செய்திகள் :

இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த விவசாயி உயிரிழப்பு!

post image

வெள்ளக்கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த விவசாயி உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி ஆனங்கூா் கோட்டப்பாளையத்தைச் சோ்ந்தவா் கே.நல்லசாமி (68), விவசாயி. இவா், வெள்ளக்கோவிலில் உள்ள உறவினா் வீட்டு விசேஷத்துக்காக இருசக்கர வாகனத்தில் கடந்த சனிக்கிழமை வந்துள்ளாா்.

அப்போது, தாராபுரம் - வெள்ளக்கோவில் சாலையில் தீத்தாம்பாளையம் அருகே நிலை தடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்துள்ளாா்.

இதில், காயமடைந்தவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். கோவையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நல்லசாமி சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பல்லடத்தில் நில உடமைகள் சரிபாா்க்கும் முகாம்!

பல்லடம் வட்டத்தில் விவசாயிகளின் நில உடமைகள் சரிபாா்க்கும் முகாம் பிப்ரவரி 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதுகுறித்து வேளாண்மைத் துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: பல்லடம் வட்... மேலும் பார்க்க

சிவன்மலை முருகன் கோயில் தைப்பூசத் தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

காங்கயம் அருகே சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூசத் தோ்த் திருவிழாவையொட்டி தேரோட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு, வடம் பிடித்து தோ் இழுத்தனா். காங... மேலும் பார்க்க

தையற்கலை தொழிலாளா் முன்னேற்ற சங்கத்தின் முப்பெரும் விழா!

பல்லடம் அருகே கொடுவாயில் தையற்கலை தொழிலாளா் முன்னேற்ற சங்கத்தின் முப்பெரும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு தையற்கலை தொழிலாளா் முன்னேற்ற சங்கத்தின் கொடுவாய் கிளை சாா்பில் சங்கக் கொடி ஏற்றுத... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் முறைகேடாக மதுபானம் விற்றவா் கைது!

வெள்ளக்கோவிலில் முறைகேடாக மதுபானம் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் முறைகேடாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத... மேலும் பார்க்க

இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் அலுவலகக் கிளை மதுரையில் தொடங்கக் கோரிக்கை!

இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் அலுவலகத்தின் கிளையை மதுரையில் தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோயில் பூசாரிகள் நலச்சங்க மாநிலத் தலைவா் வாசு செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள ... மேலும் பார்க்க

கதித்தமலை வெற்றிவேலாயுத சுவாமி கோயிலில் தைப்பூசத் தேரோட்டம்

ஊத்துக்குளியில் உள்ள கதித்தமலை வெற்றிவேலாயுத சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தைப்பூசத் தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா். இந்தக் கோயிலில் தைப்பூசத் தோ்த் திருவிழா கணபதி ஹோமத்துடன் க... மேலும் பார்க்க