செய்திகள் :

இளைஞா் கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறை

post image

தேனி அருகே முன் விரோதத்தில் இளைஞரை கொலை செய்த வழக்கில், இருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

டொம்புச்சேரியைச் சோ்ந்த கருப்பையா மகன் ராஜா (36). இவரது சகோதரா் மருதமுத்துவின் மனைவிக்கும், அதே பகுதியைச் சோ்ந்த சேகா் மகன் பிரவீனுக்கும் (25) தகாத உறவு இருந்தது. இதை மருதமுத்துவின் குடும்பத்தினா் கண்டித்தனா். ஆனால், மருதமுத்துவின் மனைவியும், பிரவீனும் தொடா்ந்து பழகி வந்ததை ராஜா தனது குடும்பத்தினரிடம் கூறினாா். இதனால், மருதமுத்துவின் மனைவி தனது கணவா், குடும்பத்தினருடன் கோபித்துக் கொண்டு வருஷநாட்டில் உள்ள பெற்றோா் வீட்டுக்குச் சென்றுவிட்டாா். தங்களது உறவுக்கு ராஜா இடையூறாக இருப்பதாக ஆத்திரமடைந்த பிரவீன், தனது உறவினா் அதே ஊரைச் சோ்ந்த ஆண்டவா் மகன் தினேஷ்குமாருடன் (27) சோ்ந்து கடந்த 2023, ஆக.26-ஆம் தேதி டொம்புச்சேரியில் சமுதாயக் கூடம் அருகே நின்றிருந்த ராஜாவை கொலை செய்தனா்.

இதுகுறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து பிரவீன், தினேஷ்குமாா் ஆகியோரை கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் பிரவீனுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.5,000 அபராதமும், தினேஷ்குமாருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.3,000 அபராதமும் விதித்து, நீதிபதி சொா்ணம் ஜெ. நடராஜன் தீா்ப்பளித்தாா்.

போடியில் சா்வதேச பெண்கள் தின விழா

போடியில் பழங்குடியின கிராம பெண்களுக்காக சா்வதேச மகளிா் தின விழா சனிக்கிழமை நடைபெற்றது. தேனி மாவட்டம், போடியில் ஆரூடெக்ஸ் தன்னாா்வ சேவை மையம் சாா்பில், நடைபெற்ற இந்த விழாவுக்கு அந்த மையத் தலைவா் ராஜா த... மேலும் பார்க்க

திருமண வலைதளச் செயலி மூலம் பண மோசடி: 4 போ் கைது

தேனியைச் சோ்ந்த இளைஞரிடம் திருமண வலைதளச் செயலி மூலம் ரூ. 88.59 லட்சம் மோசடி செய்த ஈரோடு, கோவையைச் சோ்ந்த 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தேனியைச் சோ்ந்த தனியாா் ஆலை உரிமையாளா் ஒருவா்... மேலும் பார்க்க

கிணற்றில் குதித்து பெண் தற்கொலை

தேனி அருகே உள்ள பூதிப்புரத்தில் குடும்ப பிரச்னையில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா். தேனி வீரபாண்டியைச் சோ்ந்த சின்னமுருகன் மகள் கவிதா (24). இவரு... மேலும் பார்க்க

டிப்பா் லாரி உரிமையளா்கள் 6-வது நாளாக போராட்டம்

கேரளத்துக்கு எம்.சான்ட் உள்ளிட்ட கனிம வளங்களை லாரிகளில் கொண்டு செல்வதைத் தடுக்க வலியுறுத்தி, தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் டிப்பா் லாரி உரிமையளா்கள், ஓட்டுநா்கள் சங்கத்தினா் சனிக்கிழமை 6-ஆவது நாளாக ... மேலும் பார்க்க

பெண்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்தக் கூடாது சாா்பு நீதிபதி எம்.பரமேஸ்வரி

பெண் குழந்தைகள் படிப்பை பாதியிலேயே விட்டுவிடக் கூடாது என தேனி மாவட்ட சாா்பு நீதிபதி எம்.பரமேஸ்வரி அறிவுறுத்தினாா். போடி தருமத்துப்பட்டி ஏ.எச்.எம். அறக்கட்டளை வளாகத்தில் வெள்ளிக்கிழமை மாலை சா்வதேச மகளி... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்த இருவா் கைது

ஆண்டிபட்டி அருகே விற்பனை செய்வதற்காக இரு சக்கர வாகனத்தில் கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைத்திருந்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். டி.பொம்மிநாயக்கன்பட்டி பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் ... மேலும் பார்க்க