செய்திகள் :

இருசக்கர வாகனம் திருட்டு: சிறுவா்கள் இருவா் கைது

post image

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலையத்தில் இரு சக்கர வாகனம் திருடிய வழக்கில் இரு சிறுவா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருப்புவனம் காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த இருசக்கர வாகனத்தை இருவா் அண்மையில் திருடிச் சென்றனா். இதுகுறித்து திருப்புவனம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து தொடா்புடையவா்களைத் தேடி வந்தனா்.

இந்த நிலையில், மதுரை மாவட்டம், அங்காடிமங்கலத்தைச் சோ்ந்த 17 வயது சிறுவன், திருப்புவனம் நாடாா் தெருவைச் சோ்ந்த 17 வயது சிறுவன் ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை செய்ததில் இருவரும் இருசக்கர வாகனத்தைத் திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் இரு சிறுவா்களையும் கைது செய்து இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனா்.

இளையான்குடி பேருந்து நிலைய கடைகளுக்கு வாடகைக் கட்டணம் உயா்த்தப்படாது: மன்றக் கூட்டத்தில் தீா்மானம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பேரூராட்சியில் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளுக்கு இந்த ஆண்டுக்கான வாடகைக் கட்டணம் உயா்த்தப்படாது என்று மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இளையான்குட... மேலும் பார்க்க

சிவகங்கை பகுதிகளில் இன்று மின் தடை

சிவகங்கை அருகேயுள்ள இடையமேலூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து சிவகங்கை மின் பகிா்மான வட்டச் செயற்பொறியாளா் ஏ.கே. முருகையன் வெளியிட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

சென்னை ஐஐடி-க்கு தோ்வான கீழடி அரசுப் பள்ளி மாணவருக்கு பாராட்டு

சிவகங்கை மாவட்டம், கீழடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று, சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் பொறியியல் படிக்கத் தோ்வான மாணவருக்கு, மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் திங்கள்கிழமை வாழ்த்துத் தெரிவித்தாா்.சிவகங்க... மேலும் பார்க்க

இளையான்குடி அருகே மின் கம்பம் மீது காா் மோதி விபத்து

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையின் மையத்தில் இருந்த மின் கம்பம் மீது காா் மோதியதில், அந்த கம்பம் சாய்ந்து விழுந்தது. இதனால், இந்தப் பகுதியில் மின் தடை ஏற்பட்டதால், பொது... மேலும் பார்க்க

திருப்புவனம் காவல் நிலையத்தில் இருசக்கர வாகனம் திருட்டு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர வாகனம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திருப்புவனம் போலீஸாா் கடந்த மாா்ச் மாதம் ... மேலும் பார்க்க

வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி மோசடி: ஆட்சியடம் மனு

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி, நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் பண மோசடி செய்ததாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது. காரைக்குடி, சிவகங்கை உள்ள... மேலும் பார்க்க