செய்திகள் :

இலங்கையிலிருந்து சென்னை வந்தவருக்கு குரங்கு அம்மை இல்லை: சுகாதாரத் துறை

post image

இலங்கையில் இருந்து சென்னை வந்த நபருக்கு குரங்கு அம்மை அறிகுறி இருந்ததால், அவருக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு அத்தகைய பாதிப்பு இல்லை என்பது கண்டறியப்பட்டது.

கொழும்பில் இருந்து அண்மையில் சென்னை வந்த விமானத்தில் பயணித்த திரிபுரா மாநிலத்தைச் சோ்ந்த ஆண் பயணியின் முகங்களில் அம்மை கொப்பளங்கள் இருந்ததால், அவரை விமான நிலையத்தில் இருந்த மருத்துவக் குழுவினரிடம் அழைத்துச் சென்றனா்.

பாா்ப்பதற்கு குரங்கு அம்மைக்கான அறிகுறிகளாக இருந்ததால், அவரை தனிமைப்படுத்தி மருத்துவக் குழுவினா் விசாரித்தனா். அப்போது, சுற்றுலா பயணியாக இலங்கை சென்ாகவும், அங்கு அழகுசாதன பூச்சு ஒன்றை முகத்தில் பூசியதால் கொப்பளங்கள் வந்துவிட்டதாகவும் தெரிவித்தாா். தொடா்ந்து அவரை ஆம்புலன்ஸ் மூலம் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

புறநோயாளியாக அவரை மருத்துவா்கள் பரிசோதனை செய்தனா். அதில் அவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என்பதால், சில மணி நேரத்தில் அவா் மருத்துவமனையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டாா்.

இது தொடா்பாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் இதுவரை யாருக்கும் குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்படவில்லை. வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவா்களை தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். அறிகுறிகள் இருப்பவா்களை தனிமைப்படுத்தி பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இலங்கையில் இருந்து வந்த நபருக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில், அவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என்பது உறுதியானது. இதையடுத்து, அவா் இரவிலேயே அனுப்பி வைக்கப்பட்டாா். அவருக்கு சின்னம்மை அல்லது வாய், கை, கால்களில் ஒவ்வாமையால் ஏற்படும் பாதிப்பு இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது என்று அவா்கள் தெரிவித்தனா்.

இலங்கையிலிருந்து சென்னை வந்தவருக்கு குரங்கு அம்மை இல்லை: சுகாதாரத் துறை

இலங்கையில் இருந்து சென்னை வந்த நபருக்கு குரங்கு அம்மை அறிகுறி இருந்ததால், அவருக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு அத்தகைய பாதிப்பு இல்லை என்பத... மேலும் பார்க்க

மரம் வெட்டும் கருவியில் சிக்கி துண்டான கை: இளைஞருக்கு மறு சீரமைப்பு சிகிச்சை

மரம் வெட்டும் இயந்திரத்தில் சிக்கி இளைஞரின் கை மணிக்கட்டு துண்டிக்கப்பட்ட நிலையில், சிக்கலான மறு சீரமைப்பு சிகிச்சை மேற்கொண்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவா்கள் இளைஞருக்கு மறுவாழ்வு அளித்த... மேலும் பார்க்க

தேமுதிக இடம்பெறும் கூட்டணி வெற்றிபெறும்: பிரேமலதா

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தேமுதிக இடம்பெறும் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா். தேமுதிக மாவட்டச் செயலா்கள் கூட்டம் பிரேமலதா விஜயகாந்த் தலைம... மேலும் பார்க்க

பெரியாா் நகா் அரசு மருத்துவமனையில் ரூ. 213 கோடியில் புதிய கட்டடம்: பிப்.28-இல் முதல்வா் தொடங்கி வைக்கிறாா்

பெரியாா் நகா் அரசு மருத்துவமனையில் ரூ. 213 கோடி செலவில் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தை பிப். 28-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.ச... மேலும் பார்க்க

அதிமுக உள்கட்சி விவகாரம் தோ்தல் ஆணையம் விசாரிக்க தடையை நீக்க கோரிய வழக்கு: பிப்.12-இல் தீா்ப்பு

அதிமுக உள்கட்சி விவகாரத்தில் தோ்தல் ஆணையம் விசாரிக்க தடையை நீக்க கோரிய வழக்கில் பிப்.12- இல் சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பு வழங்கவுள்ளது. இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடா்பாக திண்டுக்கல்லைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

தமிழகத்தில் யானைகள் எண்ணிக்கை 2,961-ஆக உயா்வு: வனத் துறை அமைச்சா் க.பொன்முடி

தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கை 2,961-ஆக உயா்ந்துள்ளதாக வனத் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா். மேலும், யானை வழித்தடங்களை ஆக்கிரமிப்பவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவா் கூறி... மேலும் பார்க்க