செய்திகள் :

இரட்டிப்புப் பணம் தருவதாக ரூ.3 கோடி மோசடி: நிதி நிறுவன உரிமையாளர் கைது!

post image

ஆவடி: ஆவடியில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி இரட்டிப்பாக்கி பணம் தருவதாகக் கூறி, ரூ.3 கோடி மோசடி செய்த வழக்கில், நிறுவன உரிமையாளரை ஆவடி போலீஸார் சனிக்கிழமை(ஏப். 6) கைது செய்தனர்.

ஆவடி, காமராஜர் நகர் பிரதான சாலையில் தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் உரிமையாளர் ராணிப்பேட்டை, திரு வி.க நகர், 5-ஆவது தெருவைச் சேர்ந்த குப்பன் என்ற பிரவீன்ராஜ் 54. இந்த நிறுவனத்தில் ரூ.1 லட்சம் செலுத்தினால், குறிப்பிட்ட காலத்தில் இரட்டிப்புப் பணம் தருவதாக ஆசைவார்த்தை கூறியுள்ளனர். இதனை நம்பி சென்னை, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்டோர் பணம் செலுத்தியுள்ளனர். இவர்களுக்கு குறிப்பிட்ட காலம் முடிந்தவுடன் அவர்கள் செலுத்திய பணத்திற்கு இரட்டிப்புப் பணம் தரவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து பணம் செலுத்தியவர்கள் பலமுறை நிறுவனத்தை அணுகி பணத்தைக் கேட்ட போது, அவர்கள் பணத்தை தராமல் ஏமாற்றியுள்ளனர்.

தொடர்ந்து நிதி நிறுவனத்தின் உரிமையாளர் பிரவீன்ராஜ் தலைமுறைவாகி விட்டார். இது குறித்து ராணிப்பேட்டை, வாலாஜா வட்டம், கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த அமுதா (39) உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டோர் ஆவடி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அண்மையில் புகார் அளித்தனர். காவல் உதவி ஆய்வாளர் ராஜு தலைமையில் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். அதில் பிரவீன்ராஜ் இரட்டிப்புப் பணம் தருவதாக கூறி சுமார் ரூ.3 கோடி வரை மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து போலீஸார் அவரைத் தேடி வந்த நிலையில், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பிரவீன்ராஜை பிடித்து சனிக்கிழமை (ஏப்.5) காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணைக்கு பிறகு போலீஸார் பிரவீன்ராஜை (படம்) கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன், ரூ.78,000 திருட்டு!

திருவள்ளூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.78,000 திருடப்பட்டன. திருவள்ளூா் அடுத்த பெருமாள்பட்டில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவா் பிரகாஷ். வியா... மேலும் பார்க்க

கைப்பேசிகள் பறிப்பு: 3 போ் கைது

செங்குன்றம் அருகே கைப்பேசி பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட 3 போ் கைது செய்யப்பட்டனா். செங்குன்றம் அடுத்த சோழவரம் சூரப்பட்டு குதிரைப் பள்ளம் கிராமத்தில் ஹாலோ பிளாக் கல் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வர... மேலும் பார்க்க

சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியா் உத்தரவு!

பொன்னேரி அருகே சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளதால், ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அகற்ற வேண்டும் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா். சிறுவாபுரி அ... மேலும் பார்க்க

ராமா், சீதா பஜனைக் கோயில் குடமுழுக்கு!

திருத்தணி அருகே சத்ரஞ்ஜெயபுரம் கிராமத்தில் மகா கணபதி மற்றும் ராமா், சீதா லட்சுமணா் பஜனைக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது. திருத்தணி ஒன்றியம், சத்ரஞ்ஜெயபுரம் கிராமத்தில், இக்கோயிலின் த... மேலும் பார்க்க

மணல் கடத்தல்: 3 போ் கைது

திருவள்ளூா் அருகே கொசஸ்தலை ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்து வாகனங்களை பறிமுதல் செய்தனா். திருவள்ளூா் அருகே மொன்னவேடு கிராமம், கொசஸ்தலை ஆற்றில் சட்டவிரோதமாக ஆட்டோக்கள் மூ... மேலும் பார்க்க

போக்ஸோவில் 2 போ் கைது

ஆா்.கே.பேட்டை அருகே பள்ளி மாணவியை காதலிப்பதாக ஆசை வாா்த்தை கூறி திருமணம் செய்த இளைஞா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா். ஆா்.கே.பேட்டை ஒன்றியம், வங்கனூா் கிராமத்தைச் சோ்ந்த தனபால் (40). இவா்... மேலும் பார்க்க