செய்திகள் :

ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் மேலும் 2 பேர் கேது

post image

ஆடுதுறை பேரூராட்சி மன்றத் தலைவரை குண்டு வீசி கொலை செய்ய முயன்ற வழக்கில் மேலும் 2 பேரைப் போலீஸாா் கைது செய்துள்ளனா்.

கும்பகோணம் அருகே ஆடுதுறை பேரூராட்சி மன்றத் தலைவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் 2 பேர் கைதாகியுள்ள நிலையில், மேலும் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை பேரூராட்சி மன்றத்தலைவராக இருப்பவா் ம.க. ஸ்டாலின் (55). இவா் தனது ஆதரவாளா்களுடன் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்தபோது, அங்குவந்த சிலா் நாட்டு வெடிகுண்டுகளை வீசி அவரைக் கொலை செய்ய முயன்றனா். அவா்களை பிடிக்க முயன்ற 2 பேரை அவா்கள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினா்.

இதில், கும்பகோணம் அருகே உடையாளூரைச் சோ்ந்த லட்சுமணன், போலீஸாா் விசாரணைக்கு பயந்து திங்கள்கிழமை அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இந்நிலையில், இந்த வழக்கில் போலீஸாா் குற்றவாளிகளைத் தேடி வந்த நிலையில் திருவிடைமருதூா் கீழ தூண்டி விநாயகன்பேட்டையைச் சோ்ந்த பிரபல ரெளடி லாலி மணிகண்டனின் அண்ணன் மகேஷ் மற்றும் இதே பகுதியைச் சோ்ந்த மருதுபாண்டி ஆகிய இருவரையும் புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா். மற்றவா்களை தேடி வந்தனா்.

இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய சேரன், சஞ்சய் ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் பேரூராட்சி அலுவலகத்தில் வெடிகுண்டு வீச எந்த வழியாக வரவேண்டும் என்பதைத் திட்டமிட்டவர்கள் என்று கூறப்படுகிறது.

ரூ. 2.19 லட்சம் இழப்பீடு: மாருதி நிறுவனத்துக்கு குறைதீா் ஆணையம் உத்தரவு

Police have arrested two more people in connection with the attempted assassination of the Aduthurai Town Panchayat Chairman by throwing a bomb.

முல்லைப் பெரியார் அணையில் துணை மேற்பார்வை குழு ஆய்வு!

தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தென்மண்டல இயக்குநர் கிரிதர் தலைமையில் 5 பேர் கொண்ட துணை மேற்பார்வை குழு ஆய்வு செய்தனர்.பெரியார் வைகை படுகை வட்ட மேற்பார்வை பொறியாளர் சாம் இர்பின், கம்பம் கோட்டம் முல... மேலும் பார்க்க

திமுகவின் மக்கள் விரோதப் போக்குக்கு 2026 தேர்தலில் மக்கள் முடிவு கட்டுவார்கள்: அண்ணாமலை

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியை திமுக அரசு நலத்திட்டங்களை வழங்குவதற்காக பள்ளிக்கு விடுமுறை அளித்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, திமுகவின் மக்கள்... மேலும் பார்க்க

Untitled Sep 11, 2025 09:10 am

மேட்டூர் அணை நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 119.73 அடியாக சரிந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 11,275 கன அடியிலிருந்து வினாடிக்கு 11,717 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.அணையில் இருந்து காவிரி ... மேலும் பார்க்க

சேலத்தில் கடத்தப்பட்ட 9 மாத பெண் குழந்தை நாமக்கல்லில் மீட்பு

சேலத்தில் காவல் நிலையம் அருகே கடத்தப்பட்ட 9 மாத பெண் குழந்தை நாமக்கல்லில் பத்திரமாக மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். சேலம் பஞ்சதாங்கி ஏரி பகுதியைச் சேர்ந்தவர் மதுரை. இவர் தனது மனைவி பிரியா மற்று... மேலும் பார்க்க

வேளச்சேரியில் தொழிலதிபர் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத் துறை சோதனை

சென்னை வேளச்சேரியில் கட்டுமான பணிகளை செய்து வரும் தொழிலதிபர் வீடு, அலுவலகங்களில் புதன்கிழமை காலை முதல் அமலாக்கத்துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.அடையார் காந்திநகர், மேற்கு மாம்பலம் பகுதி... மேலும் பார்க்க

சென்னை கிண்டி, அடையாறு பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

சென்னை கிண்டி, அடையாறு பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.சென்னை அடையாறு பகுதியில் உள்ள மருத்துவர் இந்திரா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு... மேலும் பார்க்க