செய்திகள் :

உ.பி: பசு வதை வழக்கில் குற்றவாளி சுட்டுப்பிடிப்பு!

post image

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சட்டவிரோதமாக பசு வதை செய்ததாக சந்தேகிக்கப்பட்ட நபரை காவல் துறையினர் சுட்டுப்பிடித்துள்ளனர்.

சாஹரன்பூர் மாவட்டத்தின் தில்பாரா பகுதியில் நேற்று (மார்ச் 17) இரவு நானோட்டா காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பதிவு செய்யப்படாத இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை நோக்கி காவல் துறையினர் வாகனத்தை நிறுத்துமாறு சைகை செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் வாகனத்தை நிறுத்தாமல் தப்பிச் செல்ல முயன்றபோது அவர்களது வாகனம் சறுக்கி இருவரும் கீழே விழுந்ததுள்ளனர். பின்னர், அவர்களை விரட்டிய காவலர்களிடம் இருந்து தப்பிக்க போலீஸாரை நோக்கி அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி கொல்ல முயன்றதாகக்கூறப்படுகின்றது.

இதையும் படிக்க: 2024-ல் இந்திய எல்லையில் 294 டிரோன்கள் பறிமுதல்: மத்திய அரசு தகவல்

இதற்கு காவல் துறையினர் நடத்திய பதில் துப்பாக்கிச் சூட்டில் அவர்களில் ஒருவரான ஷாம்லி பகுதியைச் சேர்ந்த ஜாவெத் என்பவர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்து அவர் கீழே விழுந்துள்ளார்.

அவர் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டு தற்போது காவல் துறையினர் கட்டுப்பாட்டில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். மேலும், இருளில் தப்பியோடிய அவரது கூட்டாளியான முஹம்மது ஃபுர்கான் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஜாவெத் மீது ஏற்கனவே கேங்ஸ்டர் வழக்கு மற்றும் சட்டவிரோத பசு வதை வழக்கு ஆகியவைப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடமிருந்து ஒரு நாட்டு துப்பாக்கி, துப்பாக்கிக் குண்டுகள், பதிவு செய்யப்படாத இருசக்கர வாகனம் மற்றும் கால்நடைகள் பலியிட பயன்படுத்தும் ஆயுதங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளாதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணையில் படகு கவிழ்ந்து 3 குழந்தைகள் உள்பட 7 பேர் மாயம்!

மத்தியப் பிரதேசத்தின் ஷிவப்புரி மாவட்டத்திலுள்ள அணையில் படகு கவிழ்ந்ததில் 4 குழந்தைகள் மற்றும் 3 பெண்கள் மாயமாகியுள்ளனர். மாட்டாடிலா அணைப்பகுதியிலுள்ள தீவில் அமைந்துள்ள சித்தா பாபா கோயிலுக்கு இன்று (ம... மேலும் பார்க்க

12 ஆண்டுகளுக்கு முன் சிறுமியை கட்டாயத் திருமணம் செய்தவர் கைது!

புது தில்லியில் கடந்த 2013 ஆம் ஆண்டு சிறுமியை கட்டாயத் திருமணம் செய்தவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தில்லியின் புறநகர் பகுதியைச் சேர்ந்தவர் அனில் (வயது 38), இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு 13 வயது ச... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 3 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் 3 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர். சுக்மா மாவட்டத்தில் இன்று (மார்ச் 18) மட்காம் எர்ரா பாபு (வயது 26), சோடி தேவா (35) மற்றும் மட்காம் ஹத்மா (4... மேலும் பார்க்க

பலூசிஸ்தான் பல்கலைக்கழகம் காலவரையின்றி மூடல்!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் பல்கலைக்கழகம் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பலூசிஸ்தான் மாகாணத்தின் பல்கலைக்கழகம் காலவரையின்றி மூடப்படுவதாக அந்நாட்டு அதிகாரிகள் இன்று (மார்ச் 18) தெரிவித்து... மேலும் பார்க்க

2024-ல் பசிபிக் பெருங்கடலில் மாயமான மீனவர் உயிருடன் மீட்பு!

கடந்த 2024 ஆம் ஆண்டு பசிபிக் பெருங்கடலில் மாயமான பெரு நாட்டு மீனவர் தற்போது (2025) உயிருடன் மீட்கப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். தென் அமெரிக்காவிலுள்ள பெரு நாட்டைச் சேர்ந்த மாக... மேலும் பார்க்க

மீனவர்கள் கைது: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு மு... மேலும் பார்க்க