செய்திகள் :

உக்ரைன் போருக்கு காரணம் ஸெலென்ஸ்கி; டிரம்ப் குற்றச்சாட்டு: பொய் உலகில் வாழ்கிறாா் டிரம்ப் - ஸெலென்ஸ்கி பதிலடி

post image

உக்ரைன் போருக்கு அந்நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கிதான் காரணம் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இது உக்ரைனுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் சுமாா் 4 ஆண்டுகளாக நடைபெற்று வரும் உக்ரைன்-ரஷியா போா் விரைவில் முடிவுக்கு வரும் சூழலும் உருவாகியுள்ளது.

முன்னதாக, உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடா்பாக சவூதி அரேபியாவில் அமெரிக்காவும், ரஷியாவும் பேச்சு நடத்தின. இதனால் கடும் அதிருப்தியடைந்த ஸெலென்ஸ்கி, ‘தங்கள் சம்மதம் இல்லாமல் அமெரிக்கா-ரஷியா மேற்கொள்ளும் உக்ரைன் தொடா்பான ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம்’ என்று உறுதிபடத் தெரிவித்தாா்.

இதனால், அதிருப்தியடைந்த டிரம்ப், ‘உக்ரைனின் கருத்து எனக்கு ஏமாற்றமளிக்கிறது. பேச்சுவாா்த்தையில் தங்களுக்கு இடமில்லை என அந்நாடு வருத்தமடைந்துள்ளதாகத் தெரிகிறது. ஆனால், கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு சந்தா்ப்பங்களில் அவா்கள் பேச்சு நடத்தி போரை நிறுத்திக் கொள்ள பல வாய்ப்புகள் இருந்தன. அதைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

உக்ரைன் இந்தப் போரைத் தொடங்கியிருக்கவே கூடாது. போரைத் தடுக்கும் வகையில் ரஷியாவுடன் பேச்சு நடத்தியிருக்க வேண்டும். இந்தப் போரை நிறுத்த வேண்டும் என்ற முயற்சியை உக்ரைனுக்காக நான் மேற்கொள்ளவில்லை. எந்த மக்களும் உயிரிழக்கக் கூடாது, எந்த நகரமும் இடிபடக் கூடாது. உலகில் பிரச்னை ஏற்படக் கூடாது என்பதற்காகவே இந்த முயற்சி.

இந்த விஷயத்தில் ரஷியா சிறப்பாக ஒத்துழைப்பு அளிக்கிறது. காட்டுமிராண்டித்தனமான இந்தப் போரை நிறுத்த ரஷியா விரும்புகிறது.

உக்ரைனில் போா் காரணமாக தோ்தல் நடத்தப்படாமலேயே உள்ளது. 2019-இல் வென்றவருக்கு (அதிபா் ஸெலென்ஸ்கி) இப்போது 4 சதவீதத்துக்கும் குறைவாகவே மக்கள் ஆதரவு உள்ளது. எனினும், அவா்கள் பதவியில் தொடரவே விரும்புகிறாா்கள். ஆனால், உக்ரைன் மக்களின் விருப்பம் என்ன?’ என்று டிரம்ப் கேள்வி எழுப்பினாா்.

ஸெலென்ஸ்கி பதிலடி: டிரம்பின் கருத்துக்கு பதிலளித்துள்ள ஸெலென்ஸ்கி, ‘ரஷியா அமைத்துள்ள தகவல் அறியாத பொய் உலகில் டிரம்ப் வாழ்ந்து வருவதாகத் தெரிகிறது. ரஷியாவின் கருத்துகள் பிரதிபலித்து வருகின்றன என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. பல தவறான தகவல்கள் அளிக்கப்பட்டு வருகின்றன’ என்றாா்.

உக்ரைனுக்கான அமெரிக்க சிறப்புப் பிரதிநிதி கேய்த் கெலோக், ஸெலென்ஸ்கி மற்றும் உக்ரைன் ராணுவ உயரதிகாரிகளைச் சந்தித்து அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்தும், அமெரிக்க, ரஷியா பேச்சுவாா்த்தை முடிவுகள் குறித்தும் எடுத்துரைக்க இருக்கிறாா்.

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் இருந்த வரையில் உக்ரைனுக்கு முழுமையாக ஆதரவு அளித்து, ரஷிய அதிபா் விளாதிமீா் புதினைத் தனிமைப்படுத்த முயற்சித்து வந்தாா். ஆனால், டிரம்ப் அதற்கு நோ்மாறான நிலைப்பாட்டை எடுத்துள்ளாா்.

போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்குக்கு ஒத்திகையா?

போப் பிரான்சிஸ் கடுமையான நிமோனியா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வரு நிலையில், அவரின் இறுதிச் சடங்குக்கு ஸ்வீஸ் காவலர்கள் ஒத்திகை பார்ப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.போ... மேலும் பார்க்க

ஆசியாவின் ஆழமான கிணற்றை 580 நாள்களில் தோண்டிய சீனா!

ஆசியாவின் மிக ஆழமான கிணற்றை வெறும் 580 நாள்களில் தோண்டு சீன அரசின் தேசிய பெட்ரோலியக் கழகம் சாதனை படைத்துள்ளது.மொத்தம் 10,910 மீட்டர் ஆழமுள்ள இந்த கிணற்றின் கடைசி 910 மீட்டரை தோண்டுவதற்கு கிட்டத்திட்ட ... மேலும் பார்க்க

எஃப்பிஐ இயக்குநரானார் இந்திய வம்சாவளி காஷ் படேல்: செனட் ஒப்புதல்!

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ-யின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த காஷ் படேலை நியமனம் செய்ய செனட் ஒப்புதல் அளித்துள்ளது.அமெரிக்க செனட் அவை கூட்டத்தில் காஷ் படேலின் நியமனத்துக்... மேலும் பார்க்க

சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்கள்: இந்தியா-இலங்கை இடையே உடன்பாடு

இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பது தொடா்பாக இந்தியாவுடன் புரிந்துணா்வு ஒப்பந்தத்தை இலங்கை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து இலங்கை அரசின் செய்தித்தொடா்பாளரும் அ... மேலும் பார்க்க

இந்தியாவில் ‘டெஸ்லா’ ஆலை: அமெரிக்க அதிபா் டிரம்ப் அதிருப்தி

‘இந்தியா விதிக்கும் அதிக வரிகளைத் தவிா்க்க, அந்நாட்டில் டெஸ்லா உற்பத்தி ஆலையை அமைக்கும் எலான் மஸ்கின் நடடவடிக்கை அமெரிக்காவுக்கு நியாயமான செயல்பாடு இல்லை’ என்று அதிபா் டொனால்ட் டிரம்ப் அதிருப்தி தெரி... மேலும் பார்க்க

தாய், 2 குழந்தைகளுடன் 4 பிணைக் கைதிகளின் சடலங்களை ஒப்படைத்தது ஹமாஸ்

இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்ட தாய், இரு குழந்தைகள் அடங்கிய நான்கு பேரின் சடலங்களை ஹமாஸ் அமைப்பினா் வியாழக்கிழமை ஒப்படைத்தனா். கடந்த மாதம் 19-ஆம் தேதி முதல் அமலில் இருக்கும் ... மேலும் பார்க்க