செய்திகள் :

இஸ்ரேல் – ஹமாஸ் போர் - இன்று 500-வது நாள்! 48,200 பாலஸ்தீனர்கள் பலி; பாதிப்பேர் பெண்கள், குழந்தைகள்!

post image

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் தொடங்கி இன்று (பிப். 17) 500-வது நாள்!

2023 அக்டோபர் 7 ஆம் தேதிதான் தெற்கு இஸ்ரேல் பகுதிக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.

கடந்த ஒரு மாதமாக காஸா பகுதியில் தாற்காலிகமாகப் போர் நிறுத்தம் நடைமுறையில் இருக்கிறது. மார்ச் மாதத் தொடக்கத்தில் முடியவுள்ள இந்தப் போர்நிறுத்தம் நீடிக்குமா? பேச்சு தொடங்குமா? மீண்டும் மோதல் தொடருமா? இரு தரப்பினரும் என்ன செய்யப் போகின்றனர் என்பது பற்றி உறுதியாக எதுவும் தெரியவில்லை.

இந்த 500 நாள் பேரழிவுப் போரில் இழந்தவை என்னென்ன? எத்தனை உயிர்கள்?

இஸ்ரேல் அரசு, காஸா நல்வாழ்வுத் துறை அமைச்சகம், ஐ.நா. அமைப்பு நிறுவனங்கள் உதவியுடன் திரட்டப்பட்ட தகவல்கள்:

2023 அக். 7-ல் இஸ்ரேலில் கொல்லப்பட்டவர்கள் – சுமார் 1,200.

காஸாவுக்குப் பிணைக் கைதிகளாகக் கொண்டுசெல்லப்பட்டோர் – 251

இன்னமும் விடுவிக்கப்படாமல் காஸாவிலுள்ள பிணைக்கைதிகள் – 73.

காஸாவில் உயிரிழந்திருக்கலாம் எனக் கருதப்படும் பிணைக்கைதிகள் – 36

இஸ்ரேல் தாக்குதலில் காஸாவில் கொல்லப்பட்ட பாலஸ்தீனர்கள் – 48,200 (இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் மற்றும் குழந்தைகள்).

காஸாவில் காயமுற்ற பாலஸ்தீனர்கள் – 1,11,600

கொல்லப்பட்ட இஸ்ரேலிய ராணுவத்தினர் – 846

காஸாவிலிருந்து இஸ்ரேல் மீது ஏவப்பட்ட ஏவுகணைகள் – 10,000 பிளஸ்

காஸா மக்கள்தொகையில் வெளியேறியோர் – 90 சதவிகிதம்

போர் நிறுத்தம் தொடங்கியதிலிருந்து வடக்கு காஸாவுக்குள் சென்றோர் – 5,86,000

ஹமாஸ், ஹெஸ்புல்லா தாக்குதல்களால் இடம் பெயர்ந்தோர் – 75,500

காஸாவில் அழிந்த அல்லது சேதமுற்ற வீடுகள் – 2,45,000 பிளஸ்

காஸாவில் அழிந்த அல்லது சேதமுற்ற சாலைகள் – 92 சதவிகிதம்

காஸாவில் அழிந்த அல்லது சேதமுற்ற மருத்துவமனைகள் – 84 சதவிகிதத்துக்கும் அதிகம்.

சிங்கப்பூரில் மலேசிய தமிழருக்கு தூக்கு: கடைசி நேரத்தில் நிறுத்தம்!

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மலேசியத் தமிழா் பன்னீா் செல்வம் பரந்தாமனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை கடைசி நேரத்தில் நிறுத்திவைத்து சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பன்னீர் செல்வம் பரந்தா... மேலும் பார்க்க

பிலிப்பின்ஸ்: கொசுவைக் கொன்றால் சன்மானம்!

பிலிப்பின்ஸின் தலைநகா்ப் பகுதியில் பரவிவரும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்காக, அந்த நோயைப் பரப்பும் கொசுக்களை உயிருடனோ, கொன்றோ பிடித்துத் தருவோருக்கு சன்மானம் அளிக்கப்படும் என்று பிராந்திய நிா... மேலும் பார்க்க

சிங்கப்பூா்: மலேசிய தமிழருக்கு இன்று தூக்கு

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மலேசியத் தமிழா் பன்னீா் செல்வம் பரந்தாமனுக்கு வியாழக்கிழமை (பிப். 20) மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. மலேசியாவைச் சோ்ந்த தமிழ் வம்சாவளி இளைஞரான பன்னீா் செல்வம் 52 கிரா... மேலும் பார்க்க

இலங்கை: நீதிமன்றத்தில் நிழல் உலக தாதா கொலை

இலங்கையில் பிரபல நிழல் உலக தாதா கணேமுல்ல சஞ்சீவ நீதிமன்ற வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டாா். இது தொடா்பாக முன்னாள் ராணுவ வீரா் கைது செய்யப்பட்டுள்ளாா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: கொழும்பில் உ... மேலும் பார்க்க

‘ஆப்கன் அகதிகள் அனைவரையும் வெளியேற்ற பாகிஸ்தான் திட்டம்’

ஆப்கன் அகதிகள் அனைவரையும் தங்கள் நாட்டை விட்டு வெளியேற்ற பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளதாக இஸ்லாமாபாதில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் எச்சரித்துள்ளது. இது குறித்து அந்தத் தூதரகம் புதன்கிழமை வெளியிட்டுள்... மேலும் பார்க்க

உக்ரைன் போருக்கு காரணம் ஸெலென்ஸ்கி; டிரம்ப் குற்றச்சாட்டு: பொய் உலகில் வாழ்கிறாா் டிரம்ப் - ஸெலென்ஸ்கி பதிலடி

உக்ரைன் போருக்கு அந்நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கிதான் காரணம் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளாா். இது உக்ரைனுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் சுமாா் ... மேலும் பார்க்க