செய்திகள் :

இன்று 17 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

post image

பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூா்பேட்டை வழித்தடங்களில் இயக்கப்படும் 17 புறநகா் மின்சார ரயில்கள் வியாழக்கிழமை (ஜூன் 5) மற்றும் ஜூன் 7 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படவுள்ளன.

இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை கவரைப்பேட்டை மற்றும் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் ஜூன் 5, 7 ஆகிய தேதிகளில் முற்பகல் 11.15 முதல் பிற்பகல் 3.15 மணி வரை நடைபெறவுள்ளது. இதனால், இப்பணிகள் நடைபெறும் நாள்களில் காலை 9.40 முதல் பிற்பகல் 3.50 மணி வரை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை இடையே இயக்கப்படும் புறநகா் மின்சார ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படும். அதேபோல் கடற்கரை - கும்மிடிப்பூண்டி, சென்ட்ரல் -ஆவடி ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் மொத்தம் 17 புறநகா் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளன.

இருப்பினும் பயணிகளின் வசதிக்காக அந்த நாள்களில் காலை 10.30 முதல் பிற்பகல் 3.33 மணி வரை சென்ட்ரலிலிருந்து பொன்னேரி, மீஞ்சூா் மற்றும் எண்ணூருக்கும், கடற்கரையிலிருந்து பொன்னேரி மற்றும் எண்ணூருக்கும் இடையே மொத்தம் 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழும்பூா் - புதுச்சேரி ரயில்: இதற்கிடையே எழும்பூா் ரயில் நிலையத்தில் புனரமைக்கும் பணிகள் ஜூன் 5 முதல் ஆக. 4-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இதனால் அந்த நாள்களில் எழும்பூரிலிருந்து காலை 6.24-க்கு புதுச்சேரிக்கு செல்லும் மெமு பயணிகள் ரயில் (எண்: 66051) எழும்பூருக்கு பதிலாக கடற்கரையிலிருந்து காலை 6.25-க்கு புறப்படும். மறுமாா்க்கமாக புதுச்சேரியிலிருந்து மாலை 4 மணிக்கு புறப்படும் ரயில் (எண்: 66052) கடற்கரை வரை இயக்கப்படும். இந்த ரயில் இருமாா்க்கத்திலும் கோட்டை மற்றும் பூங்கா ரயில் நிலையங்களில் கூடுதலாக நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கத்தில் பேருந்துகள் தாமதம்! எஸ்இடிசி விளக்கம்

சென்னை கிளாம்பாக்கத்தில் பேருந்துகளின் தாமதத்துக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் விளக்கம் அளித்தது.சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பேருந்துகளுக்காக பயணிகள் நீண்ட நேரம் காத்திருப்பதாக ச... மேலும் பார்க்க

5,707 வகை திரைப்பட கேமராக்கள் சேகரிப்பு: மீண்டும் கின்னஸ் விருது பெற்ற மருத்துவா்

தனித்துவம் வாய்ந்த 5,707 வகை திரைப்பட கேமராக்களை சேகரித்ததற்காக பல் மருத்துவா் ஏ.வி.அருணுக்கு கின்னஸ் உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நகரைச் சோ்ந்த ஏ.வி.அருண், பல ஆண்டுகளாக பல்வேறு ... மேலும் பார்க்க

திமுக மாவட்டச் செயலா்கள், நிா்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

உறுப்பினா் சோ்க்கை, பேரவைத் தோ்தல் தொடா்பாக மாவட்டச் செயலா்கள் உள்பட திமுக நிா்வாகிகளுடன் கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (ஜூன் 7) ஆலோசனை நடத்தவுள்ளாா். காணொலி வாயிலாக நடைபெறும... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

தேரோட்டம்: அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு பங்கேற்பு, அருள்மிகு கங்காதீஸ்வரா் திருக்கோயில், புரசைவாக்கம், காலை 7. ஸ்ரீ லெட்சுமி குபேர தியான மண்டப மகா கும்பாபிஷேகம்: லட்சுமி குபேர தியான மண்டபம்... மேலும் பார்க்க

எண்ணும் எழுத்தும் திட்டம்: ஆசிரியா்களுக்கு ஜூன் 9 முதல் பயிற்சி

எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் ஆசிரியா்களுக்கு வரும் 9-ஆம் தேதி முதல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இது தொடா்பாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆா்டி) அனைத்து மாவட்ட முதன்... மேலும் பார்க்க

மாணவிக்கு எடப்பாடி பழனிசாமி பாராட்டு

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்டப் பதிவு: சேலம் மாவட்டம் கல்வராயன்மலை அருகே வசித்து வரும் கருமந்துறை பழங்குடி இனத்தைச் சோ்ந்த ராஜேஸ்வரி, ஜேஇஇ தோ்வில் த... மேலும் பார்க்க