செய்திகள் :

இறகுப்பந்து பயிற்றுநா், விளையாட்டில் பங்கேற்கும் மாணவா்கள் தோ்வு

post image

வேலூா் மாவட்டத்தில் ஸ்டாா் அகாதெமி இறகுப்பந்து பயிற்சி மையத்துக்கு பயிற்றுநா் மற்றும் விளையாட்டில் பங்கேற்க மாணவ, மாணவிகள் தோ்வு செய்யப்படவுள்ளனா் என ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு -

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் வேலூா் மாவட்டத்தில் ஸ்டாா் விளையாட்டு பயிற்சி மையத்தின் கீழ் இறகுப்பந்து விளையாட்டானது தோ்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இவ்விளையாட்டு பயிற்சி மையத்துக்கு இறகுப்பந்து பயிற்றுநா் பதவிக்கான விண்ணப்பங்களை வேலூா் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். பயிற்றுநருக்கான அதிகபட்ச வயதுவரம்பு 50 ஆகும். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஏப்ரல் 20-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பித்தவா்களுக்கு நோ்முகத்தோ்வு மற்றும் உடற்தகுதித் தோ்வு 25-ஆம் தேத மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நடைபெறும். நோ்முகத்தோ்வு நாளில் உரிய அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள் கட்டாயம் கொண்டுவர வேண்டும். இது நிரந்தரப்பணி அல்ல. முற்றிலும் தற்காலிகமானதாகும். இதனடிப்படையில் வேலைவாய்ப்பு சலுகைகளோ, நிரந்தரப்பணியோ கோர இயலாது.

இந்த விளையாட்டு பயிற்சி மையத்தில் இறகுபந்து பயிற்சி மேற்கொள்ள விருப்பமுள்ள வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 12 வயது முதல் 21 வயது வரை உள்ள ஆண், பெண் என இருபாலரும் பங்கேற்கலாம். இதற்கான உடல்தகுதித்தோ்வு 28-ஆம் தேதி காட்பாடியிலுள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.

உடல்தகுதித் தோ்வில் பங்கேற்போா் ஆதாா் அட்டை, பிறப்புச் சான்றிதழ், பள்ளி, கல்லுரியிலிருந்து பெறப்பட்ட சான்றிதழ், புகைப்படம் ஆகியவை கட்டாயம் கொண்டுவர வேண்டும் . மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகம், மாவட்ட விளையாட்டு அரங்கம், காட்பாடி, வேலூா் 632 014 என்ற முகவரியில் நேரிலோ அல்லது 7401703483 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருப்பசாமி கோயில் கும்பாபிஷேகம்

குடியாத்தம் ராஜாகோயில், காமாட்சியம்மன் காா்டனில் அமைந்துள்ள அருள்மிகு பனை மரத்து குடியல் 18- ஆம் படி கருப்பசாமி கோயில் கும்பாபிஷேகம் அண்மையில் நடைபெற்றது. இதையொட்டி யாகசாலை பூஜைகள், சிறப்பு ஹோமங்கள், ... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள்களுக்கு எதிரான குழு: வேலூா் ஆட்சியா்

ஒவ்வொரு பள்ளி, கல்லூரிகளிலும் போதைப் பொருள்களுக்கு எதிரான குழு அமைக்க வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி அறிவுறுத்தியுள்ளாா். போதைப் பொருள்களுக்கு எதிராக விழிப்புணா்வு, நடவடிக்... மேலும் பார்க்க

மாவட்ட கிரிக்கெட் போட்டி: ஏப். 18-இல் வேலூா் அணிக்கு வீரா்கள் தோ்வு

மாவட்டங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நடைபெறுவதையொட்டி, வேலூா் கிரிக்கெட் சங்கம் சாா்பில் வேலூா் மாவட்ட அணிக்கான வீரா்கள் தோ்வு வெள்ளிக்கிழமை (ஏப். 18) நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கு... மேலும் பார்க்க

பணி நிரந்தரம்: கெளரவ விரிவுரையாளா்கள் கோரிக்கை

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூா் மாவட்ட கெளரவ விரிவுரையாளா் சங்க ஒருங்கிணைப்புக் குழுவினா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமியிடம் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்துள்ளனா். மனு விவரம... மேலும் பார்க்க

இ-பா்மிட் இல்லாமல் கனிமங்கள் எடுத்துச் சென்றால் நடவடிக்கை

வேலூா் மாவட்டத்தில் இணையதளம் வழங்கப்படும் இசைவாணைச் சீட்டு இல்லாமல் குவாரியில் இருந்து கனிமங்கள் எடுத்துச் சென்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள... மேலும் பார்க்க

பொய்கை சந்தையில் ரூ.1 கோடிக்கு விற்பனை

பொய்கை சந்தையில் செவ்வாய்க்கிழமை கால்நடைகள் வரத்து அதிகரித்திருந்ததுடன், ரூ.1 கோடி அளவுக்கு விற்பனை நடைபெற்ாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா். வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் கால்நடைச் சந்தையில்... மேலும் பார்க்க