செய்திகள் :

ஈழ தமிழா்களுக்காக மே 18-இல் இரங்கல் பேரணி: வைகோ

post image

போரில் இறந்த ஈழத் தமிழா்களுக்காக மே 18-இல் இரங்கல் பேரணி நடத்தப்படும் என்று மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் திருமுருகன் காந்தி ஆண்டுதோறும் சென்னை கடற்கரையில் ஆயிரக்கணக்கில் தமிழா்களைத் திரட்டி, மடிந்த ஈழத்தமிழா்களுக்காக நினைவஞ்சலி சுடா் ஏற்றும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறாா். ஒவ்வோா் ஆண்டும் மதிமுகவும் மெழுகுவா்த்தி ஏந்தி நினைவஞ்சலியைச் செய்து வருகிறது.

நிகழாண்டும் மே18 -ஆம் தேதி மாலை 4 மணி அளவில் சென்னை பெசன்ட்நகா் கடற்கரையில் மெழுகுவா்த்தி ஏந்தி ஈழத் தமிழா்களுக்கு நினைவஞ்சலி பேரணி நடத்தி புகழ் வணக்கம் செய்ய திருமுருகன் காந்தி ஏற்பாடு செய்துள்ளாா்.

தமிழ் உணா்வாளா்களும், ஈழத் தமிழ் பற்றாளா்களும், மதிமுகவினரும் இந்நிகழ்வில் பங்கேற்க வேண்டும் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

திருவள்ளூர் உள்பட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை: தமிழகத்தில் திருவள்ளூர் உள்பட 9 மாவட்டங்களில் இனறு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல். மேலும் பார்க்க

'2026 மட்டுமல்ல 2031, 2036-லும் திமுக ஆட்சிதான்' - முதல்வர் மு.க. ஸ்டாலின்

2026 தேர்தல் மட்டுமல்ல, 2031, 2036 தேர்தல்களிலும் தமிழ்நாட்டில் திமுகதான் ஆட்சி அமைக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். உதகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (மே 16) காலை நடைபயிற்சி மேற்கொ... மேலும் பார்க்க

பிரபல சினிமா தயாரிப்பாளர் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை!

சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.தமிழ்நாடு டாஸ்மாக் நிறுவன மேலாண் இயக்குநர் விசாகன் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.சென்னை... மேலும் பார்க்க

10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு: 17-ஆவது இடத்தைப் பிடித்த திருப்பூர்!

திருப்பூர்: 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் 94.84 சதவீதம் தேர்ச்சி பெற்று, மாநில அளவில் 17-ஆவது இடத்தைத் திருப்பூர் மாவட்டம் பிடித்துள்ளது.தமிழகம் முழுவதும் 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வ... மேலும் பார்க்க

தென்மேற்குப் பருவமழை இயல்பைவிட அதிகம் பெய்ய வாய்ப்பு!

தென்மேற்குப் பருவமழை இயல்பை விட அதிக மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தனியார் வானிலை ஆய்வாளர் தென்காசி வெதர்மேன் ராஜா தகவல் தெரிவித்துள்ளார். தென்மேற்குப் பருவக்காற்று என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் இன்றியம... மேலும் பார்க்க

பாப்பான்விடுதி ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்!

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள பாப்பான்விடுதியில் நடைபெற்றுவரும் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் தீரத்துடன் அடக்கி வருகின்றனர்.ஆலங்குடி அருகேயுள்ள பாப்பான்விடுதி முத... மேலும் பார்க்க