செய்திகள் :

``இன்னும் ட்ரம்பை நம்புகிறதா இந்தியா..." - ஊடகவியலாளரின் கேள்விக்கு அமைச்சர் ஜெய்சங்கரின் பதில்!

post image

இந்தியா - பாகிஸ்தான் இடையே தொடர்ந்த பதற்றமான சூழலில், இந்தியா அனைத்துக்கட்சிகளின் தூதுக்குழு ஒன்றை உலக நாடுகளுக்கு அனுப்பி, 'பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகள்' குறித்து விளக்கமளித்து வருகிறது. அதன் அடிப்படிடையில் அமெரிக்கா சென்ற அந்தத் தூதுக்குழு அமெரிக்க அரசுக்கும் விளக்கமளித்தது. ஆனால், அமெரிக்கா மிகத் தெளிவாக 'எங்களுக்கு இந்தியாவின் உறவும் வேண்டும். பாகிஸ்தான் உறவும் வேண்டும்' என வெளிப்படையாகக் கூறியிருக்கிறது.

மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

மேலும், 'இந்தியாவைப் போலவே பாகிஸ்தானும் பயங்கரவாதத்துக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது' எனவும் தெரிவித்திருக்கிறது.

அமைச்சரிடம் கேள்வி:

இந்த நிலையில், பெல்ஜியம் சென்றிருந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் ஐரோப்பிய ஊடக வலையமைப்பான யூராஆக்டிவ் நேர்காணல் ஒன்றை நடத்தியது.

அதில், ``நீங்கள் (இந்தியா) இன்னும் ட்ரம்பை நம்புகிறீர்களா?" எனக் கேள்வி எழுப்பியது. இந்தக் கேள்விக்கு பொருளென்ன என அமைச்சர் ஜெய்சங்கர் மீண்டும் அவர்களிடமே விளக்கம் கேட்டார். அதற்கு அந்த ஊடகவியலாளர், ``ட்ரம்ப் தனது வார்த்தைக்கு ஏற்றவாறு நல்லவரா? அவர் இந்தியாவுடன் உறவுகளை தொடர விரும்பும் கூட்டாளியா? அவரின் வார்த்தைகளை எந்தளவு நம்புகிறீர்கள்?" எனக் விளக்கமாக கேள்வி கேட்டது.

மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

அமைச்சர் ஜெய்சங்கரின் பதில்:

அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெய்சங்கர், ``நான் உலகை நான் எப்படிக் காண்கிறேனோ அப்படியே எடுத்துக்கொள்கிறேன். எங்கள் நலன்களைக் காக்க, எங்களுக்கு கிடைக்கும் ஒவ்வொரு உறவையும் மேம்படுத்துவதே எங்கள் நோக்கம். அதன் அடிப்படையில் அமெரிக்கவின் உறவு இந்தியாவுக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. எங்களின் உறவு ஆளுமையாளர்களுக்கு மத்தியில் இல்லை. எங்களின் உறவு இரு நாடுகளுக்கு மத்தியிலானது" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Vijay: "இளைய காமராஜர்னு சொல்லாதீங்க; தேர்தல் பற்றி பேச வேண்டாம்" - மாணவர்கள் மத்தியில் விஜய் பேச்சு

தவெக சார்பில் கல்வி விருது வழங்கும் விழாவை, அதன் தலைவர் விஜய் நடத்தி வருகிறார். 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவர்களைத் தொகுதிவாரியாக அழைத்துப் பாராட்டி வருகிறார்.Vijayஇரண்டுக... மேலும் பார்க்க

Ahmedabad Plane Crash : 'அடுத்த நொடி நிச்சயமில்லாத வாழ்க்கை...' - விஜய் வருத்தம்!

'தவெக கல்வி விழா!'தவெக தலைவர் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவர்களை பாராட்டும் வகையில் கல்வி விருது வழங்கும் விழாவை நடத்தி வருகிறார். மாமல்லபுரத்தில் நடந்த இந்த நிகழ்வில் அகமத... மேலும் பார்க்க

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்; 'இன்னும் ஒரு போரா?' - கைவிரித்த அமெரிக்கா; என்ன நடக்கிறது?

இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் மீண்டும் சண்டை தொடங்கியுள்ளது.நேற்று இரவு, ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் தொடங்கியிருக்கிறது. ஈரான் அணு ஆயுதத்தைத் தயாரித்துவிடுமோ என்கிற இஸ்ரேலின் அச்சம்தான் இந்தத் த... மேலும் பார்க்க

Ahmedabad Plane Crash : பறவை மோதியதா இல்லை மனித தவறா? | Detailed Technical Explanation

அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் 200 க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்திருக்கின்றனர். இந்த விபத்து எப்படி நடந்தது? அவசரகாலங்களில் பயணிகளைக் காப்பாற்ற விமானிகள் என்ன மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபடுவா... மேலும் பார்க்க

"முதல்வர் எங்குச் சென்றாலும் அதிமுக-வினர் கருப்புக்கொடி காட்டுவர்" - எச்சரிக்கும் ஆர்.பி.உதயகுமார்

"மக்கள் வரிப்பணத்தில் நடக்கும், அரசு விழாவில் தொடர்ந்து அதிமுக குறித்து அவதூறு பரப்பினால் அதிமுக தொண்டர்கள், முதலமைச்சருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டத் தயங்க மாட்டார்கள்" என்று முன்னாள் அமைச்சர் ஆர்... மேலும் பார்க்க