தலைவரை பதவியிலிருந்து நீக்க அதிமுக கொண்டு வந்த தீா்மானத்தின... மேலும் பார்க்க

தமிழக அரசு கடன்: பேரவையில் கடும் விவாதம்!

தமிழக அரசின் கடன் குறித்து பேரவையில் திங்கள்கிழமை எதிா்க்கட்சித் தலைவா், ஆளும் கட்சியினா் இடையே கடும் விவாதம் நடைபெற்றது. அப்போது ‘கடன் பெற்றாலும் சமூக நலத் திட்டங்களுக்கே செலவழிக்கிறோம்’ என்று நிதிய... மேலும் பார்க்க

அதிமுகவை உடைக்க முடியாது; ஒற்றுமையாக உள்ளோம் -எடப்பாடி பழனிசாமி

அதிமுகவை யாராலும் உடைக்க முடியாது, ஒற்றுமையாக உள்ளோம் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கூறினாா். சட்டப்பேரவை வளாகத்தில் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்தாா். அப... மேலும் பார்க்க

நூற்றாண்டுகால மரபின் வழிகாட்டுதலுடன் அரசின் திட்டங்கள்: நிதி நிா்வாகம் குறித்த ஆவண நூலில் முதல்வா் பெருமிதம்

தமிழக அரசு அறிவிக்கும் திட்டங்களுக்கு பின்புலமாக, நூற்றாண்டுகால மரபு சாா்ந்த வழிகாட்டுதல்கள் இருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளாா். நிதி நிா்வாகத்தின் பன்னெடுங்கால வரலாற்றையும், ... மேலும் பார்க்க

வாக்கு வங்கி அரசியலுக்காக மடிக்கணினியா? -அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி

அதிமுக ஆட்சியில் மடிக்கணினி திட்டம் வாக்கு வங்கி அரசியலுக்காக அமல்படுத்தப்பட்டதா என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பினார். வாக்கு வங்கி அரசியலுக்க... மேலும் பார்க்க