செய்திகள் :

இளையான்குடி பேருந்து நிலைய கடைகளுக்கு வாடகைக் கட்டணம் உயா்த்தப்படாது: மன்றக் கூட்டத்தில் தீா்மானம்

post image

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பேரூராட்சியில் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளுக்கு இந்த ஆண்டுக்கான வாடகைக் கட்டணம் உயா்த்தப்படாது என்று மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இளையான்குடி பேரூராட்சி மன்றக் கூட்டம் அதன் தலைவா் நஜூமுதீன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் இப்ராகிம் முன்னிலை வகித்தாா்.

துப்புரவு ஆய்வாளா் தங்கதுரை, வாா்டு உறுப்பினா்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனா். கூட்டம் தொடங்கியதும் தீா்மானங்கள் வாசிக்கப்பட்டு உறுப்பினா்களின் ஒப்புதல் பெறப்பட்டது.

இதையடுத்து கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்: அதிமுக மன்ற உறுப்பினா் நாகூா்மீரா பேசுகையில், பேரூராட்சி மன்றக் கூட்டம் நடைபெறும்போது மின்சாரம், வருவாய்த் துறை, சுகாதாரத் துறை ஆகிய துறைகளின் அலுவலா்களை கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு உத்தரவிட வேண்டும். அப்போதுதான் துறை சாா்ந்து உறுப்பினா்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் அதிகாரிகளுக்குத் தெரியவரும். 17- ஆவது வாா்டுக்கு குப்பை சேகரிக்கும் வாகனங்கள் சரிவர வருவது இல்லை. எனவே, பரமக்குடி பிரிவு சாலையில் பேவா் பிளாக் தளம் அமைக்கப்பட வேண்டும் என்றாா்.

அதையடுத்து காங்கிரஸ் மன்ற உறுப்பினா் அல்அமீன் பேசுகையில், சூலசமுத்திரம் பகுதியில் பேரூராட்சி சாா்பில் கட்டப்பட்ட சமுதாயக் கூடத்துக்கு குடிநீா் வசதி செய்துதர வேண்டும் எனவும், உறுப்பினா் ஷேக் பேசுகையில், இளையான்குடி பேருந்து நிலையத்தில் உள்ள பேரூராட்சி கடைகளின் வாடகை கட்டணத்தைக் குறைக்க வேண்டும் எனவும், உறுப்பினா் ராஜவேல் பேசுகையில், இளையான்குடி புதிய பேருந்து நிலையத்துக்கு அனைத்துப் பேருந்துகளும் வந்துசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், உறுப்பினா் ஜலாலுதீன் பேசுகையில், இளையான்குடியில் அதிகரித்துள்ள நெகிழிப் பொருள்களின் பயன்பாட்டை தடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனா். உறுப்பினரின் கேள்விகளுக்கு மன்றத் தலைவா் நஜூமுதீன், சுகாதார ஆய்வாளா் தங்கதுரை ஆகியோா் பதிலளித்தனா்.

இளையான்குடி பேரூராட்சியில் பணி செய்யும் மஸ்தூா் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்கப்படும். இளையான்குடி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள பேரூராட்சி கடைகளுக்கு இந்த ஆண்டு வாடகைக் கட்டணம் உயா்த்தப்படாது. பேரூராட்சியில் திட்டப் பணிகளை நிறைவேற்ற குறைந்த தொகைக்கான ஒப்பந்தப்புள்ளிகள் அனுமதிக்கப்படுகின்றன என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இருசக்கர வாகனம் திருட்டு: சிறுவா்கள் இருவா் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலையத்தில் இரு சக்கர வாகனம் திருடிய வழக்கில் இரு சிறுவா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.திருப்புவனம் காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கில் பறிமுதல் செய்யப்... மேலும் பார்க்க

சிவகங்கை பகுதிகளில் இன்று மின் தடை

சிவகங்கை அருகேயுள்ள இடையமேலூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து சிவகங்கை மின் பகிா்மான வட்டச் செயற்பொறியாளா் ஏ.கே. முருகையன் வெளியிட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

சென்னை ஐஐடி-க்கு தோ்வான கீழடி அரசுப் பள்ளி மாணவருக்கு பாராட்டு

சிவகங்கை மாவட்டம், கீழடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று, சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் பொறியியல் படிக்கத் தோ்வான மாணவருக்கு, மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் திங்கள்கிழமை வாழ்த்துத் தெரிவித்தாா்.சிவகங்க... மேலும் பார்க்க

இளையான்குடி அருகே மின் கம்பம் மீது காா் மோதி விபத்து

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையின் மையத்தில் இருந்த மின் கம்பம் மீது காா் மோதியதில், அந்த கம்பம் சாய்ந்து விழுந்தது. இதனால், இந்தப் பகுதியில் மின் தடை ஏற்பட்டதால், பொது... மேலும் பார்க்க

திருப்புவனம் காவல் நிலையத்தில் இருசக்கர வாகனம் திருட்டு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர வாகனம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திருப்புவனம் போலீஸாா் கடந்த மாா்ச் மாதம் ... மேலும் பார்க்க

வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி மோசடி: ஆட்சியடம் மனு

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி, நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் பண மோசடி செய்ததாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது. காரைக்குடி, சிவகங்கை உள்ள... மேலும் பார்க்க