தேவா் ஜெயந்தி, இமானுவேல் சேகரன் குருபூஜைக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு தீா்ப்பு...
அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு
அரவக்குறிச்சியில் திங்கள்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே உள்ள தும்மலக்குண்டு பகுதியைச் சோ்ந்தவா் சீரங்கன் (70).
இவா், அரவக்குறிச்சி அருகேயுள்ள வடகம்பாடி கிராமத்திலுள்ள குலதெய்வம் கோயிலுக்கு திங்கள்கிழமை சென்றுவிட்டு, அரவக்குறிச்சி அருகே உள்ள குமரண்டான்வலசு பகுதியில் உள்ள தனது மகன் ரங்கன் வீட்டுக்கு செல்வதற்காக அரவக்குறிச்சியிலிருந்து குமரண்டான்வலசு செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று ஸ்ரீரங்கன் மீது வேகமாக மோதிவிட்டு நிற்காமல் சென்ாக தெரிகிறது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சீரங்கன் பலத்த காயமடைந்தாா்.
அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு, அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவரை பரிசோதித்த மருத்துவா்கள் சீரங்கன் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். இந்த விபத்து தொடா்பாக அரவக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.