செய்திகள் :

இபிஎஸ் பொதுச் செயலாளராக இருக்கும் வரை அதிமுக ஆட்சிக்கு வராது: டிடிவி தினகரன்

post image

எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக இருக்கும்வரை அதிமுக ஆட்சிக்கு வராது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

"துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அருமையான ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார். 'எங்களது வெற்றியின் ரகசியமே பழனிசாமிதான். அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நீடிக்க வேண்டும். அவர் 100 ஆண்டுகள் வாழ வேண்டும். அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால் வெற்றி எங்களுக்கு சுலபம்' என்று கூறுகிறார்.

திமுகவுக்கு கூட்டணி பலம் எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் பழனிசாமிதான் அவர்களது வெற்றியின் ரகசியம் என்பதை போட்டு உடைத்துவிட்டார். இதை ஜெயலலிதாவின் தொண்டர்கள், அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்று முயற்சி செய்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக இருக்கும்வரை அது திமுகவுக்கு வெற்றியைத் தரும் என்று உதயநிதி உண்மையைச் சொல்லியிருக்கிறார். அவர் சிலேடையாக சொல்லியிருந்தாலும் வஞ்சப் புகழ்ச்சியாக சொல்லியிருந்தாலும் அவர் சொல்லியது உண்மைதான்.

சுயநலமிக்க துரோக சிந்தனையுள்ள பழனிசாமி, அதிமுக பொதுச் செயலாளராக இருக்கும்வரை அதிமுக ஆட்சிக்கு வராது என்பதுதான் உண்மை" என்று கூறியுள்ளார்.

TTV Dinakaran says that AIADMK will not come to power as long as EPS is ADMK general secretary

இதையும் படிக்க | திமுகவின் மக்கள் விரோதப் போக்குக்கு 2026 தேர்தலில் மக்கள் முடிவு கட்டுவார்கள்: அண்ணாமலை

ஜிஎஸ்டி சீரமைப்பால் பால் விலையில் எந்த மாற்றமும் இருக்காது: அமுல் நிர்வாகம் அறிவிப்பு

புது தில்லி: செப்டம்பர் 22 முதல் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மாற்றங்கள் காரணமாக பாக்கெட் செய்யப்பட்ட பால் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று அமுல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாட்டின் மிகவும... மேலும் பார்க்க

முல்லைப் பெரியார் அணையில் துணை மேற்பார்வை குழு ஆய்வு!

தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தென்மண்டல இயக்குநர் கிரிதர் தலைமையில் 5 பேர் கொண்ட துணை மேற்பார்வை குழு ஆய்வு செய்தனர்.பெரியார் வைகை படுகை வட்ட மேற்பார்வை பொறியாளர் சாம் இர்பின், கம்பம் கோட்டம் முல... மேலும் பார்க்க

திமுகவின் மக்கள் விரோதப் போக்குக்கு 2026 தேர்தலில் மக்கள் முடிவு கட்டுவார்கள்: அண்ணாமலை

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியை திமுக அரசு நலத்திட்டங்களை வழங்குவதற்காக பள்ளிக்கு விடுமுறை அளித்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, திமுகவின் மக்கள்... மேலும் பார்க்க

Untitled Sep 11, 2025 09:10 am

மேட்டூர் அணை நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 119.73 அடியாக சரிந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 11,275 கன அடியிலிருந்து வினாடிக்கு 11,717 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.அணையில் இருந்து காவிரி ... மேலும் பார்க்க

ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் மேலும் 2 பேர் கேது

ஆடுதுறை பேரூராட்சி மன்றத் தலைவரை குண்டு வீசி கொலை செய்ய முயன்ற வழக்கில் மேலும் 2 பேரைப் போலீஸாா் கைது செய்துள்ளனா்.கும்பகோணம் அருகே ஆடுதுறை பேரூராட்சி மன்றத் தலைவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் 2 பேர் க... மேலும் பார்க்க

சேலத்தில் கடத்தப்பட்ட 9 மாத பெண் குழந்தை நாமக்கல்லில் மீட்பு

சேலத்தில் காவல் நிலையம் அருகே கடத்தப்பட்ட 9 மாத பெண் குழந்தை நாமக்கல்லில் பத்திரமாக மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். சேலம் பஞ்சதாங்கி ஏரி பகுதியைச் சேர்ந்தவர் மதுரை. இவர் தனது மனைவி பிரியா மற்று... மேலும் பார்க்க