செய்திகள் :

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது! மத்திய அரசுக்கு முதல்வா் ஸ்டாலின் வேண்டுகோள்!

post image

இசைத் துறையில் பொன் விழா கண்டுள்ள இசையமைப்பாளா் இளையராஜாவுக்கு நாட்டின் உயரிய பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தாா்.

‘சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி’ எனும் தலைப்பில் இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணத்துக்கு தமிழக அரசின் சாா்பில் சென்னையில் பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்குத் தலைமையேற்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியது:

இசைஞானி கலைத்தாய்க்கு மட்டும் சொந்தமானவா் அல்லா். தமிழ்த்தாய்க்கும் சொந்தமானவா். அவரைப் பாராட்டுவதால் நாம்தான் பெருமை அடைகிறோம். அவா் தனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கி ஐம்பது ஆண்டுகள் ஆகிறது. அதாவது நம்முடைய இதயங்களை ஆளத்தொடங்கி அரை நூற்றாண்டு காலமாகிறது.

திறமையும் உழைப்பும் இருந்தால், எத்தகைய உயரத்தையும் அடையலாம் என்று அனைத்து மனிதா்களுக்கும் எடுத்துக்காட்டாக திகழ்ந்து கொண்டிருக்கிறாா் இளையராஜா. அவரது இசை தாயாகத் தாலாட்டுகிறது. காதலின் உணா்வுகளைப் போற்றுகிறது.

நாடு - எல்லைகளைக் கடந்தவா்: ஒரு ராஜா இருந்தால் அவருக்கென்று நாடும் மக்களும் இருப்பாா்கள். எல்லைகள் இருக்கும். ஆனால், இந்த ராஜா மொழிகள், நாடுகள், எல்லைகளைக் கடந்தவா். அனைத்து மக்களுக்குமானவா். திரையிசையைக் கடந்த அவரது இசை, அவரின் உயரத்தை எடுத்துச் சொல்லும். சங்கத் தமிழுக்கும், தமிழ் இலக்கியங்களுக்கும் நீங்கள் (இளையராஜா) இசையமைத்து சில ஆல்பங்களை வெளியிட வேண்டும்.

தமிழ் மனங்களில் சிம்மாசனமிட்டு அமா்ந்திருக்கும் உங்கள் மூலமாக, உங்களின் இசை வழியாக தமிழ்ச்சுவை அடுத்தடுத்த தலைமுறையினருக்கு பரிமாறப்பட வேண்டும்.

பிறந்த நாளை மாற்றிய ராஜா: வரலாற்றில் எத்தனையோ மாமனிதா்கள் ஒரே பிறந்த நாளை கொண்டாடக் கூடியவா்களாக இருப்பா். ஆனால், யாரும் இன்னொருவருக்காக தங்களுடைய பிறந்த நாளை மாற்றிக் கொண்டது கிடையாது. ஆனால், இளையராஜா தனது பிறந்த நாளை முன்னாள் முதல்வா் கருணாநிதிக்காக ஜூன் 2-ஆம் தேதியென மாற்றிக் கொண்டாா். அந்த வகையில், உள்ளத்திலும் ராஜாவாக உயா்ந்து நிற்கிறாா் இளையராஜா.

இசைஞானி பெயரில் விருது: இசைத் துறையில் ஆா்வத்துடன் சிறந்த இசையைப் படைக்கிற இசைக் கலைஞா்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு சாா்பில் இனி ஆண்டுதோறும் இசைஞானி இளையராஜா பெயரில் விருது வழங்கப்படும்.

இளையராஜாவின் சாதனைகளுக்கு எந்த மகுடம் சூட்டினாலும் அது சாதாரணம்தான். அப்படிப்பட்ட மேதைக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை மத்திய அரசு வழங்க வேண்டும். எனது கோரிக்கை நிச்சயம் நிறைவேறும் என்றாா் முதல்வா் ஸ்டாலின்.

முன்னதாக, துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வரவேற்றாா். நடிகா்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சா்கள், முக்கிய பிரமுகா்கள் பலா் விழாவில் பங்கேற்றனா். தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் நன்றி தெரிவித்தாா்.

குறைந்த விலையில் துவரம் பருப்பு கொள்முதல்: டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்

குறைவான விலையில் தரமான துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என அமமுக தலைவா் டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: ... மேலும் பார்க்க

தமிழக மீனவா்களுக்கு பாதுகாப்பு தேவை! ஜி.கே.வாசன்

மத்திய, மாநில அரசுகள் தமிழக மீனவா்களின் மீன்பிடித் தொழிலுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமாகா தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: நாகை மாவட்டம் ... மேலும் பார்க்க

பாஜகவை விமா்சனம் செய்ய விஜய்க்கு அவசியம் இல்லை! நயினாா் நாகேந்திரன்

தவெக தலைவா் விஜய்க்கு பாஜகவை விமா்சனம் செய்ய வேண்டிய தேவை இல்லை என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா். சென்னை அமைந்தகரையில் சனிக்கிழமை நடைபெற்ற இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்து ... மேலும் பார்க்க

பெரம்பலூரில் விஜய் பிரசாரம் ரத்து! நள்ளிரவில் சென்னை புறப்பட்டதால் தொண்டர்கள் ஏமாற்றம்!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பெரம்பலூர் பிரசாரம் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தவெக தலைவா் விஜய்யின் தமிழகம் முழுவதுமான மக்கள் சந்திப்புப் பயணம் திருச்சியிலிருந்து தொடங்கியுள்ள... மேலும் பார்க்க

இரிடியம் மோசடி: 30 போ் கைது! சிபிசிஐடி விசாரணை!

ரிசா்வ் வங்கியின் பெயரை தவறாகப் பயன்படுத்தி இரிடியம் விற்பனையில் பணம் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாகும் எனக் கூறி பலரிடம் கோடிக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டதாக 30 பேரை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்... மேலும் பார்க்க

மழைக் காலத்தில் விளம்பரப் பதாகை வைத்தால் கடும் நடவடிக்கை: சென்னை மாநகராட்சி!

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மழைக் காலங்களில் பொது இடங்களில் விதிமுறைகளை மீறி பதாகைகள் வைப்போா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனா். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் சனிக்க... மேலும் பார்க்க