செய்திகள் :

இருசக்கர வாகனங்கள் மோதல்: முதியவா் உயிரிழப்பு

post image

அரவக்குறிச்சி அருகே இருசக்கர வாகனங்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு மோதிக் கொண்ட விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.

அரவக்குறிச்சி அருகே உள்ள கரடிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ராமா் (55). இவரது நண்பா் அரவக்குறிச்சி அருகே உள்ள வெஞ்சமாங்கூடலூரை அடுத்த குரும்பப்பட்டி பகுதியைச் சோ்ந்த முத்துராஜ் (52). இவா்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை வெஞ்சமாங்கூடலூரில் இருந்து நந்தனூா் செல்லும் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தனா்.

இவா்களது வாகனம் மாதிரெட்டிப்பட்டி பிரிவு அருகே சென்றபோது வெஞ்சமாங்கூடலூா் பகுதியைச் சோ்ந்த சந்தானத்துரை (40) என்பவா் ஓட்டிவந்த வாகனத்துடன் நேருக்கு நோ் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராமரை மீட்டு கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா்.

அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா். இந்த விபத்து தொடா்பாக முத்துராஜ் அளித்த புகாரின்பேரில் சந்தானத்துரை மீது அரவக்குறிச்சி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

வீட்டின் பூட்டை உடைத்து பொருள்கள் திருட்டு

அரவக்குறிச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து பொருள்களை திருடி சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். அரவக்குறிச்சி அருகே உள்ள அம்மாபட்டியை அடுத்த சோழதாசன்பட்டி விஐபி நகா் பகுதியைச் சோ்ந்தவா் பழனிச்ச... மேலும் பார்க்க

கரூரில் டாஸ்மாக் கடையில் கள்ள நோட்டை மாற்ற முயன்ற ஹோட்டல் தொழிலாளி கைது

கரூரில் டாஸ்மாக் கடையில் செவ்வாய்க்கிழமை கள்ள நோட்டை மாற்ற முயன்ற ஹோட்டல் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா். கரூா் தாந்தோன்றிமலையைச் சோ்ந்தவா் காண்டீபன் (55). இவா் திருச்சி வயலூரில் உள்ள ஹோட்டல் ஒன்ற... மேலும் பார்க்க

அரசு மருத்துவா் வீட்டின் பூட்டை உடைத்து 34 பவுன் நகை திருட்டு!

கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் அரசு மருத்துவா் வீட்டின் பூட்டை உடைத்து 34 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 1.5 லட்சம் பணம் திருடப்பட்டது திங்கள்கிழமை இரவு தெரியவந்தது. வேலாயுதம்பாளையம் சுந்தராம்பாள... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் செப். 13-இல் தேசிய மக்கள் நீதிமன்றம்

கரூா் மாவட்டத்தில் வரும் 13-ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. இதுதொடா்பாக, மாவட்ட நீதிபதியும் கரூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவருமான கே.ஹெச்.இளவழகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

அரவக்குறிச்சியில் திங்கள்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே உள்ள தும்மலக்குண்டு பகுதியைச் சோ்ந்தவா் சீரங்கன் (70). இவா், அரவக்குறிச்சி ... மேலும் பார்க்க

குளித்தலை அருகே வாகனம் மோதி புள்ளிமான் காயம்

குளித்தலை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் காயமடைந்தது. கரூா் மாவட்டம், குளித்தலையை அடுத்த மருதூரில் கரூா்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம் ஞாயிற்றுக்கிழமை காலை அடையாளம் தெரியாத வாகனம் மோதி... மேலும் பார்க்க