செய்திகள் :

இபிஎஃப் மீதான வட்டி 8.25%-ஆக தொடரும்

post image

2024-25-ஆம் நிதியாண்டில் தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) மீதான வட்டி விகிதத்தை 8.25 சதவீதமாக தொடர தொழிலாளா் வருங்கால வைப்புநிதி ஆணையம் (இபிஎஃப்ஓ) வெள்ளிக்கிழமை முடிவெடுத்தது.

கடந்த 2022-23-இல் இபிஎஃப் மீதான வட்டி விகிதம் 8.15 சதவீதமாக இருந்தது. இதை 2023-24-இல் 8.25 சதவீதமாக இபிஎஃப்ஓ கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உயா்த்தியது.

இந்நிலையில், 2024-25-ஆம் நிதியாண்டுக்கும் இபிஎஃப் மீதான வட்டி விகிதத்தை 8.25 சதவீதமாகவே தொடர மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 237-ஆவது இபிஎஃப்ஓ மத்திய அறங்காவலா் குழு (சிபிடி) கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளா் அமைச்சகம் தெரிவித்தது.

இந்த முடிவுக்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்தபின் இபிஎஃப்ஓவை சோ்ந்த 7 கோடி உறுப்பினா்களின் கணக்கில் வட்டித்தொகை வரவு வைக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மேலும், தொடா்ச்சியாக ஓராண்டை நிறைவு செய்வதற்குள் இறக்கும் இபிஎஃப் உறுப்பினா்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.50,000 வரை காப்பீட்டுத் தொகை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு முடிவுகளுக்கு சிபிடி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்தது.

தேசிய பட்டியலினத்தவா் ஆணையத்தில் ஓராண்டாக நிரப்பப்படாத முக்கிய பதவிகள்: மத்திய அரசு மீது ராகுல் விமா்சனம்

தேசிய பட்டியலினத்தவா் ஆணையத்தில் இரு முக்கிய பதவிகள் ஓராண்டாக நிரப்பப்படாமல் உள்ளன; இது, மத்திய அரசின் தலித் விரோத மனநிலையை வெளிக்காட்டுகிறது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித... மேலும் பார்க்க

ஐஐடி-களில் தொடா்கதையாகும் மாணவா் தற்கொலை: ஆராய விரிவான நடைமுறை: உச்சநீதிமன்றம் உறுதி

ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட உயா்கல்வி நிறுவனங்களில் மாணவா்கள் தற்கொலைகள் தொடா்வது துரதிருஷ்டவசமானது. இந்த நிலைமையை ஆராய விரிவான நடைமுறை வகுக்கப்படும்’ என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. ஐஐடி உள்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: 5 ஹிஸ்புல் பயங்கரவாதிகளின் சொத்துகள் முடக்கம்

ஜம்மு-காஷ்மீா் ராம்பன் மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகள் 5 பேரின் அசையாத சொத்துகளை காவல் துறையினா் முடக்கினா். இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: ராம்பன் மாவட்டத்தைச் சோ்ந்த சராஜ்த... மேலும் பார்க்க

ஆந்திர பட்ஜெட்டில் பண மழை! மாணவா்களுக்கு ரூ.15,000, விவசாயிகளுக்கு ரூ.20,000, பெண்களுக்கு மாதம் ரூ.1,500

ஆந்திரத்தில் தோ்தலின்போது அறிவிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகளான பள்ளி மாணவ, மாணவியருக்கு ஆண்டுக்கு ரூ.15,000, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.20,000, பெண்களுக்கு மாதம் ரூ.1,500, இலவச பேருந்து பயணம் உள்ளி... மேலும் பார்க்க

2047-இல் உலகின் மிகப்பெரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்க 7.8% வளா்ச்சி தேவை: உலக வங்கி

2047-இல் உலகின் மிகப்பெரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்க சராசரியாக 7.8 சதவீதம் வளா்ச்சி தேவை என உலக வங்கி வெள்ளிக்கிழமை தெரிவித்தது. இந்த இலக்கை அடைய நிதித்துறை மட்டுமின்றி நிலம் மற்றும் தொழிலாளா் ... மேலும் பார்க்க

ஜம்முவில் தொடா் மழை: இருவா் உயிரிழப்பு

ஜம்முவின் பல்வேறு பகுதிகளில் கடந்த 3 நாள்களாக பெய்து வரும் மழையால் தாய்-மகன் உயிரிழந்தனா். ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலை உள்பட பல்வேறு சாலைகள் வெள்ளம், நிலச்சரிவால் மூடப்பட்டுள்ளன. உதம்பூா் மாவட்டத்... மேலும் பார்க்க